Showing posts with label கதை. Show all posts
Showing posts with label கதை. Show all posts

Sunday, September 10, 2006

கொஞ்சம் லிப்ட் கிடைக்குமா?

இரவு மணி 8. பஸ்ஸிலிருந்து இறங்கி 10 நிமிடம் வீட்டுக்கு நடக்க வேண்டும். வழக்கம் போல் விளக்குக் கம்பம் விளக்கில்லாமல் கம்பம் மட்டும் நின்று கொண்டிருந்தது. போன வாரம் பெய்த மழையில் ரோடு எது குழி எது என தெரியாமால் எல்லா இடமும் குழியாக இருந்தது. என்னிடமிருப்பதோ நம்பரெல்லாம் அழிந்து போன ஒரு பழைய நோக்கியா 1108, அதிலிருக்கும் வெளிச்சத்தை வைத்து சமாளித்துக் கொண்டே போய் விடலாம். "ஏன்டா, அந்த போனைத்தான் தூக்கி போட்டுட்டு வேற வாங்குறது? இன்னும் அதை கட்டிட்டு அழுதுட்டு இருக்கே..." என யாராவது திட்டினால் "இதை வாங்கி அவ ஒரு தடவை பேசினா... நான் அவ ஞாபகாமாய்த்தான் வைத்திருக்கிறேன்" என ரீல் விட்டு என் கஞ்சத்தனத்தை மறைத்துக் கொண்டிருக்கிறேன்.

இருட்டாய் வேறு இருக்கிறது, துணைக்கு யாராவது வந்தால் பேசிட்டே போயிடலாம். இல்லை, யாராவது வந்தால் கொஞ்சம் லிப்ட் கிடைக்குமா? என கேட்டுப் பார்க்க வேண்டியதுதான். என்னைத் தவிர ரோட்டில் வேறு யாரும் இல்லை. யாருக்காவது மிஸ்ஸுடு கால் குடுப்போம், திரும்ப பேசினா ஈராக், இஸ்ரேன்னு எப்படியாவது ஒப்பேத்திட்டு வீடு வரைக்கும் போய் சேர்ந்துட வேண்டியதுதான். நான் எப்போ மிஸ்ஸுடு கால் விட்டாலும் பொறுப்பாய் போன் பண்ணும் சீனிக்கு போன் பண்ணினேன். ஒன்னு, ரெண்டு என எண்ணி மூனாவது ரிங்கில் கட் பண்ணினேன். ஒரு வண்டி மெயின் ரோடில் இருந்து நான் இருந்த ரோட்டுக்கு திரும்பியதை பார்த்ததும் நான் இன்னும் 2 நிமிடத்தில் வீட்டில் இருப்பேன் என என் உள்ளுணர்வு சொல்லியது.

நான் கையை ஆட்டி அந்த வண்டியை நிறுத்துவதற்க்கும் சீனியின் கால் வருவதற்க்கும் சரியாய் இருந்தது. "சீனி, ஒரு முக்கியாமானவங்க வந்திருக்காங்க, நானே உனக்கு அப்புறம் போன் பண்ணரேன்" என போனை கட் செய்தேன். நிமிர்ந்து பார்த்தால் வண்டியில் 2 பேர் உக்கார்ந்திருந்தார்கள். அடடா, கால் பண்ணின சீனியையும் கட் பண்ணியாச்சு, இனி வேற யாரையாவதுதான் கூப்பிட வேண்டும் என நடக்க ஆரம்பித்ததும் "சார், மலர் ஹாஸ்பிடல் எப்படி போகணும்?" என வண்டியிலிருந்தவன் கேட்டான். "அதுக்கு மெயின் ரோட்டில் போகணும், 10 கிலோ மீட்டர் வரும்" என பேச்சை முடித்தேன்.

"இல்லைங்க, பிரெண்டுக்கு அடிபட்டிருக்குங்க. இதுல போனா சீக்கிரம் போகலாம்ன்னு சொன்னாங்க ,அதான் வந்தோம்..." என பரிதாபமாக சொன்னான். நான் இந்த ஏரியாவிலதான் ரொம்ப நாளா இருக்கேன், அப்படியெல்லாம் ஒரு வழியும் கிடையாது. பையன் தண்ணியடிச்சிட்டு வண்டி ஓட்டி கீழே விழுந்துட்டானா, இல்லை..." என நான் எனக்கே உண்டான ஆர்வக் கோளாறில் இழுத்த போது "அவன் கூட யாரும் இல்லைங்க, நாங்க போய் சேர்ரதுக்கு இன்னும் நிறைய நேரம் பிடிக்கும். என் போன்ல பேலன்ஸ் இல்லை,பக்கத்துலையும் ஒரு பூத் இல்லை, உங்க போனை குடுத்தீங்கன்னா ஒரே ஒரு கால் பண்ணிட்டு குடுத்திடுவேன்" என பின்னால் இருந்தவன் கேட்டான்.

"ஆபத்துக்கு உதாவாதவன் எல்லாம் மனுஷனே இல்லை, இந்தாங்க போன்" என பின்னாலிருந்தவனிடம் குடுத்தேன். "டேய், வண்டியை ஓரமா நிறுத்து. பேசிட்டு அப்புறம் போலாம்" என பின்னாலிருந்தவன் சொன்னவுடன் ஒரு யு டர்ன் எடுத்து மெயின் ரோட்டைப் பார்த்து வண்டியை நிறுத்துவது மாதிரி நிறுத்தி வண்டியை விரட்டி சிட்டாய் பறந்தான். எனக்கு என்ன நடக்கிறது என்பது புரிவதற்குள் அவர்கள் மெயின் ரோட்டிற்க்கு அருகில் இருந்தார்கள். என் போன், பேலன்ஸ் 200 ரூபாய் என் கண் முன்னே காணாமல் போய் கொண்டிருந்தது. மெயின் ரோட்டின் விளக்கு வெளிச்சத்தை தொட்டவுடன் வண்டி திரும்பவும் என்னைப் பார்த்து திரும்பியது.

எனக்கு தெளிவாக தெரிந்தது மலர் ஹாஸ்பிட்டலில் அட்மிட் ஆகப் போவது நான்தான் என்று. 10 காசுக்கு தேறாத போனுக்கு எங்களை இவ்வளவு பொய் சொல்ல வெச்சுட்டியேன்னு பைக் பார்ட்டிகள் வந்து மிதிக்கப் போறாங்கன்னு தலை தெறிக்க ஓட ஆரம்பித்தேன். என் உள்ளுணர்வு சொல்லியபடி 2வது நிமிடத்தில் வீட்டிலிருந்தேன்.

Wednesday, September 06, 2006

ஆத்தா, நான் பாசாயிட்டேன்!!!

"படம் போடும் பாறைகள் (Pictured Rocks, Munising, MI, USA) - ஒரு பாமரனின் பயணக் குறிப்பு"ன்னு எழுதிட்டு இருந்தேன்.தமிழோவியத்தில் இந்த வாரம் என்னா இருக்குன்ன்னு பார்த்தா என் கதை!!!

இந்த கதை எப்படி தமிழோவியத்துக்குப் போச்சு அப்படிங்கறதே ஒரு பெரிய கதை... நிலா உறவுன்னு தேன்கூடு போட்டிக்கு தலைப்பு குடுத்தாலும் குடுத்தாங்க நானும் ஒரு கதையை நாலு மணி நேரம் உக்கார்ந்து ரெடி பண்ணி பிளாக்ல போட்டு நண்பன் ஒருத்தன் கிட்ட எப்படிடா இருக்குன்னு கேட்டா "இதை அனுப்ப போறீயா?" ன்னு கேட்டான். ரைட்டோய், அவ்வளவுதான் நம்ம கதைக்கு ஆயுசுன்னு உடனே தூக்கி குப்பையில போட்டுட்டு வேலையப் பார்த்துட்டு இருந்தேன்.

என்ன இருந்தாலும் நானே எழுதுனது, பத்தோட பதினொன்னா இதுவும் என் பிளாக்கை அலங்கரிக்கட்டும்ன்னு ஒரு வாரம் கழித்து குப்பைத் தொட்டியில் இருந்து தூசி தட்டி எடுத்து போடலாம்னா அங்க பாபா எல்லோரையும் வரிசையா நிக்க வைச்சு லெப்ட், ரைட், மேல, கீழ ன்னு பிரிச்சு மேய்ஞ்சுட்டு இருந்தாரு... அவரு சொன்னதுக்கு அப்புறம்தான் என் கதையை படிச்சி பார்த்தேன் (நாங்கெல்லாம் எழுத மட்டுந்தான் செய்வோம், படிக்கறதுதான் உங்க தலையெழுத்து) அப்படியே கதிர் படம் மாதிரி இருந்தது. கதிர் படமாவது தியேட்டர் வரைக்கும் வரும், என் கதைக்கு அந்த பாக்கியம் கூட இல்லை. இதை மட்டும் போட்டோம் நம்ம கதைக்குத்தான் அவர் போடும் முதல் 0 ன்னு நினைச்சிட்டு (சொக்கா, எனக்கில்லை... எனக்கில்லை...) ன்னு திரும்ப வேலைய பார்க்க ஆரம்பிச்சிட்டேன்.

ஆடுன காலும் பாடுன வாயும் தான் சும்மா இருக்காதே... ஏதாவது இணைய இதழுக்கு அனுப்பி வைப்போம்ன்னு தமிழோவியத்துக்கு "வறுமையில் வாடும் புலவன் நான், ஏதாவது போட்டுக் குடுங்கன்னு" ரொம்ப டீசண்ட்டா பிச்சை எடுத்திருந்தேன். அவங்களும் பரிதாபப்பட்டு (இன்னமும் நான் அப்படித்தான் நினைக்கிறேன்) என்னையும் எழுத்தாளராக்கிட்டாங்க... உங்க தலையெழுத்து, நான் என்னங்க பண்ண முடியும்???

Saturday, August 12, 2006

வாசுவும் வெடைக் கோழியும்-2

Part-1

நான்: சரி சரி... அழுகாதடா. உன் கதையை சொல்லு. நான் வேணா எம்பேர்ல போட்டுக்கறேன். ஆனா ஏதாவது பிரச்சினை ஆச்சு, அவ்வளவுதான். இதுக்கெல்லாம் நான் தார்மீக பொறுப்பேத்துக்கிட்டு ஊர்ல எல்லார் வாயிலும் விழுந்து எந்திரிக்க முடியாது, சொல்லிட்டேன்.

வாசு: நீதாண்டா நண்பன். ஒரு நாளு எங்க தோட்டத்து வழியா வளர் போயிட்டு இருந்தா. தோட்டத்துல யாருமே இல்லை. எனக்கு திடீர்ன்னு ஒரு யோசனை, இன்னைக்கு இதை எப்படியாவது முடிச்சிறனும்ம்னு...

நான்: பாவம்டா வளர்மதி, ச்சீ, அவளைப் போயி???

வாசு: உன்னைய கதாசிரியன்னு சொன்னது தப்பா போச்சு. முழுசா கேளுடா வெண்ணை. அந்தன்னைக்கு வளர் கால்ல செருப்பும் போடலை. உடனே ஓடிப் போயி பொத்துன்னு அவ கால்ல உழுந்து வளர், ஏன் என் மேல இவ்வளவு கோவம் உனக்கு. செருப்பு கால்ல போடறதுக்கு மட்டுந்தான். அதை கையிலெடுத்துட்டு நீ இப்படியெல்லாம் ரவுடித்தனம் பண்ணலாமான்னு அழுதுட்டேன்.

