Showing posts with label சுட்ட பழம். Show all posts
Showing posts with label சுட்ட பழம். Show all posts

Monday, April 30, 2007

கெத்துதான் எங்க சொத்து!!!

வாழ்க்கை முழுக்க ஒரே டென்ஷன் மயமா இருக்கா? கொஞ்ச நேரம் சிரிச்சு வெச்சுட்டு போய் திரும்ப டென்ஷன் ஆகுங்க...

கொல்ட்டியின் (வெட்டியா, இல்லை கொல்ட்டியா? பேரு சரியா ஞாபகம் இல்லை :-)) ஆர்குட் அலம்பல்களின் இரண்டாம் பாகம் இது. எப்படியெல்லாம் நம்ம பசங்க ஆர்குட்ல பொண்ணுங்களை ஃபிரண்ட் பிடிக்கரானுங்கனு பாருங்க...

1.
nee alaga iruukanu nenikala anna
ahtuellaam nadathrumu payama irkku
hi how r u?
just fun crazy introdution.
HOW IS IT.

மானங் கெட்ட நாயே, நீ கெட்ட கேட்டுக்கு மாதவன் டயலாகா?! பயமா இருந்தா பேன்ட்-ல ஒன்னுக்கு அடி... இதுல ஹவ் இஸ் இட் வேற? நல்லா இல்லைன்னு சொன்னா தூக்கு மாட்டிக்க போறியா?!

2.
had to tell you this....you just remind of somebody, whom i thought i should forget.....but still i felt happy lookin at your face. If you understand tamil....

Nallathor veenai saeithaen athai nalamkaeda puzhithiyil aerivathundo?

நாயீ, எதுக்கெல்லாம் பாரதியார் பாட்டை இழுக்குது பாருங்களேன். தமிழ் பற்று இருக்கற நாலு பேரு பார்த்தா ரத்தக் கண்ணீர் விடுவாங்க. இந்த ஸ்கிரேப்பைப் பார்த்தா பாரதி படத்துல சாயஜி ஷிண்டே போன கழுதை கூட விக்கி விக்கி சாகும்.

3.
hi
This is Karthik from chennai adayar workng in sutherland.
If u like my pic just scrap me. lets hav a nice time
add me in yahoo messenger.
guy22foru@yahoo.com
i come with cam from 8.30 to 9.30am daily.
lets hav a nice time
scrap me. i giv u my mobile number. nama meet panalam. vanga

8.30 to 9.30 கேமரா புடிப்பேன்னா அதுக்கப்புறம் விளக்கு புடிப்பியா? உன்னைய விளக்குமாத்தால அடிச்சு விளக்கு (கேமரா?) புடிக்கற கைக்கு விலங்கு மாட்டி, மகளிர் காவல் நிலையத்துல அண்டர் வேர்/அரணாக்கயிறோடா உக்கார வெச்சு ரிவிட் எடுக்கணும். படுவா, வந்துட்டான்...

4.
hello shaline tell me about ur climate there

கிளைமேட் தெரிஞ்சா என்ன ராக்கெட் விடப் போறியா?

5.
hai, i've not yet put a scrap tu u.
first one

இவரு பெரிய கணித மேதையாத்தான் இருக்கணும். இல்லேன்னா, நம்ம தமிழ் நாட்டுல கேப்டனைத் தவிரா யாரால இப்படி புள்ளி விவரம் தர முடியும்? இதுக்கென்ன கேக் வெட்டி, விழா கொண்டாட சொல்லறியா? ச்சீ, ஓடிப் போ...

6.
can i have this kutti pisasu as my friend???????????????????????????

தம்பி, பிசாசுகூட ஃபிரெண்டு ஆகணும்னா சுடுகாட்டுக்கு போ, இங்க ஏன் வந்து மொக்க போடுற? பெரிய குடுகுடுப்பைக்காரானா இருப்பான் போலிருக்கே?