நான்: அதானே பார்த்தேன். எங்க வாசு தங்கம்டா. அதுக்கு அவ என்ன சொன்னா?

வாசு: அவ பெரிய வைராக்கியமுள்ள பொண்ணுடா. ஞாபகம் இருக்கா, 5வது படிக்கும் போது அம்மணியக்கா தோட்டத்துல இருந்து கொய்யாக்காய் யாருக்கும் தெரியாம பொறிச்சு நம்ம எல்லொருக்கும் தானம் பண்ணிட்டு இருந்தோமே, அப்ப வளரும் அங்க இருந்திருக்கா. அவ வரும்போது கொய்யாக்காய் தீர்ந்து போச்சு. அப்ப ஆரம்பிச்ச பிரச்சினையாம் இது. அப்புறம் ஒரு நாள் எங்க தோட்டத்துல ஒரு சிவப்பு தாவணி மட்டும் கிடந்தது. எருமை மேய்க்க போறப்ப தலைக்கு கட்ட ஆகும்ன்னு எடுத்துட்டு போயிட்டேன். அது அவளோடதாம். துவைச்சுட்டு போகும்போது மறந்துட்டு போயிட்டா. நான் ரொம்ப ஸ்டைலா எருமை மேய்க்கற அழகை எவனோ ஒரு நாதாரி போய் வளர்கிட்ட போட்டுக் குடுத்துட்டான். அன்னையிலிருந்து இந்த புகை வளர்ந்துட்டு இருக்கு. அப்புறம் நான் அவளை ரெண்டு முணு தடவை பார்த்து ரொமாண்டிக்க்கா சிரிக்க அவள் பகைக்கு நெய் ஊத்துன மாதிரி ஆயிப் போச்சு. ஆனா இதையெல்ல்லாம் சொல்லிட்டு என்னை பார்த்து ஒரு சிரிப்பு சிரிச்சா பாரு, அடடா... அதுக்காகவே சாகலாம்டா...

நான்: இவனைப் போய் ஒரு வில்லன் ரேஞ்சுக்கு பார்த்துட்டு இருந்தா பார்ட்டி பெரிய காமெடியனா இருக்குன்னு சிரிச்சிருப்பா...

வாசு: உனக்கு நான் எப்பவுமே காமெடியந்தான். நீ பண்ணின கூத்துக்கெல்லாம் டவுசர் கிழிய அடி வாங்குனது நாந்தான்டா. அதையெல்லாம் மறந்துடாதே...

நான்: அதான் இந்த கதையை போடறன்னு சொல்லிருக்கேன்ல.

வாசு: வளர் நாம் பேசி ஒரு சமாதனத்துக்கு வருவோமான்னு கேட்டேன். நீ ஊர்ல புறம்போக்கு, உருப்படாதவன்னு பேரு வாங்கிருக்க. நீ ஆம்பளை மாதிரி நடந்துக்க முதல்லன்னு சொல்லிட்டு மான் மாதிரி துள்ளிக் குதிச்சிட்டு திரும்பி திரும்பி பார்த்துட்டே போனா.

நான்: அடப்பாவி, நீ காமெடியாய் ஒன்னு பண்ணி இப்ப அந்த பொண்ணு அவளோட வாழ்க்கையவே பணயம் வெக்குது. பெண்புத்தி பின்புத்தி தான்டா.

வாசு: ஆம்பிள மாதிரி நடக்கனுமே என்ன பண்ணலாம்ன்னு பார்த்தா அவங்க அம்மா முட்டி வலி முட்டி வலின்னு முனகீட்டு வீட்டை விட்டு வெளிய வராமா எல்லா வேலையையும் வளரே பார்த்துட்டு இருந்தா. எங்க வீட்டுக்கு வரப் போற மகராணி வேலைக்காரி மாதிரி இருக்கறதான்னு, நீ எங்கப்பாவுக்கு முட்டி வலின்னா போட்டுக்கங்க மாமான்னு ஒரு கிரீம் குடுத்தைல்ல, அது ஒன்னை திருடிட்டு போயி குடுத்தேன். அமெரிக்காவிலிருந்து வந்தது. உடனே கேக்கும்ன்னு சொன்னேன். இப்போ அவங்க அம்மா வெளியவெல்லாம் நடமாடறாங்க.

நான்: அது நான் மாமாவுக்கு குடுத்ததுடா...

வாசு: அடுத்த தடவை வாங்கிட்டு வர்ரப்போ ஒன்னு சேர்த்து வாங்கிட்டு வா. எங்கப்பா கணக்கு கரெக்டா வைச்சிருப்பாரு. இப்போல்லாம் வளர் என்னை எங்க பார்த்தாலும் ஒரு சிரிப்பு சிரிப்பா பாரு...

நான்: நீ வழியறது இங்க கொஞ்ச நேரத்துல BBC நியூஸ் ல வரப் போகுது பாரு...

வாசு: மாப்பிள்ள, வளர் வந்துட்டு இருக்காடா. நான் ஆம்பிளைன்னு நிருப்பிக்க ஒரு பெரிய சந்தர்ப்பம் கிடைச்சிருக்கு.

நான்: ஏதாவது பண்ணி உடனே இழுத்துட்டு ஓடிறாதா. நான் 6 மாசம் கழிச்சு வரேன், அப்போ கல்யாணம் வெச்சிக்கலாம். இப்பொ என்ன பண்ணப் போற?

வாசு: கவுத்துக்காரர் வெடைக் கோழி வளர் வீட்டு கீரைப் பாத்தியை தினமும் கிளறி விட்டுருதாம். இங்க ஒரே சண்டை. இன்னைக்கு அந்த வெடைக் கோழியும் வருது. இந்தப் பக்கம் வளரும் வர்றா.. இப்போ மட்டும் கரெக்ட்டா கல்லெடுத்து அடிச்சு அந்த கோழியோட காலை முறிச்சுட்டேன்னு வைச்சுக்க அப்புறம் கெட்டி மேளம் கெட்டி மேளம்தான். அப்படியே லைன்லயே இரு. நல்ல கல்லா பார்த்து எடுத்துட்டு இருக்கேன். அவ்வளவுதான்டா , இந்த கோழி இன்னைக்கோட காலி.

அய்யோ என பெருங்குரலில் வளர்மதியின் அம்மா கத்துவது போனில் கேட்டது. நாசமாப் போன நாயே, சிவனேன்னு வீட்டுக்குள்ள சுத்திட்டு இருந்தவளை அமெரிக்கா களிம்புன்னு குடுத்து என்னை நடமாடவும் விட்டு இப்படி கல்லுல அடிச்சு ஜென்மத்துக்கும் நடக்கமுடியாமா பண்ணிட்டியே, நீ நல்லா இருப்பியா? என்பதும் கேட்டது.

அர்ச்சுனனுக்கு மரத்திலிருந்த கிளி மட்டும் தெரிந்த மாதிரி நம்ம வாசுவுக்கு வளர்மதியின் வீடு கோழிக்குப் பின்னால் இருப்பது சுத்தமாக மறந்திருந்தது. எனக்கென்னமோ அந்த ஜோசியகாரன் சொன்னதுதான் வாசு விசயத்தில் நடக்கும் போலத் தெரியுது.

Thursday, August 10, 2006

வாசுவும் வெடைக் கோழியும்

வாசு என் அத்தை பையன். சின்ன வயதிலிருந்தே ஒன்றாக சுற்றித் திரிந்தவர்கள் நாங்கள். ஊரில் எந்த கோழியைக் காணவில்லையென்றாலும் எங்கள் இருவரையும்தான் ஊரார் தேடுவார்கள். ஊரில் பண்ணாத அட்டூழியங்களே கிடையாது. எங்க மாமா "டேய், நீ உருப்பட மாட்டே, உருப்பட்டா என் பேரை மாத்திக்கிறேன்" என சபதமே போட்டார் 10 வருடத்துக்கு முன்பு. "ஏன்டா, அவர்தான் அப்படி சொல்லிருக்காருல்ல, நாம அதை மாத்திக் காட்டுவோம்டா" என சொன்னதுக்கு "இல்லைடா மாப்பிள்ள, இதுல ஒண்ணாவது அவர் சொல்படி நடக்கலாம்ன்னு இருக்கேன். நான் உருப்பட்டு, 50 வயசுல பழனிசாமி அப்படிங்கற அவர் பேர எல்லோரும் பன்னிசாமின்னு கூப்பிட்டா நல்லா இருக்காது" என்று ஊரோடு தங்கி விட்டவன். நான் எங்க அம்மாவின் அழுகைக்கும், அப்பாவின் பெல்ட்டுக்கும் பயந்து எஞ்சினியரிங் படிக்க சேர்ந்தேன் (எல்லாம் எங்கப்பாவோட வட்டிப் பணம்தான், நான் வாங்கின மார்க்குக்கு டுட்டோரியல் காலேஜில்கூட சேர்க்க மாட்டார்கள் என காலேஜ் ப்ரின்சிபால் முன்பாகவே திட்டிக் கொண்டே பணத்தை டேபிள் மேல் கொட்டி சேர்த்தார்).

அப்படி இப்படி செமெஸ்டருக்கு ஒரு அரியர் என வாங்கி காலேஜ் முடிக்கும் போது ஆச்சாராமாய், சுத்த பத்தமாய் ஒரு கப்பும் இல்லாமல் வந்ததுக்கு எங்க பண்ணையத்தில் வேலையில் இருந்த எல்லொருக்கும் கறி சோறு சமைச்சு போட்டு எங்க ஆத்தா கொண்டாடினார்கள். அப்படியே கொஞ்ச நாள் நானும் வாசுவுமாய் சேர்ந்து வயக்காடு, வீடுன்னு திரும்ப பழையபடி விட்ட இடத்தில் இருந்து தொடர்ந்து கொண்டிருந்தோம். சனி எங்க அப்பாவின் பார்ட்னர் மகள் ரூபத்தில் வந்தது. "ஏன்டா, சாரதா எல்லாம் மெட்ராஸில பத்தாயிரம் சம்பளம் வாங்கறாளாம். நீ என்னடான்னன தினமும் நாட்டுக் கோழி ஒன்னை உறிச்சு முழுங்கிட்டு இருக்க" என திட்டியதில் உண்மையிலேயே கோபம் வந்து மெட்ராஸ் வந்து, இப்போ அமெரிக்கா வந்து 5 வருடம் ஆகிறது. சாரதா இப்போது 2 குழந்தைக்கு அம்மாவாம். எங்க அம்மா அவங்க வீட்டு பொங்கலுக்கு போனப்ப சாரதாவின் சித்தி என நினைச்சு சாரதாவிடம் பேசியதையும் பின் உண்மை தெரிந்து மானம் போனதையும் சொன்ன பொழுது உண்மையிலேயே நான் ரொம்ப சந்தோஷப்பட்டேன்.

எது எப்படியோ வாரம் ஒரு முறை வாசுவிடம் பேசினால்தான் நிம்மதியாக இருக்கும். ஊரில் கடைசியாக அடை வைத்த கவுத்துக்காரர் கோழியிலிருந்து அம்மணி ஆயா கீழே விழுந்து இடுப்பை முறித்துக் கொண்டது வரை சகலமும் சொல்லுவான். ஒரு ஞாயிறுக்கிழமை காலையில் அவனுக்கு போன் செய்தால்

வாசு: மாப்பிள, ஒரு நிமிஷம் இரு வண்டியை எடுத்துட்டு வெளிய வந்தர்றேன்.

நான்: டேய், வண்டி ஓட்டிடே பேசப் போறியா, எங்காவாது போயி ஏத்திடப் போற..

வாசு: நீ வேற, இந்த மாதிரி ரோட்டுல வண்டியை நிறுத்திட்டு பேசிட்டு இருந்தாதானே கொஞ்சம் மரியாதையா இருக்கும். உன்னோட கதையெல்லாம் படிச்சேன்டா, ரொம்ப நல்லா எழுதறே, எங்கூட சுத்துனதுக்கு அப்புறமும் நீ எப்படிடா உருப்பட்ட???

நான்:(என் அப்பாவின் பெல்ட் கண் முன் வந்து விட்டுப் போனது) அதெல்லாம் தலையெழுத்து. ஆமா, நீ எங்க போயி அதைப் படிச்ச? உண்மையிலேயெ நல்லா இருந்துதாடா? இங்க அவனவன் என்னை கல்லால் அடிக்காத குறையா திட்டிட்டு இருக்கான்.

வாசு: உங்க வீட்டுல கம்ப்யூட்டர்ல ஒன்னும் தெரிய மாட்டேங்குதுன்னு மாமா வந்து பாக்க சொன்னாரா, அப்பத்தான் அத்தை உன் கதை புக்குல வந்ததை காட்டினங்க.

நான்: உனக்கு டிராக்டர், கிணத்து மோட்டார்தான்டா ரிப்பேர் பண்ணத் தெரியும். கம்ப்யூட்டர்ல என்னத்தடா நோண்டுன?

வாசு:இந்த நக்கல்தானே வேண்டாங்கறது. உங்க குடும்பத்துக்கே குசும்பு அதிகம்டா, பிளக்கை சொருகணும் வாடான்னு கூப்பிட்டா வரமட்டேன்னு சொல்லிட்டு உங்க அப்பாதான் கம்ப்யூட்டர் ரிப்பேர்னு வரச் சொல்லி கூப்பிட்டார். சரி சரி, உன்னையை எல்லொரும் கதை எழுதுனதுக்கு நோண்டி நொங்கெடுக்கறாங்கன்னு சொன்னையில்ல, நான் ஒரு கதை சொல்லறேன். அதைப் போடு உன்னை ஓஹோன்னு சொல்லுவாங்க.

நான்: நீ கதை வைச்சிருக்கியா? அது எப்பேர்பட்ட கதையா இருக்கும்ன்னு எனக்குத் தெரியும். நீ ஊர்க்கதை மட்டும் சொல்லு அது போதும்.

வாசு: நீ போடாட்டி பரவாயில்லை. நான் சொல்லறேன் சும்மாவாச்சும் கேளு. ஒரு ஊர்ல வாசுன்னு ஒரு பையன்...

நான்: டேய், நிறுத்து. எதுக்கு உன் பேர்ல கதை சொல்லற?

வாசு: நீ மட்டும் உம்பேர்லயே கதை எழுதிக்கற. இந்த கதைக்கு நாந்தான் ஆசிரியர். நீ என் பேரைத்தான் கதாநாயகன் பேரா போடணும்.அந்த ஊர்ல வளர்மதின்னு ஒரு பொண்ணு.

நான்: உன்னை எங்கே பார்த்தாலும் காலிலிருக்கும் செருப்பை கையில் எடுத்து ஆட்டிக் காண்பிப்பாளே, அவ பேர் மாதிரி இருக்கு!!!

வாசு: ஆமாண்டா, இது எங்க கதைதான். எங்க ரெண்டு பேருக்குள்ள ஒரு அன்டர்ஸ்டேண்டிங்ல போயிட்டு இருக்கு. எப்படியாவது இதை மட்டும் நீ புத்தகத்துல போட்டுட்டன்னு வைச்சுக்க, இதைக் காட்டி அப்படி இப்படின்னு பேசி கூட்டிட்டி ஓடிருவேன்.

நான்: பெரியவங்ககிட்ட சொல்லி கல்யாணம் பண்ணி வைக்கச் சொல்ல வேண்டியதுதான்டா. கூட்டிட்டு ஓடரங்கற, உங்க போதைக்கு நான் ஊறுகாயாடா???

வாசு: உன் காதை நான் காலா நெனச்சுக்கறேன். தயவு செஞ்சு இந்த கதையை மட்டும் போட்டுடு. எனக்கு 35 வயசுலதான் கல்யாணம் ஆகும்ம்னு ஒரு நாசமா போன ஜோசியகாரன் வேற சொல்லிட்டு போயிட்டான்.

நான்: மங்களம் உண்டாகட்டும்.

வாசு: பார்த்தியா, லாரிக்காரன் பொண்டாட்டியெல்லாம் உண்டாகட்டும்ன்னு சொல்ற. நீ மட்டும் மனசு வைக்கலைன்னா எனக்கு இந்த ஜென்மத்துல கல்யாணம் நடக்காது.

~தொடரும்.

Sunday, August 06, 2006

நிஜமல்ல, கதை-3!

Part 1 Part 2

நிஷா இப்போதெல்லாம் உதயின் வழியலுக்கெல்லாம் பயப்படுவதில்லை போல உதய்க்கு தோன்றியது. அவளே இப்போதெல்லாம் காஃபி குடிக்கப் போலாமா? எனக் கேட்டு உதய்க்கு இன்ப அதிர்ச்சி குடுத்துக் கொண்டிருந்தாள். நல்ல படியா போயிட்டு இருக்கு, இப்படியே ஒரு ஆறு மாதம் என்ஜாய் பண்ணிட்டு அப்புறம் மெதுவா கேட்டுப் பார்க்கலாம். சரின்னு சொன்னா பிக்கப் இல்லைன்னா டிராப். வாழ்க்கையில இவ்வளவு சிம்பிளா எல்லாம் நடந்தா எவ்வளவு நல்லா இருக்கும் என ஸ்டேட்டஸ் ரிப்போர்ட் தயார் பண்ணிக் கொண்டிருந்தான்.

உதய் என்ற நிஷாவின் தேன் குரலுக்கு எஸ் மேடம், சொல்லுங்க என்ன விஷயம்? என உதய் வேகமாக திரும்பினான். வெள்ளை சுடிதாரில் தலைக்கு குளித்து வந்திருந்த நிஷா தேவதை மாதிரி தெரிந்தாள். இல்லை, உங்கிட்ட நான் பேசணும் என நிஷா உதயின் முகத்தைப் பார்க்காமல் தரையை பார்த்துக் கொண்டு பேசினாள். மச்சான் உதய், எங்கேயோ ஒரு மச்சம் இருக்கக்கூடாத இடத்துல இருக்கு போல இருக்கு. இப்போத்தான் ஆறு மாசம் வெயிட் பண்ணலாம்ன்னு நினைச்சுட்டு இருந்தாய். பாரு, அவள் உன் கண்ணைப் பார்த்து, உன்னைப் பார்த்து பேச கூட வெட்கப்படறா எனற் உதயின் மனசாட்சி DTS எபெக்டில் திரும்பத் திரும்ப உதயின் காதுகளில் சொல்லிக் கொண்டே இருந்தது. இப்போத்தான் ரொம்ப கவனமாக இருக்கணும், இல்லைன்னா சொதப்பி சின்னாபின்னமாயி சொந்தத்துல சூனியம் வெச்ச மாதிரி ஆயிடும், ரிலாக்ஸ் என மனசாட்சி அவனை உஷார் படுத்தியது. சரி, வா காஃபி சாபிட்டே பேசலாம் என்றான். இல்லை, இல்லை இதெல்லாம் ஆபீஸ்ல பேசற விஷயம் இல்லை, நாம வேணா இன்னைக்கு ஒன்னா வீட்டுக்கு போலாமா? என நிஷா கேட்க உதயால் சீட்டில் உட்கார முடியவில்லை. அதேதான் இது அதேதான் என உள்ளுக்குள் துள்ளிக் குதிக்க ஆரம்பித்தான்.

"சரி, அப்போ இப்போவே கிளம்பலாமா?" என கேட்ட உதய் ஸ்டேட்டஸ் ரிப்போர்ட், அது இது என எல்லாவற்றையும் மறந்து விட்டிருந்தான். 5 நிமிஷம் வெயிட் பண்ணு, நானும் வர்றேன் என நிஷா சொல்லிவிட்டு சீட்டுக்கு ஓடினாள். "நான் உதய், மாசம் 50000 சம்பளம். கல்யாணத்துக்கு அப்புறம் உனக்கு பிடிச்சா மட்டும் வேலைக்கு வந்தா போதும். அவுட்டர் ரிங் ரோடுல ஒரு வீடு வாங்கிரலாம். பெண் குழந்தைன்னா உங்க பாட்டி பேரு, ஆண் குழந்தைன்னா எங்க தாத்தா பேரு. அப்புறம்..." என உதய் யோசித்துக் கொண்டிருந்த போது "என்ன உதய், பயங்கர யோசனை" என்று கேட்டபடி நிஷா வந்தாள். "இல்லை, வாழ்க்கையில எல்லாம் திடீர் திடீர்ன்னு நடக்குதா? அதான் அதையெல்லாம் எப்படி சமாளிக்ககிறது"ன்னு யோசிச்சுட்டு இருக்கேன் என்று கார்ல் மார்க்ஸ் ரேஞ்சுக்கு பேசினான். ஆமாம், எனக்கும் அதே பிரச்சினைதான் என நிஷா சொன்ன பொழுது ஒரு ஆண் குழந்தை, ஒரு பெண் குழந்தை என உதய் காற்றில் பறந்து கொண்டு இருந்தான்.

உதய் என நிஷா கூப்பிட்ட பொழுது, வானத்தில் பறந்து கொண்டு இருந்த உதய், "ம், சொல்லு நிஷா, நான் இன்னைக்கு ரொம்ப சந்தோசமாய் இருக்கேன்" என உளறினான். "இதை எப்படி ஆரம்பிக்கறதுன்னு தெரியலை உதய். உங்கிட்ட இதை எப்படி சொல்லறது"ன்னு பயமா இருக்கு என வார்த்தைகளை மென்று முழுங்கி பேசினாள். நம் வாழ்க்கைத் துணைவி இப்படியெல்லாம் கஷ்டப்படக் கூடாது என நினைத்த உதய், "நிஷா, நான் உன்னோட... உன்னோட ஃபிரெண்டுன்னு நினைச்சிக்கோ. அன்னைக்கு உன் புரோகிராமில் ஒரு பெரிய டிசைன் பிரச்சினை வந்தப்போ, இதெல்லாம் நாம ரிவ்யூ பண்ணும் போது கண்டுபிடிச்சிருக்கணும்னு பிரச்சினையை நான் திசை திருப்பலை... அப்புறம் நீ பண்ண வேண்டிய அந்த டாக்குமெண்ட் வேலையெல்லாம் சரவணனுக்கு தள்ளி விடலை" என அவளுக்காக தான் பண்ணிய அளும்புகளைப் பட்டியல் இட்டான்.