7.
Hi Dear friend,

This is Raghu from chennai working as a Soft eng.

i like to have friendship with u.

my mail id : raghu0107@gmail.com

i am expecting ur reply

take care

- Raghu

டேய், இதென்ன ஃபிரெண்ட்ஷிப் ரிக்வெஸ்டா? இல்ல, லீவ் லெட்டரா??
எடுக்கறது பிச்சை... இதிலென்ன ஃபார்மல் லெட்டர்?


8.
hi vaisu,

how r u.how is ging u r life da.if u don mine. can v be a frnds.
reply as soon as
takecare
bye

இது வரைக்கும் நல்லாத்தான் இருந்திருக்கும். நீ ஃபிரெண்ட் ஆனதுக்கப்புறந்தான் நாசமாப் போகும். இதுல ,"if u don mine".. 'mine'க்கும் ,'mind'க்கும் வித்தியாசம் தெரியாதா மண்ணாங்கட்டி மண்டையா?

9.
r u BCCCCCCCCCCCCCCCCCCCC

ஏன், BC -ல இருந்தா அர்ஜீன் சிங்கிட்ட சொல்லி சீட் வாங்கித் தரப்போறியா?

10.
ur name s nice mrs.mosquito bite crazzyyyy.....

ஏன்டா, "கொசுக்கடி"ங்கறது நல்ல பேரா? வேணும்னா, உன் குழந்தைக்கு வைச்சுக்கவேன்???


Courtesy: Gethu thaan aambalaiku sothu (Community)

Sunday, April 29, 2007

செம ரகளை!!!

பொதுவாகவே நடுவர்கள் முகத்தில் எந்த சலனமும் இல்லாமல் அமைதியாக கவனிப்பார்கள். இங்கு சௌம்யாவிடம் இருக்கும் துள்ளல் கலந்த உற்சாகம் அரங்கத்தில் இருக்கும் அனைவரையும் ஆர்ப்பரிக்க வைத்திருக்கிறது. மெகா சீரியலுக்கு மத்தியில் ஒரு நல்ல நிகழ்ச்சி!!!

பாடல் வரிகளுக்கு அர்த்தம் தெரிந்திருந்தால் இந்த பாட்டை தேர்வு செய்திருப்பாரோ???

Tuesday, August 01, 2006

பிருந்தாவனமும் நொந்த குமாரனும்...

oops

Oops! That was reverse eh?

மோசம் போய்ட்டேனேய்யா என்று உங்களை அலர வைக்கும் விஷயம் இது....

ஒரு ஃபிகரும் உங்களை பார்க்காத காரணத்தால் அல்லது நீங்கள் பார்க்கும் பாவைகளுகெல்லாம் ஆள் அமைதல், நிச்சயதார்த்தம், கல்யாணம் என ஆவதால், நான் கட்டை பிரம்மச்சாரி, அனுமார் தான் என் கடவுள்ன்னு 27 வருஷமா ஏமாந்துட்டு இருந்தவங்க லிஸ்ட்ல நீங்களும் இருக்கீங்களா? உங்களை (என்னையும், ஹிஹிஹி...) அனுமார் கைவிட்டுட்டார்... அவருக்கும் கல்யாணம் ஆயிடுச்சாம்.

மேலதிக விவரங்களுக்கு...

http://members.tripod.com/panch_kasi/id21.html

இந்த உலகத்தில் நம் தோல்விகளை மறைக்க எந்த கடவுளுமே இல்லையா? இது என்ன இளைஞர்களுக்கு வந்த சோதனை... இனிமேல் நாங்கள் எதை சொல்லி தப்பிப்பது?