இந்த பதிலகளால் சாமதானமாகியது போல தோன்றிய நிஷா, நான் இதை முதன் முதலில் உங்கிட்டதான் சொல்லேறென் என்றாள் நிஷா. "நிஷா, சில விஷயத்துக்கெல்லாம் வக்கீல் வைக்கக் கூடாது. நீ மனசில நினைச்சிருக்கிறதை அப்படியே சொல்லு. நீ என்ன சொல்லப் போறெங்கறதும் எனக்குத் தெரியும், கமான்" என ஆர்வத்தை அடக்க முடியாமல் சீட்டின் நுனிக்கு நகர்ந்திருந்தான் உதய். "எனக்கு மாப்பிள்ளை பார்த்திருக்காங்க" என நிஷா வெட்கத்துடன் சொல்லி விட்டு தலையைக் குனிந்து கொண்டாள். இங்க பார்ரா... இப்போலாம், பொண்ணூங்க ரொம்ப தேறிட்டாங்க...லவ்வைச் சொல்லறதுக்கு உக்காந்து யோசிக்கிறாங்க என மனதுக்குள் நினைத்த உதய் ரோலர் கோஸ்ட்டரில் உச்சியைப் பார்த்து போவதைப் போல உணர்ந்தான். கையில் ஒரு ரோஜா இருப்பதை போலவும், அதை MGR ஸ்டைலில் முகர்ந்து பார்ப்பது போலவும் மூக்கில் கையைத் தேய்த்து விட்டு "சஸ்பென்ஸ் போதும், முழுசா சொல்லிடு... நான் சொர்க்கத்தை சீக்கிரமே பார்க்கணும்" என்றான் உதய்.

"அவர் அமெரிக்காவில இருக்கார். போன வாரம்தான், பொண்ணு பார்த்துட்டு போனார்" என நிஷா சொன்னபோது ஒரு டின் நிறைய ஐஸ்கட்டியை தலை மேல் கொட்டிய ஃபீலிங் இருந்தது உதய்க்கு. அந்த அதிர்ச்சியை வெளியில் காட்டி கொள்ளாமல், "ஓ, சும்மாதான் பார்த்துட்டு போயிருப்பாங்க, இந்த அமெரிக்கா பசங்களே இப்படித்தான். ஊருக்கு வந்தமோ எல்லொரையும் பார்த்தமா, போனாமன்னு இல்லாம, லைசென்ஸ் வாங்கிட்டு வீடு வீடா போய் சைட் அடிக்காறாங்க. பாரு, நாங்கெல்லாம் ரொம்ப நல்லவங்க" என இப்பொழுது டிபென்ஸ் ஆட்டத்துக்கு மாறி இருந்தான் உதய். "இல்லை... இல்லை அவர் ரொம்ப நல்லவர்... நானும் அவரும் 2 நாள் காஃபி சாப்பிடப் போனோமே" என்றாள் முகத்திலிருக்கும் வெட்கம் கொஞ்சம் கூட கலையாமல்."அட, எங்கூடவும்தான் நீ தினமும் காபி சாப்பிடுற. இதெல்லாம் சும்மா. நீ வேணா பாரேன், அவன் அடுத்த வாரம் அமெரிக்கா போறானா இல்லையான்னு" என இப்பொழுது தாக்குதல் ஆட்டத்துக்கு தயாரானான். " ஆமாம், அடுத்த வாரம் அவர் அமெரிக்கா போறார். அதுக்கு முந்தின நாள் எங்களுக்கு நிச்சயதார்த்தம்" என்றாள் நிஷா. "பாரேன், அவன் நிச்சயதார்த்ததுக்கு அப்புறம் திரும்பி வரவே மாட்டான்" என இப்பொழுது கொஞ்சம் சத்தம் போட்டு சிரிக்க ஆரம்பித்தான்.

"உதய், ரொம்ப கிண்டல் பண்ணாத, அவர் ரொம்ப நல்லவர். உண்மையா, அது எங்க ரிஜெஸ்டர் மேரேஜ். H4 விசாவுக்கு கல்யாண போட்டோவும், திருமண சான்றிதழும் வேணும் இல்லையா, அதுக்காக... இந்த ஐடியா எல்லாம் அவர்தான் குடுத்தார். இல்லைன்னா கல்யாணத்துக்கு அப்புறமும் 6 மாதம் விசாவுக்காக வெய்ட் பண்ண வேண்டி வரும். இப்பொவே அப்ளை பண்ணிட்டா கல்யாணம் முடிஞ்ச கையோட அமெரிக்கா கூட்டிப் போயிடலாம்ன்னு இந்த ஏற்பாடு." என நிஷா முகமெங்கும் பூரிப்பாக சொன்னாள். "அடப்பாவிகளா, உங்களுக்கெல்லாம் பக்கத்தில் இருக்கும் மல்லிகைப்பூ கண்ணுக்குத் தெரியாது, ஆனால் அமெரிக்காவில் இருக்கும் ரோஜாப் பூ தெரியுது" என மனதுக்குள் வெந்து புழுங்கிக் கொண்டிருந்தான். "உதய், இன்னும் ஒரு வாரத்தில அவரு அமெரிக்கா திரும்பி போயிடுவார். நீ எனக்கு உண்மையிலேயே நல்ல பிரெண்டுன்னு எனக்குத் தெரியும். நீ, என் வேலையெல்லாம் சரவணனுக்கு தள்ளி விட்டுட்டின்னா நான் நிம்மதியா அவர் கூட ஊர் சுத்துவேன்,பிளீஸ் உதய்" என செல்லம் கொஞ்சினாள். உதய் நெஞ்சைப் பிடித்துக் கொண்டு உக்கார்ந்திருந்தான். அதற்க்கப்புறம் நிஷா மட்டும் வழவழவென எதேதோ பேசிக் கொண்டிருந்தாள். "இதெல்லாம் நாளைக்கு ஆபிஸில் பார்த்துக் கொள்ளலாம், நான் இறங்க வேண்டிய இடம் வந்து விட்டது" என உதய் பஸ்ஸிலிருந்து இறங்கினான். வெள்ளை சுடிதாரில் தலைக்கு குளித்து வந்திருந்த நிஷா பேய் மாதிரி தெரிந்தாள்.

கில்லி விஜய் மாதிரி வலம் வந்து கொண்டிருந்த உதய், எங்கே செல்லும் இந்த பாதையில் வரும் சேது சீயானாய் மாறி கொஞ்ச நாள் சுற்றியதாகக் கேள்வி. விஜய லக்ஷ்மி என்னும் புதுப்பெண்ணின் வரவு மறுபடியும் அவனை கில்லி ஆக்கிவிட்டதாகவும் கேள்வி.

~முற்றும்.

கதையில் என் பெயரை வைத்தால் கூட விளங்க மாட்டேங்குது. ரொமாண்டிக் ஹீரோ கூட தண்ணியடித்து விட்டு இருமிக் கொண்டே பாடும் நிலைமைக்கு போயிடறாங்க. யாராவது பரிகாரம் ஏதாவது இருந்தால் சொல்லுங்களேன். தேன்கூடு போட்டிக்கு "உறவுகள்" தலைப்பில் கதை எழுத சொன்னார்கள். அதுக்கும் இந்த கதைக்கும் துளி கூட சம்பந்தம் இல்லை என்பதையும் சொல்லிக் கொள்கிறேன்.

Friday, August 04, 2006

நிஜமல்ல, கதை-2!

Part 1 Part 3

நிஷா, நேத்து நைட் உன்னை ஈஸ்ட் என்ட் சர்க்கிள்ல பார்த்தேனே, அங்கேயா தங்கிருக்க? என்று மெதுவாக நூல் விட ஆரம்பித்தான் உதய். ஈரோடையே திருவனந்தபுரத்துக்கு பக்கம்ன்னு சொன்னவன் இதுக்கு என்ன சொல்வானோ என நினைத்து இல்லை இல்லை நான் 9த் பிளாக், ராகி குட்டா பக்கம் என்றாள். நிஷா, நம்ம ரெண்டு பேருக்குள்ள என்னமோ இருக்கு, நானும் அங்கதான் என டன் டன்னாய் வழிந்துவிட்டு சாப்பாடெல்லாம் எங்க? என்றான். வீட்டில்தான் என்றவள் எதற்கு சொன்னேன் என்று நாக்கை கடிப்பதற்க்குள் அப்போ எப்போ சாப்பிடக்கூப்பிடப் போற? என அடுத்த ஜொள்ளாஸ்திரத்தை ஏவினான்.

எங்க அண்ணன் கிட்ட கேட்டு சொல்லறேன், அவன் தினமும் லேட்டா வீட்டுக்கு வரான் என அழுவது போல் சொன்னாள். சொல்லவே இல்லை, உங்க அண்ணன் கூடத்தான் இருக்கியா? நிதானமா கேட்டு சொல்லு ஒன்னும் அவசரம் இல்லை, நான் இங்கேதான் இருப்பேனெ என இடத்தைக் காலி செய்தான். இவளை கரெக்ட் பண்ணறதுன்னா இங்க கம்பெனியிலேயேதான் பண்ணனும் போல இருக்கு, ரொம்ப கஷ்டமாச்சேய்யா! சரி முன் வைச்ச காலை பின் வைக்கிறதில்லைன்னு அடுத்த திட்டத்துக்கு தயாரானான். அய்யோ என நிஷா தலையில் கைவைத்துக் கொண்டு சேரில் தொபுக் என சரிந்தாள்.

நிஷாவை அடிக்கடி சீட்டுக்கு கூப்பிட்டால் வந்து கையை கட்டிட்டு நிக்கறா, கொஞ்ச நஞ்சம் யோசிச்சு வைச்சு இருக்கற ஐடியாவும் மறந்து போகுது. நாமதான் இனிமேல் சிச்சுவேஷன் கிரியேட் பண்ணிக்கணும், இனிமேல் அவ சீட்டுக்கு போயிட வேண்டியதுதான் என திட்டம் போட்டுப் போனால் அங்க சரவணன் சைடுல பெஞ்ச் மேல உக்கார்ந்து வறுத்துக் கொண்டிருந்தான், இவளும் கெக்கே பிக்கே என சிரித்துக் கொண்டிருந்தாள். என்ன நடக்குது இங்க, நிஷா நான் ஒரு டிசைன் டாக்குமெண்ட் பிரிண்ட் பண்ணிருக்கேன் போய் எடுத்துட்டுவா என்றான் உதய். சரி நான் கிளம்பறேன் என சரவணன் கிளம்பினான்.

டேய், நீ நில்லு. எங்க வந்த, எதுக்கு வந்த, நான் வந்தவுடனே கிளம்பறே? நல்லாயில்லை இதெல்லாம்... நானெல்லாம் ஆட ஆரம்பிச்சா தாங்க மாட்டீங்கடி, உன்னோட ரேட்டிங் எங்கையில இருக்குன்னு தெரிஞ்சும் இந்த ஆட்டம் ஆடுற? மகனே, அடுத்த தடவை ஆட்டறதுக்கு குடுமி இருக்காது, சொல்லிட்டேன் என்று உதய் சொல்லும் போது நிஷா வேகமா வந்து பிரிண்டர்ல ஒரு டாக்குமெண்ட்டும் இல்லையே என டென்ஷனாக சொன்னாள். ஓ, நான் பிரிண்ட் குடுக்கலை போல. சரி, இப்போ குடுக்கறேன், போய் எடுத்துட்டுவா என சாதாரணமாக என்றான்.