Friday, July 28, 2006

புரபொஷனல் டாக்ஸ்: நிதி அமைச்சரும் சிவாஜியும்

முந்தின பதிவு எழுதும் போது கொஞ்சம் சூடா இருந்தேன். என்னை சாந்தி (!) அடைய வைக்கும் மாதிரியான மெயில் வந்தது. ஓவர் டூ வீரபாண்டிய கட்டபொம்மன் சிவாஜி, சாப்ட்வேர் என்ஜினியர், பாஞ்சாலங்குறிச்சி (வேளாங்கண்ணி இருக்கும் பொழுது, ம்ம்ம்... இருக்கலாம் தப்பில்லை) கன்சல்டிங் இன்கார்ப்பொரேஷன் மற்றும் நிதி அமைச்சர் பி.சிதம்பரம்...

பி.சிதம்பரம்: நீர் தான் சாலரீடு எம்ப்ளாயீ'ஓஓ....

சிவாஜி: நீர் தான் பி.சிதம்பரமோ...

பி.சிதம்பரம்: இதுவரை வருடம் ரூபாய் 2500 செலுத்தி வந்த புரபொஷனல் டாக்ஸ் இனிமேல் வருடம் ரூபாய் 7500, அதாவது மாதம் ரூபாய் 625 வரி அரசுக்கு செலுத்த வேண்டும்.....

சிவாஜி: வரி, வட்டி, கிஸ்தி... யாரை கேட்கிறாய் வரி... எதற்க்கு கேட்கிறாய் வரி.. பக் பொழிகிறது.. ரெவின்யூ விளைகிறது.. உனக்கேன் கட்ட வேண்டும் வரி. பிராஜெக்ட் குவிகிறது வருமனம் வருகிறது உனக்கேன் கட்ட வேண்டும் வட்டி...

எங்களோடு சப்போர்ட்டுக்கு வந்தாயா?
பக் ஃபிக்ஸ் பண்ணினாயா?
டாக்குமென்டேஷன் செய்தாயா? அல்லது,
கொஞ்சி விளையாடும் பெஞ்சில் உள்ளவர்களுக்கு ட்ரெயினிங் தான் கொடுத்தயா? கிளயெண்ட்டா? பிராஜெக்ட் மானேஜரா? மானங்கெட்டவனே...

Tuesday, July 25, 2006

புதிர்

kr1

ஆப்பிரிக்கா காட்டில் ஒரு நாள் உங்களை தலை கீழாக மேலே உள்ள படத்தில் இருப்பது போல் கட்டி வைத்துள்ளார்கள். மெழுகுவர்த்தி மெதுவாக உங்களை கட்டியிருக்கும் கயிற்றை எரித்துக் கொண்டுள்ளது. அதே சமயத்தில் 3 நாள் சாப்பிடாத சிங்கம் உங்களுக்காக பசியுடன் காத்திருக்கிறது. உங்களை காப்பாற்ற ஒருவரும் அருகில் இல்லை. உங்களது உயிர் இப்போது அந்த கயிற்றிடம் உள்ளது.

நீங்கள் எப்படியாவது அந்த சிங்கத்திடம் பேச்சுவார்த்தை நடத்தி மெழுகுவர்த்தியை அணைக்கச் செய்ய வேண்டும். நீங்கள் என்ன செய்வீர்கள்?

விடை:

2

Monday, July 24, 2006

மப்பு சுல்தான்

சாப்ட்வேர் குஞ்சுகளுக்கு லொள்ளு மற்றும் வேகம் அதிகம், அதிலும் கட்டுடைப்பு என்றால் முன்னாடி நிற்பார்கள். TIP சுல்தான் என ஒருவரை Microsoft Office tip குடுக்க அனுப்பினால் அவர் அடுத்த நாள் திரும்பி வரும் முன்னர் மப்பு சுல்தானை இறக்கி விட்டிருந்தார்கள் அவருக்கு போட்டியாக...

image002

யாதுமாகி நின்றாய் - 1

broken-heart-2

மண்டைக்குள் எப்பொழுதும் குதிரைக் குளம்பின் சத்தம் வந்து கொண்டிருக்கிறதா? கண்ணை மூடினால் கடைசியில் நீங்கள் விளிம்பில் தொங்கிக் கொண்டு யாரவது வந்து தூக்கி விடுவார்களா என படுக்கையிலிருந்து கீழே விழுந்து கொண்டிருக்கிறீர்களா? இன்னைக்கு ட்ரீட் என்னுடையது உங்களுக்கு என்ன வேண்டும் என்பதை நீங்களே சொல்லுங்கள் என நண்பர்கள் யாரவது சொன்னால் என் இதயம் கவர்ந்தவளுடன் ஏரிக் கரையில், நிலவு வெளிச்சத்தில் என சம்பந்தமில்லாமல் உளறுகிறீர்களா? எந்த ஜோடி மரத்தை சுத்தி டூயட் பாடிக் கொண்டிருந்த்தாலும் நாயகனின் முகத்தில் உங்கள் ஃபோட்டோவையும் நாயகி முகத்தில் ஒரு கேள்விக்குறியை மாட்டி டூயட் பாடிக் கொண்டிருக்கிறீர்களா? ஜாதகம் வந்திருக்கு என அம்மா ஃபோனில் சொன்னால் இங்க நான் சாதிக்க (?) வேண்டியது நிறைய இருக்கு, அப்புறம்தான் கல்யாணம் என சாமாளிக்கிறீர்களா? அந்த பெண்ணிடம் ஃபோனில் பேச ஒன்றும் இல்லாமல் அப்புறம் அப்புறம் அப்புறம் ... என 100 தடவை சொல்லிக் கொண்டிருக்கீறீர்களா? அவளிடம் பேச காரணம், மெயில் அனுப்ப காரணம் தேடிக் கொண்டிருகிறீர்களா?

எதோ என்னால் முடிந்த வகையில் உங்களுக்கு உதவ (உபத்திரவம்?) முயலும் முதல் முயற்சி!!!

என் தூக்கமில்லா இரவுகளுக்காக உன்னை சபிக்கலாம் போல இருக்கிறது; உனக்கொரு மகன் பிறப்பான், அவன் என் மகள் பின்னால் பைத்தியமாக சுற்றுவான், இப்போது நான் உன் பின்னால் சுற்றுவதை போல.

ஆனால் நாம் ஏன் அந்த பிஞ்சுகளுக்கு இந்த கொடூரத்தை செய்ய வேண்டும்,
அவர்கள் அண்ணன் தங்கையாக இருந்துவிட்டு போகட்டுமே!!!

இதை யாரிடமாவது சொல்லி உயிரோடு இருந்தால் தயவுசெய்து எனக்கு தெரியப்படுத்துங்கள். இந்த சேவையை தொடர எனக்கு அது மேலும் ஊக்கமளிக்கும் :-)

பின்குறிப்பு:- தலைப்பை தனியாக விளக்க வேண்டியதில்லை என நினைக்கிறேன்.

Thursday, July 20, 2006

ராமன் ஜெர்மானியன்! ராவணன் ரஷ்யன்! -2

ராமன் ஜெர்மானியன்! ராவணன் ரஷ்யன்! -1

இதையே போய் கலைஞரிடம் போய் சொன்னா முரசொலியில் தம்பிக்கு கடிதம் எழுதி உனை எங்க பார்த்தாலும் தோலை உரிச்சி உப்புக் கண்டம் போடுங்க, திராவிட காக்கைக்கு உணவாகட்டும்ன்னு சொல்லுவார். ன்னு சொல்லிட்டே 3வது குலக் கொழுந்து என்ட்ரி குடுத்தது. ராமன் ஆரியன், ஹிட்லர் அவன் வம்சாவழி, அப்போ ராவணன் ஒரு யூதர்!!! மக்கா, நாம 3 பேரும் ஒரு பெரும் உண்மைய கண்டு பிடிச்சிருக்கோம். சாயங்காலம் எல்லோரும் பியர் அடிச்சு கொண்டாடிருவோம் ன்னு அவன் காரியத்துல குறியா இருந்தான்.