தலை, தெரியாம பண்ணிட்டேன். என்னோட கன்பெர்மேஷன்ல கை வைச்சிராதீங்க. நான் என் சீட் விட்டு இனிமேல் எந்திரிக்க மாட்டேன் என்று சொல்லி முடிப்பதற்க்கும் நிஷா வந்து சேருவதற்க்கும் சரியாக இருந்தது. நிஷா, கருப்பு பேண்ட், கருப்பு சட்டையில ஷாருக்கான் மாதிரி இருக்கே என சரவனன் சத்தமாக சொல்லி முடித்தவுடன் எல்லோரும் நிஷாவை திரும்பி பார்த்தார்கள். அவள் கண்கள், கரை புரண்டோடும் கபிணி டேம் மாதிரி இருந்தவுடன் உதய்க்கு பொத்துக் கொண்டு வந்ததே கோபம். மூதேவி, நீயும்தான் ப்ளொரசண்ட் பச்சை சட்டை, புளூ பேண்ட் போட்டுட்டு ஐஸ்வர்யா ராய் மாதிரி இருக்க. பொம்பளை புள்ளைகளை இப்படியெல்லாம் அவமானப் படுத்தறியே, உனக்கெல்லாம் மனசாட்சியே கிடையாதாடா என சொல்லி விட்டு நிஷாவின் கையிலிருந்த டாக்குமெண்டை வாங்கி அவன் கையில் திணித்து இதை படிச்சிட்டு என்ன இருக்குன்னு சொல்லு, வா இப்போ இடத்தைக் காலி பண்ணு என்று நகர்ந்தான்.

தலை, என்னைய பத்தி அவ தப்பா நினைக்கனும்ன்னுதான் அப்படி சொன்னேன். ரேட்டிங்ல குத்தீறாதீங்க, நீங்க நல்லா இருப்பீங்க என்றான் சரவணன். என்னையப் பத்தி நல்ல விதமா சொல்லியிருந்தாலும் பரவாயில்லை என்றான் உதய். தலை, அப்போ நாளைக்கு நடக்குற கலாச்சர தின சிறந்த ஆடை அணிபவருக்கான ஓட்டை அவளுக்கும், உங்களுக்கும் போட்டுறேன், சரியா? , நாதாரித்தனம் பண்ணாலும் நாசூக்கா பண்ணனும், இனிமேலாவது தெரிஞ்சுக்க. அவளுக்கு ஓட்டு போட்டு அவ ஜெயிச்சா எல்லோரும் நம்புவாங்க, நான் ஜெயிச்சா காறித் துப்ப மாட்டாங்க, ஒழுங்கா அவளுக்கு மட்டும் ஓட்டுப் போடு என சொல்லிவிட்டு நாளைக்கு என்ன ட்ரெஸ் போடலாம் என யோசனை செய்யத் தொடங்கினான்.

அடுத்த நாள் கண்ணுக்கு குளிர்ச்சியாகவும், சைட் அடிக்க லைசென்ஸ் குடுத்தது மாதிரி இருந்தது உதய்க்கு. தளமெங்கும் இருந்த வண்ணக்கோலங்களை பார்த்துவிட்டு சார், நீங்க யாருக்கு சார் ஓட்டுப் போடுவீங்க என பயல்கள் வழிய வந்து கேட்க, அதெல்லாம் நாங்க ஜெயிக்கறவங்களுக்குத்தான் போடுவோம், நீங்க, உங்க ஓட்ட ஒழுங்கா போடுங்கடா வென்ட்ரு பசங்களா என சிங்கம் மாதிரி கர்ஜித்தான்.

சாயங்காலமாக ஓட்டு எண்ணிக்கை முடிந்ததும் நிஷா ஜெயித்திருக்கவில்லை. டென்ஷனாக போட்டி நடத்திய வனிதாவிடம் போய் யார் யாருக்கு எவ்வளவு ஓட்டுன்னு எனக்கு இப்போவே தெரிஞ்சாகணும் என சத்தமாக சொன்னான் உதய். உன் ஆளுக்கு எவ்வளவு ஓட்டுன்னு தெரியணுமா, யார்கிட்டையும் சொல்லாதே இல்லைன்னா எல்லோரும் வந்து கேப்பாங்க. சரி அந்த துரதிர்ஷ்டக்காரி பேரை சொல்லு என்றாள். பேரைக் காதில் சொன்னதும் அடப்பாவி, அவ இன்னைக்கு சாதாரண சுடிதாரில் வந்திருந்தாள், அவளுக்கும் என 5 பேரு ஓட்டுப் போட்டிருக்கீங்க, ரொம்ப பரிதாபமாய் 5 ஓட்டுதான் விழுந்திருக்கு. பரவாயில்லை, உனக்கு இப்போ போட்டி ரொம்ப கம்மியில்லை என சிரித்தாள். எங்க அந்த சரவணன் என உதய் வெடித்துக் கிளம்பினான். வனிதா ஒன்றும் புரியாமல் பார்த்துக் கொண்டிருந்தாள்.


சரவணன் சாகவாசமாக புதிதாக சேர்ந்த ஃபிகருடன் சாகுபடி செய்து கொண்டிருந்தான். உதயைப் பார்த்ததும், தலை என தெறித்துக் கொண்டு ஓடி வந்தான். தலை, இப்படி ஆயிப்போச்சே தலை என முகத்தை சோகமாக வைத்துக் கொண்டான். இப்போ நீதான் ஆயி போகப் போற என்று சரவணனை மேலிருந்து கீழாய் முறைத்தபடி பார்த்தான். நான்கூட நிஷாவுக்குத்தான் ஓட்டுப் போட்டேன் தலை என்றான். 1986 தமிழக உள்ளாட்சி தேர்தல்ல எங்க பங்காளி கவுன்சிலருக்கு நின்னாரு. அப்போ எனக்கு 6 வயசு. அப்போவே நான் 10 ஓட்டு போட்டிருக்கேன் மிஸ்டர் சரவணன். அதுக்கும் இதுக்கும் என்ன சம்பந்தம் தலை என சரவணன் புரியாமல் கேட்டான். நிஷாவுக்கு விழுந்தது 5 ஓட்டு, இப்போத்தான் வனிதாகிட்ட கேட்டுட்டு வரேன். அப்போ இன்னும் 3 பேரு யாருங்க என அப்பாவியாய் கேட்டான் சரவணன். அவசரப்படறீயே கண்ணா, அஞ்சையும் போட்டது நானு, எனக்கே காது குத்தறியா என சரவணன் கழுத்தை உதய் பிடிக்கப் போக சரவணன் தலை தெறிக்க ஓட ஆரம்பித்தான். இன்னும் சரவணன் கம்பெனிக்கு திரும்பி வரவில்லையென்று கேள்வி...

~தொடரும்.

Thursday, August 03, 2006

நிஜமல்ல, கதை!

Part 2 Part 3

உதய் (விடுங்களேன், கதையிலயாவது ஹீரோவா இருக்க விடுங்களேன்...) அலுவலகத்தில் என்ட்ரி குடுத்ததும் பார்த்தது நீளமான கூந்தல். ஆஹா, முடியே இவ்வளவு சீரா அழகா இருக்கே, முகம் எப்படி இருக்கும் என கூந்தலின் பின்னாலே போனால், உதய், ட்ரிப் எப்படி இருந்தது, உன் சீட் அந்தப் பக்கம் இல்லை, இந்தப் பக்கம். 3 வாரமா ஆபீஸ் பக்கம் வராம நிறைய மெயில் வந்திருக்கும், அதை பார்த்து முடி, பிராஜெக்ட் ஸ்டேட்டஸ் நான் உனக்கு அதுக்கப்புறம் தரேன் என என் பிராஜெக்ட் மானேஜர் சாலினி உதயைத் தள்ளிக் கொண்டு போய் ஒரு சீட்டில் உட்கார வைத்தார். திரும்பி பார்த்தால் கூந்தல் அழகி எஸ்கேப். இந்த ஃப்ளோரில்தான் இருக்கப் போவது, பார்த்துட்டா போச்சு என மெயில் பார்க்க திரும்பி விட்டான்.

உதய், ரொம்ப பிஸியா? அவன் ஷேர் மார்க்கெட்டில் விட்ட சொத்தெல்லாம் எப்ப திரும்பி வரும் என கன்னத்தில் கை வைத்து பார்த்துக்கொண்டிருக்கும் போது சாலினி கேட்ட கேள்வி இது. கூடவே என் கூந்தல் அழகி! கொஞ்சம் பிஸி, ஆனா நீங்க கேட்டா வேலை இல்லைன்னுதான் சொல்லுவேன் சாலினி என்றான் உதய். ஆஹா, பொங்கு சனி ஆரம்பமாயிடுச்சு. குவாலிட்டி, C, C++, ஜாவா எது கேட்டாலும் ஓஓஓ... தெரியுமேன்னு சொல்லணும்ன்னு முடிவு பண்ணி சாலினி பார்க்காத போது ஹாய் என்றான் உதய். இது நிஷா, உன் பிராஜெக்ட்டுக்கு ஆள் வேணும்ன்னு கேட்டாயில்லையா? இவளுக்கு ஜாவா தெரியாது, நீ சொல்லிக் குடுத்து ரெடி பண்ணிக்க, சரியா? என சாலினி கிளம்பிவிட்டார்.

நிஷா, ஜாவா ரொம்ப ஈசி. நான் இருக்கேன், கவலைப்படாதே. அப்புறம், நீ எந்த ஊரு நிஷா? கலக்கிட்டடா உதய், நல்ல ஆரம்பம் பாதி வழி போய் சேர்ந்த மாதிரி என மனதுக்குள் நினைத்துக் கொண்டான். நான் திருவனந்தபுரம், ஆனா அப்பா, அம்மா தமிழ் என்றாள் நிஷா.. அப்படியா நிஷா, நாம ரொம்ப நெருங்கி வந்துட்டோம், நான் கூட உங்க ஊருக்கு போற வழிதான். அப்படியா, நீங்களும் கேரளாவா, கொல்லமா? என ஆச்சர்யத்துடன் கேட்டாள். இல்லை, போற வழியில... ஈரோடு. ஈரோடு திருவனந்தபுரம் போற வழியிலதான் இருக்கு என சிரித்துக் கொண்டே ஸ்டைலாக பார்த்தான். சரி, இப்பவே பாடத்தை ஆரம்பிக்கலாம். ஜாவா முதல்ல கத்துக்கறக்கு முன்னாடி நாம ஏன் இந்த வேலையை பண்றோம்ன்னு தெரிஞ்சுக்கணும்ன்னு ஆரம்பித்து வெட்டியாய் ஒரு ஒன்னே கால் மணி நேரம் பேசினான். 3 நிமிஷம் பேசறக்கு 3 நாள் தயார் பண்ணனும், ஆனா 3 மணி நேரம் பேசறதுக்கு ஒன்னுமே பண்ணத் தேவை இல்லை என்பதை மிகச் சரியாக நிருபித்து விட்டு நிஷா, வாயேன் போய் காஃபி சாப்பிட்டு வந்து பேசலாம் என்றான்.