பின்னாடியே வந்த ஒரு கப்பி பய, என்னையும் சேர்த்துக்கங்க, நாம இன்னொரு உண்மையையும் கண்டுபுடிச்சிருக்கோமேன்னான். என்னடா உஷார் பண்ணின பியருக்கு பங்கு வந்துருச்சேன்னு 3வது குலக் கொழுந்து கொஞ்சம் யோசித்தது. என்ன சொல்லித் தொலைன்னு வேண்டா வெறுப்பா கேட்டான்.

கலைஞர் அவர் மகனுக்கு ஸ்டாலின்னு பேரு வைக்க காரணம் அவர் ஒரு ரஷ்யர். அவர் கொண்டாடும் ராவணன் ஒரு ஜெர்மனியர், இவங்களெல்லாம் சேர்ந்து எதிர்ப்பது 10 ஜன்பத் சாலையில் இருக்கும் இத்தாலி நாட்டு மக்களின் இந்திய அரசியல் பிரவேசத்தை. இது வரை நீங்கள் இதை ஒரு இந்திய பிரச்சினையாக பார்க்கிறீர்கள், ஆனால் இது ஒரு சர்வ தேச பிரச்சினை. ஐ நா சபை மட்டுமே இதை தலையிட்டு தீர்க்க முடியும். என கப்பி பயல் சொல்லி முடித்தான்.

குலக் கொழுந்து 1: 0 கண்டு பிடிச்சது இந்தியர்கள். ராவணனுக்கு (யூதர்) 10 தலை, தசரதனுக்கு(ஆரியர்+ஜெர்மானியர்) 10 ரதம்... அப்போ எல்லொரும் ஆரியர்கள்.

குலக் கொழுந்து 2: குரங்குக்கும்தான் 10 விரல் இருக்கு, அப்போ அதுவும் ஆரியர்களா?

கொடாக் கண்டன்: ஹரியானா காரங்கதான் உண்மையான் ஆரியர்கள் ஏன்னா hariyana வில ஹ வை எடுத்துப் பாருங்கள், ஆரியன்னு வரும்.

விடாக் கண்டன்: wait wait... அப்போ ஹரியானா காரங்க எல்லாம் குரங்குங்கறியா???

குலக் கொழுந்து 2: சமஸ்கிருதத்துல ஆர்யான்னா ஆசிரியர்ன்னு அர்த்தம். ஆகவே சாஃப்ட்வேர் ஆசாமிகள் எல்லாம் திராவிடர்கள்.

குலக் கொழுந்து 3: இல்லையே , இது சரி வரலையே... உன்னுடைய தியரி சாஃப்ட்வேர் ஆசாமிகள் எல்லாம் ஆரியர்கள் இல்லைன்னுதான் சொல்லுது. திராவிடர்கள் என்பதை ஒத்துக் கொள்ளவே முடியாது.

குலக் கொழுந்து 2: நான் சொல்ல வரதும் கிட்டத்தட்ட அதுதான்... எனக்கு சாஃப்ட்வேர் மக்கள் எல்லாம் குரங்குக இல்லைன்னு நிருபிக்கணும்... என் வீட்டு ஓனர் பொண்னை நாங்கெல்லாம் வரிசையா டாவடிக்கறதால அவர் சாஃப்ட்வேர் மக்கள் எல்லாம் குரங்குன்னு உறுதியா சொல்லிட்டு திரியறார்.

மேனேஜர்; நீங்க ஆரியனா? திராவிடனா? ஜெர்மானியனா? ரஷ்யனா? குரங்கன்னா என்னால சொல்ல முடியாது. ஆனா வெட்டிப்பசங்கன்னு உறுதியா சொல்ல முடியும்.... காலையிலிருந்து எவனும் ஒரு துரும்பையும் அசைக்காம, கேள்வி கேட்டவனே மறந்து போயிட்டான். 3 நாளா இதையே பேசிட்டு, போயி வேலையை பார்க்கறீங்களா, கண்ணுகளா???

ராமன் ஜெர்மானியன்! ராவணன் ரஷ்யன்!

இது 1999 வருடம் நடந்த உண்மை சம்பவம். சாஃப்ட்வேர் குஞ்சுகளை வெட்டித்தனத்தில் மிஞ்ச யாருமே இல்லை என்பதை நிருபித்த நாட்கள் அவை. நான் அந்த உரையாடலின் போது அந்த இடத்தில் இல்லாவிட்டாலும் இதுவரை இதற்க்கு யாரும் காப்பிரைட் கேட்காததால் இதை நான் வலையேற்றுகிறேன். இதில் வரும் கதாபாத்திரங்களை தற்போதைய வலை பதிவர்களுடன் நீங்கள் ஒப்பீடு செய்து அவரா இவர்? இவரா அவர்? என கேட்க வந்துவிடாதீர்கள்.

Who or what is Maithili, in context of Indian literature?

இதுதானப்பா கேள்வி... தெரிஞ்சா சொல்லணும் இல்லைன்னா தெரியலைன்னு நடையைக் கட்ட வேண்டியதுதானே. கேள்வி கேட்டவனுக்கு சொந்தமா சூனியம் வைச்சது தெரியவர 3 நாளு ஆச்சு. ஒரு 3 மணி நேரத்துக்கு ஒருத்தன் கிட்டையும் பதில் இல்லை. கேட்டவனும் சரி வேலையை பார்க்கலாம்ன்னு மூழ்கிட்டான். அப்போதுதான் அல்டா விஸ்டா, கூகுல் எல்லாம் வந்த நேரம். ஒரு அறிவுப்பசி அண்ணாசாமி எங்கேயே தேடி அலைந்து வந்து சொன்ன பதில் கீழே:

மைதிலி என்பது மத்திய பீகாரில் பேசப்படும் ஒரு மொழி. அதற்கென தனியே இலக்கியங்கள் உள்ளன. இது ஒரு பழமையான் மொழி. ஏறக்குறை ஹிந்தி மொழி போல இருக்கும்.

அற்புதம் , அருமைன்னு கேள்வி கேட்டவன் நிம்மதியா சாப்பிட்டு வந்து வேலைய பார்க்க ஆரம்பிச்சான். இன்னொரு கொடாக்கண்டன், அவன் தாத்தா பாட்டிக்கெல்லாம் ஃபோன் பண்ணி ஒரு முக்கியமான் தகவலை சொல்லறென்னு ஊரை கூட்டி கீழே இருக்கறதை சொன்னான்.

மைதிலி பிராமணர்கள் அவர்களின் உணவு வகைகளுக்கு பெயர் போனவர்கள்! ராமாயணத்தில் கூட சீதையின் அப்பா ஜனகன் மிதிலையை ஆண்டதாக வருகிறது. அந்த பகுதியில் பேசப்பட்ட மொழிதான் மைதிலி.

அவன் பங்குக்கு உளறிவிட்டு கணிணியில் தலையை புதைத்துக் கொண்டான்.

அதே இடத்தில் ஒரு விடாக் கொண்டன் இதையெல்லாம் கவனித்து விட்டு கொடாக் கண்டனை வாரிவிட இதுதான் நல்ல சந்தர்ப்பம்ன்னு அவன் பங்குக்கு போட்டுத் தாக்கியது கீழே:

நேத்து (1999 ல்)கூட ஒரு காங்கிரஸ் மூத்த தலைவர் அந்நியர் பிரதமராகும் பிரச்சினையில், சீதா பிராட்டி கூட அந்நியர்தான் ஏனெனில், அவர் பிறந்த ஜனகபுரி நேபாளத்தில் இருக்கிறதுன்னு சொல்லியிருக்கிறார், நீ பீகாரை ஜனகர் ஆண்டார்ன்னு சொல்லற, என்ன எங்களுக்கு மண்டையில மசாலா இல்லைன்னு நினைச்சிட்டியா? ன்னு தாளிச்சிட்டான்.