உதய் விட்ட ஜொள்ளில் ஆடிப் போன நிஷா, என் ஃபிரெண்டு சுருதி வரேன்னு சொன்னாள், அவளையும் கூப்பிட்டுக்கட்டுமா என ஒரு பாதுகாப்பு வளையத்துக்குள் போனாள். ஒரே கல்லுல... ஏனோ காதலா காதலா டயலாக் மனதில் வந்து போனது உதய்க்கு. ஓ, கண்டிப்பா போலாமே? எங்க அந்த பொண்ணு? என அந்த இடத்தில் ஒரு குட்டி ஆறு ஓடத் தொடங்கி இருந்தது. சுருதியையும் சேர்த்துக் கொண்டு ஜொள்ளாற்றுப் படையை படைக்க ஆரம்பித்தான் காஃபி ஷாப்பில். வந்த வேகத்தில் கூகிளில் தடவி, ஒரு நாலைந்து நல்ல டுட்டோரியலிருந்து உருவி ஒரு டிரெயினிங் மெட்டீரியல் ரெடி பண்ணினான். நிஷா, இது உனக்காகவே நான் பண்ணது, படிச்சிட்டு நாளைக்கு ஏதாவது கேள்வி இருந்தா கேளு. நீ எப்போ வீட்டுக்கு போற? இன்னொரு முறை காஃபி என இழுத்துக் கொண்டு போய்விடுவான் என மனதுக்குள் நினைத்தாளோ எண்ணவோ, இதை பிரிண்ட் எடுத்துட்டு உடனே கிளம்பிருவேன், வெளிய கொஞ்சம் வேலை இருக்கு என்றாள். சொக்கா, நீ எப்பவும் என்கூடத்தான் இருக்கிறாய் என மனதுக்குள் துள்ளிக் குதித்து விட்டு ஓ, அப்படியா? வா எங்கூட பைக்கில போயிடலாமே? என்றான். இல்லை, இல்லை... சுருதி வரேன்னா, நான் அவள் கூட போய்க்கிறேன் என மான் மாதிரி துள்ளி ஓடினாள். சுருதி, உன்னை முதலில் ஊறுகாய்ன்னு நினைச்சேன், நீ மொத்த சாப்பாட்டுக்கும் உலை வைக்கிறயே, இரு உன் லீடரை கொஞ்சம் ஸ்குரூ ஏத்தி விடறேன் என மனதுக்குள் கருவிக் கொண்டான் உதய்.

~தொடரும்.

Monday, March 13, 2006

கருவாச்சி காவியம் - அத்தியாயம் 5

ஆனந்த், சுருங்கச் சொல்லி விளங்க வைப்பது இவனுக்கு பிடிக்கவே பிடிக்காத ஒன்று. ஹாஸ்டலில் இருந்து கிளாஸுக்கு நடக்க ஆகும் 5 நிமிடத்தை 50 நிமிடம் சத்யஜித்ரே படம் மாதிரி சொல்லுவான். திருக்குறள் பிடிக்காததற்க்கு காரணமே அது மிகவும் சிறியதாக இருப்பதால்தான் என டூப் விட்டு திரிவான். உண்மையில் விகடன் முழுதாய் எழுத்துக் கூட்டி படிக்க அவனுக்கு ஒரு நாள் பிடிக்கும். துள்ளாத மனமும் துள்ளும் படத்தில் ஐஸ் ஹவுஸ்க்கு வழி சொல்லும் பாரிக்கே இவன் வழி சொன்னால் தலை கிறுகிறுத்துவிடும்.

ஆனந்த் எப்படியோ புது புயலின் பெயர் சாரதா என தெரிந்து வைத்திருந்தான். எல்லோருக்கும் முன்னால் அவளிடம் பேசி அவளை பட்டா பூமி ஆக்கி விடவேண்டும் என்ற எண்ணத்தில் முதல் வரிசையில் உக்கார்ந்து இருந்தான். சாரதா பாரதிராஜா படத்தில் வரும் தேவதை மாதிரி வெள்ளை உடையில் வந்திருந்தாள். ஏகப்பட்ட எதிர்பார்ப்புடன் வந்திருந்த ஆனந்தின் முகம் அவளை பிடிக்கவில்லை என காட்டிக் கொடுத்தது.

வேலுவுக்கு தான் ஒரு பெரிய ரவுடின்னு நினைப்பு. அவன் உருவத்துக்கும் அவன் செய்யும் சேட்டைகளுக்கும் சம்பந்தமே இருக்காது. பெண்கள் ஒரு அடி அடித்தால் நிலத்துக்குள் புதைந்து விடுவது போல் இருந்து கொண்டு சடையைப் பிடித்து இழுப்பது, அவனைவிட ரெண்டு அடி உயரமுள்ள ஜூனியரை ராகிங் செய்வது என வயதுக்கு மீறிய செயல்கள் செய்வது மட்டும் பிடிக்கும். தன்னுடைய ஆந்தை குரலில் உலகில் ஏழல்ல அதிசயங்கள் வாய் பேசும் பூவே நீ எட்டாவது அதிசயமே என அவளை ஐஸ்வர்யா ரேஞ்சுக்கு உயர்த்தி பாடி வைத்தான். சாரதா வகுப்புக்கு புதிது என்பதால் சும்மா முறைத்து மட்டும் வைத்தாள் இல்லை இவன்கூட எல்லாம் எதற்க்கு சாகவாசம் என நினைத்தாளோ என்னவோ.

சின்ன ராசுவுக்கு ஆனந்துடன் ஊர் வம்பு பேசாமல் நைட் தூக்கமே வராது. யார் யாருடன் வெளியே சுற்றுகிறார்கள் என்பதை ஆனந்த் டேட்டாபேஸில் பார்த்துதான் தெரிந்து கொள்ளவேண்டும். டேய் ஆனந்த், என்னடா சைலண்ட்டா இருக்க என்ன மேட்டர் என சின்ன ராசு சாம்பிராணி புகை போட்டுவிட்டு முகத்தை அப்பாவி மாதிரி வைத்துக் கொண்டான். இல்லடா அது வந்து என ஆனந்த் ஆரம்பித்தவுடன் சின்ன ராசுவுக்கு ஜாக்பாட் அடித்த ஃபீலிங். ஆஹா, இன்னும் ஒரு மணி நேரத்துக்கு நல்லா பொழுதுபோகும் என மற்ற அடிப்பொடிகளுக்கும் சிக்னல் கொடுத்தான்.

எல்லோரும் சுற்றி உட்கார்ந்து கொள்ள, சாரதா இன்னைக்கு வெள்ளை கலர் சுடிதார் போட்டு வந்தால்ல, அது அவளுக்கு நல்லாவே இல்ல. அவளோட டார்க் கலருக்கு அது சூட் ஆகவே இல்லை. அப்படியே வெள்ளை இருந்தாலும் மத்த கலர் எல்லாம் தூவின மாதிரி சுடிதார் போட்டிருந்தா நல்லா இருக்கும் என ஃபேஷன் டெக்னாலஜி 4 வருடம் படித்த மாதிரி பேசிக் கொண்டே இருந்தான் ஆனந்த். டேய் விடுடா, அவகிட்ட இருந்த ஒரே துவச்ச சுடிதார் அதாத்தான் இருக்கும். நீ ரொம்ப ஃபீல் பண்ணாத என சின்ன ராசு சமாதானம் சொன்னான்.

டேய் ஆனந்த், நானும்தான் அவளை பார்த்தேன். எங்க ஊர் மாரியம்மன் சிலைக்கு எண்ணெய் பூசி வெள்ளை சேலை கட்டின மாதிரி இருந்தா, கருப்புதாண்டா அழகு என ஒப்புக்கு சொல்லி வைத்தான் சின்ன ராசு. ஆனந்தை ஏற்றி விடுவதாக நினைத்துக் கொண்டு சின்ன ராசு சொன்ன இந்த பொய் அவனுடைய மீதியுள்ள காலேஜ் வாழ்க்கை முழுவதையும் வெறி நாய் மாதிரி துரத்தப் போகிறது என்பது அவனுக்கு தெரியவில்லை.

-தொடரும்.

Friday, March 10, 2006

கருவாச்சி காவியம்

கருவாச்சி காவியத்துக்கு கிடைத்த வரவேற்ப்பைப் பார்த்து அசந்து போய்விட்டேன். மொத்தமே 2 கமெண்ட், அதில ஒன்னு நான் போட்டது.எண்ணெயை தேச்சுட்டு மணலில் புரண்டாலும் ஒட்டறதுதான் ஒட்டும். ஒரிஜினல் கருவாச்சி காவியத்துக்கு இதனால் பெரும் இழுக்கு நேரும் என நினைத்து அட போடா, இதெல்லாம் ஒத்து வராது என கருவாச்சி காவியத்தை மூட்டை கட்டி விட்டு நான் உண்டு என் எக்ஸாம் உண்டுன்னு படிக்கப் போயிட்டேன்.

அப்புறம்தான் யோசித்தேன், கஜினி 17 முறை படையெடுதிருக்கான். விக்கிரமாதித்தன் இன்னும் வேதாளத்தை பிடிச்சானேனு தெரியலை, சிந்துபாத் கன்னித் தீவை வீட்டு வெளிய வந்தானானு இன்னும் தெரியல. ஆனா அவங்க இன்னும் டிரை பண்ணிட்டு இருக்காங்கன்னு பாட்டிகள் கதை சொல்லிட்டும், சன் டிவியில் தொடராவும் வந்துட்டு இருக்கு. அதெல்லாம் விட, 26 வருஷமா மாட்டாத ஃபிகர் இன்னைக்கு மாட்டிரும் நாளைக்கு மாட்டிரும்ன்னு நாக்கை தொங்கப் போடாமல் இன்னும் தேடும் நான் இல்லை என என் மனசாட்சி சொல்லி என்னை உசுப்பேற்றி விட்டது.

அது மட்டும் இல்லாமல் கூடவே சுத்தும் இன்னொரு மனசாட்சியும் எத்தனைதான் பொண்ணை பார்த்தாலும் புதுசா ஒரு பொண்ணு வந்தா நீ என்ன பார்க்காமல போற? ஃபிகரா இல்லையாங்கறது எல்லாம் அப்புறம் என தத்துவம் சொல்லியது. அதானே, ஒருத்தரும் பின்னூட்டம் எழுதலை அப்படிங்கறதுக்காக யாரும் படிக்காம இல்லைன்னு நானே என்னை தேற்றிக்கொண்டேன். இப்போதைக்கு நான் கருவாச்சி காவியம் எழுதப் போவது இல்லை ஆனால் கட்டாயம் எழுதி முடிப்பேன் என சபதம் செய்துள்ளேன்.

பின்குறிப்பு:- கதையை எப்படி நகர்த்துவது என தெரியாமல் நட்டுக்கிட்டு நிக்குதுன்னும் பையன் இன்னும் கதாநாயகி பெயர் வைக்க முடியாமல்தான் கதை எழுதவில்லைன்னு யாரவது சொன்னா தயவு செய்து நம்பாதீங்க.

Friday, March 03, 2006

கருவாச்சி காவியம்- அத்தியாயம் 4

இந்த ஒரு வருட காலத்தில் சின்ன ராசு சைட் அடிக்காத பெண்களே காலேஜில் இல்லை என்பதை விட சின்ன ராசு சைட் அடிக்கும் பெண்களெல்லாம் உடனே அடுத்தவர்களுடன் செட்டில் ஆகிறார்கள் என்ற செய்தி மற்றவர்களிடம் நன்றாக பரவியிருந்தது. டேய் சின்னராசு, எனக்கு அந்த பொண்ணு மேல ஒரு இதுடா, நீ எப்படியாவது அவகூட ஒரு வாரம் பேசிட்டு இரேன் என்று யாரும் வந்து சொல்லாததுதான் பாக்கி. நொந்து நூலாகி விட்டிருந்தான் சின்ன ராசு.

இரண்டாவது வருடத்தில் சில சிறிய மாற்றங்கள் சின்ன ராசுவின் கூட்டத்தில். மெக்கானிக்கல் டிபார்ட்மெண்டில் சில புதிய நண்பர்கள் சேர்ந்தாலும் ஒரு பெண்கூட மெக்கானிக்கல் டிபார்ட்மெண்டில் இலையென்பதால் டிபார்ட்மெண்ட் வாரியாக சின்ன ராசு எல்லா மக்களிடமும் தொடர்பு வைத்திருந்தான். அந்த நண்பர்களை பார்க்கும் சாக்கில் ஃபிகர்களை நோட்டம் விடலாம் என்பதுதான் உண்மையென்றாலும் முதல் வருடம் எல்லோருக்கும் பொதுவான பாடம் என்பதால் ஒன்றாக கும்மியடித்ததை மறக்க முடியவில்லை என கதை விட்டுக்கொண்டிருந்தான்.

அதே நேரம் சின்ன ராசு உருப்படியாவதற்கான சூழலும் அந்த புதிய நண்பர்கள் வட்டத்தில் உருவாகி இருந்தது. மற்றவர்கள் எல்லாம் கம்ப்யூட்டர் கிளாஸ் சென்று சி, சி++ படிக்க தனியாக உட்காரப் பிடிக்காமல் இவனும் சேர்ந்திருந்தான். டேய், இன்னைக்கு கிளாஸ் எப்படி இருந்தது எனக் கேட்டால் செங்கனி மேடம் இன்னைக்கு சூப்பர டிரெஸ் பண்ணிருந்தாங்க, எங்கதான் சுடிதார் எடுக்கராங்களோ என சொல்லிக் கொண்டிருந்தவன் மெல்ல மெல்ல படிக்க ஆரம்பித்திருந்தான். நண்பர்கள் எல்லாம் இவன் படிப்பதற்கான காரணம் சி சொல்லிக் கொடுக்கும் பெண்ணே ஒழிய சி மேல் உள்ள ஆர்வத்தில் இல்லை என சத்தியமாக நம்பினார்கள்.

டேய் கண்ணா, எலெக்ட்ரிக்கல் மேடம் உயிரை எடுக்காறாங்கடா, எதாவது பண்ணுடா என நைசாக சின்ன ராசு கண்ணனின் காதை கடித்தான். ஒரு ஃபிகர் கும்பல் கிளாஸை கடந்து போனதுதான் அதற்க்குக் காரணம் என தெரியாத அப்பாவி கண்ணன், "மேரியம்மா, மேரியம்மா, உன் கிளாஸ் போரு அம்மா போரு அம்மா" என கரகாட்டக்காரன் ராமராஜன் மாதிரி பெருங் குரலெடுத்து பாட ஆரம்பித்து விட்டான். அது வரைக்கும் சாந்தமாக இருந்த லெக்சரர் மேரிக்கு இவன் பாட்டைக் கேட்டதும் சாமி வந்து விட்டது. இப்பொ யாரு பாடுனாங்கண்ணு சொல்லும் வரை நான் உங்களை வெளியே விட மட்டேன் என சொல்லி அனைவரையும் எரிக்கும் பார்வையில் பார்க்க ஆரம்பித்தார்.

டேய் கண்ணா, நான் உன்கிட்ட என்ன சொன்னேன். நீ இப்படி பழிவாங்கிட்டயேடா என ஃபிகர் பார்க்க முடியாத வருத்ததில் சின்ன ராசு புலம்ப ஆரம்பித்தான். மேரி மேடமை சமாதனப் படுத்த சீட்டுக் குலுக்கியதில் சின்ன ராசு பெயர் மாட்டியது. கையில் காலில் விழுந்து வாழ்க்கையில் கேட்கக் கூடாத வார்த்தையெல்லாம் கேட்டு சமதானப்படுத்தியிருந்தான் சின்ன ராசு. ஆனால் என்னவோ இவன் சொன்னால் எல்லாம் நடக்கும் என்பது மாதிரி மக்களிடம் உதார் விட்டுக் கொள்ள ஆரம்பித்தது அன்று முதல்தான்.

லேட்ரல் என்ட்ரியாக ஒரு பெண் மெக்கானிக்கல் டிபார்ட்மெண்டில் சேர்ந்த செய்தி காட்டுத் தீ போல் பரவியிருந்தது காலேஜ் எங்கும்.

--தொடரும்.

Tuesday, February 21, 2006

கருவாச்சி காவியம்- அத்தியாயம் 3

கெமிஸ்டிரி லேபில் பொங்கல் வைத்ததற்க்குப் பின்னால் லேப்க்கு போவதுன்னா சின்ன ராசுவுக்கு முதலில் பயமாக இருந்தாலும் அங்கே மட்டும்தான் நின்று நிதானமாக ஃபிகர்களை சைட் அடிக்க முடியும் என கண்டுபிடுத்து வைத்திருந்தான். Physics புரொஃபசர் வெங்கடாசலம் பக்கத்து ஊர்க்காரராய் இருந்ததால் நன்றாக சோப்பு போட்டு வைத்திருந்தான். அவர் மிக அற்புதமாக வகுப்பு எடுத்தாலும் லேபில் எல்லோருக்கும் எட்டிக்காயாய் இருந்தார்.

நண்பர்கள் எல்லோருக்கும் சின்ன ராசு பண்ணும் கூத்து தெரிந்து இருந்தாலும் புரொஃபசர்க்கு பயந்து அடக்கி வாசித்தார்கள். அன்புவுக்கு மட்டும் இதை கேட்டதற்க்கு அப்புறம் சும்மா இருக்க முடியவில்லை. தமிழில் இது வரைக்கும் நடித்த அனைத்து கதாநாயகிகளுக்கும் ஒரு நாளவது ரசிகனாக இருந்திருக்கிறேன். கூட படிக்கிறவங்களை சைட் அடிக்காமல் விட்டால் அவர்களது சாபம் என்னை சும்மா விடாது என்றான்.

ஸ்பெக்ட்ரோ மீட்டர் எக்ஸ்பெரிமென்ட் என்றாலே எல்லோரும் நடுங்குவார்கள். அதில் சிலிட்டை தேடி கண்டுபிடிப்பதற்க்குள் பாதி உயிர் போய் விடும். அன்புவுக்கு வகையாக அது வந்து மாட்டியது. ஸ்பெக்ட்ரோ மீட்டரை செட் அப் செய்கிறேன் என்று பாதி நேரம் சிந்துவையும் சுமதியையும் மாறி மாறி பார்த்துக் கொண்டிருந்தான். சின்ன ராசு நீ உண்மையிலேயே என் கண்ணை திறந்து விட்டாய் என நடுவில் வந்து பாராட்டு பத்திரம் வாசித்து சென்றான்.

அந்த சமயத்தில் அன்புவின் கெட்ட நேரம் ஸ்பெக்ட்ரோ மீட்டர் மேல் ஏறி கால் மேல் கால் போட்டு உக்கார்ந்து கொண்டு புரொஃபசரை அங்கு வர வைத்திருந்தது. அவர் பேச ஆரம்பிததால் மற்றவர்களுக்கெல்லாம் சந்தோஷமாக இருக்கும். ஆனால் பதில் சொல்பவர்க்களுக்குத்தான் பாதி உயிர் போய் விடும். என்னப்பா, சிலிட் தெரியுதா என அவர் கண்ணாடியை துடைத்துக் கொண்டே கேட்டார். இவனும் தெரியுது சார் என்றான்.
என்னுடைய 25 வருட சர்வீசில் லைட் போடாமல் ஸ்பெக்ட்ரோ மீட்டரில் சிலிட் பார்த்தவன் நீதான் என்றார். அன்புவுக்கு அப்பொழுதுதான் உரைத்தது சைட் அடிக்கும் மும்மரத்தில் செட் அப் செய்யவே இல்லை என்று. இவன் சைட் அடித்துக் கொண்டிருந்ததை அவர் கவனித்து விட்டார். நீ மட்டும் வாழ்க்கையில் உருப்பட்டு விட்டால் எங்கிருந்தாலும் வந்து சொல்லு என் பேரை மாற்றிக் கொள்கிறேன் என சவால் விட்டார்.

அன்பு, எல்லோருக்கும் சான்ஸ் கிடைக்கததால்தான் இன்னும் நிறைய பேர் நல்லவங்களாக இருக்காங்க. அதனால நீ இதை எல்லாம் மனசுல வச்சுக்காதே என எல்லாம் கரைத்துக் குடித்தது மாதிரி உபதேசம் பன்னினான் சின்ன ராசு. நாளைக்கு நாம சிந்து மேல ராக்கெட் விடுவோம் என அன்பு அடுத்த சவாலுக்கு ரெடியானான். அன்பு, நீ மட்டும் கரெக்டா ராக்கெட் விடல அது பக்கதுல இருக்கற தனலட்சுமி மேல விழும். தனலட்சுமியோட அண்ணன் ஃபைனல் இயரில் பெரிய ரவுடியாம். அப்புறம் உன்பாடு திண்டாட்டம்தான் என சின்ன ராசு எச்சரித்து வைத்தான்.

நினைத்தது போலவே அன்பு தனலட்சுமி மேல் ராக்கெட் விட்டு தொலைக்க ஒரு வாரம் முழுவதும் தனலட்சுமியின் அண்ணன் அடித்து விடுவான் என்று பேயடித்த மாதிரி திரிந்தான்.

- தொடரும்.

Friday, February 17, 2006

கருவாச்சி காவியம்- அத்தியாயம் 2

அப்படி இப்படி என்று ஊரிலிருந்து 80 கிமீ தள்ளி இருக்கிற காலேஜில் சேர்ந்தாகி விட்டது. முதன் முதலில் பார்த்த அனைவரும் நண்பர்கள் ஆகி விட்டார்கள். அருண்,அன்பு, ஜூலிய்ஸ், பூவராகவன், கௌதம் ,வெங்கி, கார்த்தி, செந்தில், தியாகு, விஜய், மோகன், நாதன், வினோத் என பெரிய கூட்டம் சேர்ந்து விட்டது. அசைன்மென்ட், லேப் என ஆயிரம்தான் இருந்தாலும் உலகமே அவர்களுக்காக என எப்பொழுதும் கலகலப்பாக இருந்தார்கள்.