ஆபீஸுக்கு ரொம்ப லேட்டா வந்த குலக் கொழுந்து 1 சோனியா விவகாரத்தைத்தான் காலையில் இருந்து பேசி கொள்வதாக நினைத்துக் கொண்டு அப்படியே இன்னொரு குலக் கொழுந்துவிடம் போய்

இவனுக மசாலா இல்லாத பசங்க, சிவ பெருமான் இருக்கறதா சொல்லற கையிலாயம் சீனாவுல இருக்கு, புத்தர் பிறந்த லும்பினி நேபாளத்துல இருக்கு, குரு நானாக் பொறந்த தல்வாண்டி பாகிஸ்தான்ல இருக்கு, பேச வந்துட்டானுக என முனகினான்.

சின்ன வயதில் காளி கோவிலில் தேங்காய் உடைக்கும் போது கரணம் போட்டும் தேங்காய் பொறுக்க முடியாத ஆத்திரத்தில் நாத்திகனாக மாறிய குலக் கொழுந்து 2 குலக் கொழுந்து 1 வின் வாதத்தில் ஒத்துப் போனாலும் கடவுளை பற்றி பேசியதால்

அட, அதையெல்லாம் என்கிட்ட சொல்லாத. அத்வானி பாகிஸ்தான்ல பொறந்தாரு, அமர்த்யா சென் வங்காள தேசத்தில் பொறந்தாரு ந்னு சொல்லு ஒத்துக்கிறேன்.

இப்படி குலக் கொழுந்து 1 அடிக்கடி சாமி பற்றி பேசுவதால் இவன் வாயை அடக்க இதுதான் நல்ல சமயம் என எண்ணி

நீ ராமனை கும்பிடரயே அவரு ஆரியர், ஹிட்லரும் ஆரியர்ன்னு சொல்லிக்கிட்டார், அப்போ ஹிட்லர் ராமர் வம்சம். ஹிட்லர் பண்ண கொடுமையை யாரும் இன்னும் மறக்கலை, புரிஞ்சுக்கோ தம்பி!
ராவ ணனை கொன்னுட்டு புஷ்பக விமானத்திலேறி அயோத்தி வந்த ராமர் அதை நேரா ஃபிராங்பர்ட்டுக்கு ஓட்டிட்டு போயிட்டாரு. அதுதான் இப்போதைய லூப்தான்ஸா...

பேயறந்தால் கூட கண்ணாமுழி பிதுங்காது குலக் கொழுந்து 1க்கு. ஆனால் இப்போது லேசாக கண்ணாமுழி பிதுங்க ஆரம்பித்திருந்தது.

இதை நீ நம்ப மாட்டேன்னு எனக்குத் தெரியும், புஷ்பக விமானத்தை ஓட்டியது அன்னப் பறவையின் வம்சம், லூப்தான்ஸாவின் சிம்பல் அன்னப் பறவை, இப்போ புரியுதா???

குலக் கொழுந்து 2 ரொம்ப குதிக்கிறான், அவன் வழியிலே போயி அவன் வாயிக்கு பிளாஸ்திரி போடல என் பேரு படையப்பா இல்லைன்னுட்டு

ராவணன் தான் ஜெர்மனிக்காரன். ஏன்னா புஷ்பக விமானத்துக்கு அவந்தான் ஓனர். புஷ்பக விமானத்துல ஒரு தடவை போனதால ராமன் ஜெர்மனிக்காரன் ஆக முடியாதுன்னு

வாதம் பண்ணினான்.

--தொடரும்.