என்னை பார்த்த அனைவரும் லேசாக சிரித்து வைத்தார்கள். அது நான் போடும் பூ போட்ட சட்டையை பார்த்து என நண்பர்கள் சொன்ன போது எனக்கு என் அம்மாவின் மேல் கோபமாக வந்தது. அடுத்த முறை ஊருக்கு போகும் போது அண்ணனின் சட்டையை எடுத்து வர வேண்டும் என்று முடிவு செய்து விட்டேன்.

சின்ன ராசுவான எனக்கு இங்கிலீஷில் வேகமாக மற்றவர்கள் பேசினால் பேதி வந்த மாதிரி இருந்தது. அன்று கெமிஸ்ட்ரி லேபில் ஆசிட்டை மேலும் கீழும் ஊற்றி பொங்கல் வைத்து விட்டதால் போகிறவர்கள் வருகிறவர்கள் எல்லாம் நான் அங்கேயே மூச்சா போக வேண்டும் என்று நினைத்தார்களோ என்னவோ என் வரலாற்றைக் கேட்டு டார்ச்சர் செய்தனர். எப்போதுமே என் கூட மட்டும் தான் சனி பகவான் இருப்பதாக நான் நினைக்க ஆரம்பித்தது அன்று முதல் தான்.

என் நண்பர்கள் எல்லாம் ஹாஸ்டலுக்கு சென்று விட்டார்கள். கிளாஸிலேயெ நல்ல ஃபிகர் சிந்து. கிளாஸில் பாதி பேர் அவள் நிற்பது, நடப்பது, பேசுவது என விவஸ்தை இல்லாமல் அளவெடுக்க முடிவதை எல்லாம் எடுத்துக் கொன்டிருந்தார்கள். அவள் இதை எல்லாம் கூடவே இருந்து பார்த்து விட்டு எதுவுமே நடக்காதது போல் ஃபிசிக்ஸ் அசைன்மென்ட் கௌதம் கிட்ட கூடுக்க சொன்னாங்க. யாரு அது? என்றாள். நான் இருந்த நிலைமையில் விளக்கி வியாக்ஞானம் கொடுக்க மனம் இல்லாததால் கொடு என நானே வாங்கிக் கொண்டேன்.

முகமெல்லாம் ஃபேர் & லவ்லி போட்டுக் கொண்டு நான் சிகப்பாக இருக்கிறேனா என ஒருவன், இன்னும் கொஞ்சம் டிரை பண்ணினா அர்னால்டு மாதிரி இருப்பேன் என இன்னொருவன், ஒரு பெண்ணிடம் தான் பேசியதை ஒருவன் சொல்ல ஒரு கும்பல் பொறாமையில் வெந்து கேட்டுக் கொண்டு என்று ஹாஸ்டல் களை கட்டியிருந்தது.

எங்கள் மக்கள் எல்லாம் வழக்கம் போல் ஒன்றாக உக்கார்ந்து எதோ பேசிக் கொன்டிருந்தார்கள். நான் கௌதமிடம் சிந்துவின் அசைன்மெண்ட் கொடுத்து விட்டு உன்னை யாருன்னு தெரியாதுன்னுட்டா அதான் நானே வாங்கிட்டு வந்துட்டேன் என்றேன். மக்கள் எல்லாம் உலகமே இடிந்து விழுவது போல சிரித்தார்கள். நான் எதாவது தப்பாக சொல்லி விட்டேனா என நான் சொன்னதையே திரும்ப சொல்லி பார்த்தேன்.

கௌதம் மட்டும் பேய் முழி முழிப்பதை பார்த்து எனக்கு ஓரளவுக்கு போன உயிர் திரும்பி வந்து விட்டது. அப்புறம்தான் தெரிந்தது, சிந்து இவனிடம் உருகி உருகி பேசிக் கொண்டு இருந்தாக நூல் விட்டுக் கொன்டு இருந்தான் என்று. அப்புறம் நடு இரவில் அவன் தமிழ் சினிமாவில் இருக்கும் எல்லா சோக பாடல்களையும் பாடிக் கொண்டிருந்தான் என்பது தனிக்கதை.

-தொடரும்

Monday, February 13, 2006

அத்தியாயம் 1

அப்படி இப்படி என்று இஞ்சினியரிங் காலேஜ் சீட் கிடைத்து விட்டது. மனதுக்குள் எதோ சாதித்த மாதிரி ஒரு நினைப்பு. இப்பொழுதுதான் முதன் முறையாக வீட்டை விட்டு வெளியில் தங்கி படிக்கும் வாய்ப்பு கிடைத்துள்ளது. பத்தாம் வகுப்பு நன்றாக படித்தால்தான் +2 முதல் வகுப்பு கிடைக்கும் என மாங்கு மாங்கு என படித்து கரை ஏறியதும் +2 நன்றாக படித்தால்தான் நல்ல இஞ்சினியரிங் காலேஜ் சீட் கிடைக்கும் என சொல்லி என்னை ஏமாற்றி விட்டதாக ஒரு சின்ன ஃபீலிங் இருந்து கொண்டே இருந்தது.

என்னோடு சுற்றும் பசங்களெல்லாம் பக்கதில் இருந்த கலைக் கல்லூரிக்கு சென்று கொன்டிருந்தார்கள். அவர்கள் தினமும் சொல்லும் கதையை கேட்டு காலேஜ் என்பது ஜாலியாக இருக்க கட்டியிருக்கிறார்கள் என்றும் காலேஜ் போய் படிக்க வேண்டியது இல்லை என்றும் சொன்னதால் மனதுக்குள் இனித்தது.

பெரியப்பா களத்து மேட்டில் மாட்டுக்கு தவிடு காட்டிக் கொண்டிருந்தார். சின்ன மகன் ஊரில் இரண்டாவது இஞ்சினியர் என்பதில் அவருக்கு ஏக மகிழ்ச்சி.ஏன்டா சின்ன ராசு, இஞ்சினியருக்கு படிச்சுட்டு எனக்கு தார்ஸ் வீடு கட்டி தருவையில்ல என அப்பாவியாக கேட்டார். பெரியப்பா, அதுக்கு சிவில் இஞ்சினியரிங் படிக்கணும்.நான் மெக்கானிகல் இஞ்சினியர் என கோபமாக சொன்னேன்.

டேய், நம்ம அழுக்கு முருகன் மாதிரி மெக்கானிக் ஆக போறியா நீ? அதுக்கா உன்னை உங்க அப்பன் அவ்வளவு படிக்க வைக்கிறான்.பெரியப்பா, உனக்கு எத்தனை தடவை சொல்ல. அழுக்கு முருகன் டிவிஸ் 50 ரிபேர் தான் பண்ணுவான். ஆன நான் டிவிஸ் 50 மாதிரி புது மொபெட் கண்டு பிடிப்பேன் என சொல்லும் பொழுது என் முகம் பிரகாசித்தது.

பெரியப்பா கை கழுவிக் கொண்டே சொன்னார், சரி சரி நல்லா படிக்கணும், அங்கே 50 ரூபாய் இருக்கு எடுத்துக்கோ, பெரியம்மா கிட்ட சொல்லிராதே. ஏற்கனவே சுற்றமும் நட்பும் கொடுத்த 250 ரூபாய் பாக்கெட்டில் இருந்தது. பாட்டியையும் பார்த்து விட்டால் நாளைக்கு காலையில் வண்டி ஏறும் பொழுது வீடு வீடாக ஓட வேண்டியிருக்காது.

பாட்டி வரப்பில் இருந்த கீரை பறித்துக் கொண்டு இருந்தது. பாட்டியின் காலில் விழுந்தேன் ஏதாவது தேறும் என்ற நம்பிக்கையில். நம்பிக்கை வீண் போகவில்லை. பாட்டி எட்டாய் மடித்த100 ரூபாய் கொடுத்து விட்டு அண்ணன் மாதிரி ஊர் சுத்தத கூடாது என சொல்லிவிட்டு என்னமோ யோசித்தாள். என் பெரியப்பா மகன் +2 முதல் தடவை எழுதி 10 வருடம் ஆகிறது. இன்னும் பாஸ் ஆகாமல் ஊரெல்லாம் நல்ல பேர் எடுத்து வைத்திருந்தான். பாட்டி அருகிலிருந்த கருப்பராயன் கோவிலுக்கு கூட்டி போய் சூடம் பற்ற வைத்து சாமி கும்பிட்டாள். மது, மாமிசம் சாப்பிட மாட்டேன் என சத்தியம் செய்ய சொன்னாள்.அண்ணனை மனதுக்குள் திட்டிய படியே சத்தியம் செய்து விட்டு வீட்டுக்கு நடையைக் கட்டினேன்.

-தொடரும்

Tuesday, February 07, 2006

கருவாச்சி காவியம்

என் இனிய தமிழ் மக்களுக்கு வணக்கம்!!!

கடந்த முறை சென்னை போன பொழுது நன்பர்களுடன் கோவளம் கடற்கறைக்கு சென்றிருந்தேன். சற்று நேரம் நான் ஆழ்ந்த சிந்தனையில் இருந்தேன்.வைர முத்து மீசையை தடவிகொண்டு இருப்பது மாதிரி உக்கார்ந்து இருந்தால் எப்படி இருக்கும் அப்படி உக்கார்ந்து இருந்தேன்.உதய் பாரேன் கருவாச்சி காவியம் எழுதிட்டு இருக்கும் வைர முத்து மாதிரி உக்காந்துட்டு இருக்கான்னு என் நண்பன் பார்த்திபன் மற்ற மொக்கை மக்களிடம் சொன்னான். (யாருக்கும் புரியலன்னா மன்னிச்சுக்கங்கண்ணா, நதி மூலம், ரிஷி மூலம் ஆராயக்கூடாதுன்னு பெரியவங்க சொல்லிருக்காங்க, இல்லையா?)

From that time itself I thought why I can't write "Karuvachi Kaviyam". Even if it is not in the Vairamuthu, Sujatha level at least the "Mokkai Raasu" level in Vikatan. Appuram ennenavo karanathala ennala elutha mudiyala. Etho intha varam eluthalam adutha varam eluthalam-nnu nenaicha mudiyave illa. (yarum encourage pannarathe illa, Phone panni thitta mattum theriuthu.Kekutha Milwaukee-la?)

Ithu etho Cinema title vachittu appuram Kathai eluthara matter illa. Matter ellam 4 varushathukku Munnadiye ready ayiduchhu. Ana title thaan kidaikkala. (Vairamuthu munthittaru.) Ippavum avaru onnum thappa eduthukka mattarannu thairiyama nambi elutha poren.

Intha kathyil varum pathirangal matrum sampavangal anaithum karpanye. If anything coincide with GCT memories/people it is purely coincidence and this is not intended to hurt anyone.

Intha kathiyoda Hero Peru Chinna Raasu. Enga area-a la konjum common name ithu. Heroine vanthu vijay padathula vara heroine mathiri. Pattukku mattum vanth dance addittu poiduvanga (athukkappuram hero mattum thanniya dance adittu iruppannu yaro pesarathu kekkuthu, athukkelam anja matten naan.). Heroine peru innum vekkala. Enna avanga late entry kathai-la.

Athaan kathiye sollite appuram enna elutha pore nnu sollarengala? Tamil Cinema parthu parthu romba kettu poiteenga neenga...

Keep watching this blog. Ethavathu thittaramathri iruntha blog-la thittunga. (Kaikkra maram thaan kalladi padum nu enga patti solirukkanga.)