Showing posts with label கவிதை. Show all posts
Showing posts with label கவிதை. Show all posts

Sunday, February 18, 2007

உலகின்(ல்) உயிர்

மெயிலில் வந்த கவிதை இது.

On 2/18/07, Parthiban Subramanian wrote:

Only when the last tree falls,
Only when the last fish get caught,
Only when the last drop of water gets poisoned,
Then only you'll know,
You can't eat money.


எப்போதோ அவுட்லுக்கில் படித்தது; கவிதை சிறியதாயினும் அதன் உள்கருத்து மிக சிந்திக்கத்தக்கது. " Global Warming" மற்றும் " Environmental pollution" பற்றிய ஆய்வு கட்டுரையில் இடம் பெற்றிருந்தது.

எனக்கான வரையில் தமிழ்ப்படுத்தி உள்ளேன்.

கடைசி மரம் வேரற்றுச் சாய்ந்த பிறகு
தூண்டிலில் கடைசி மீனும் மாட்டிய பிறகு
மரணச் சுவையை சொல்லக் காத்திருக்கும்
கடைசி சொட்டு நீரும் விஷமேறிய பிறகு
பயமறியா மனிதனுக்கு பிறகுதான் தெரியும்

இனி காகிதப் பணத்தை உண்ண முடியாது என்று.

Monday, December 25, 2006

ஓற்றை முடி

என்னை என்னால்
நம்ப முடியவில்லை
என் முகத்தை பார்க்கவே
எனக்கு பிடிக்கவில்லை.
தினமும் உபயோகித்த
ஞாபகம் இருக்கிறது.

கை மீறி போய் விட்டது
இன்னமும் கல்யாணம்
வேறு ஆகவில்லை
ஊர் என்ன பேசுமோ?
அப்படியே மறைத்து
விட்டால்...
இல்லை கல்யாணத்துக்கு
முன்னால் சொல்லி விட்டால்...

-என் தலையில்
ஒற்றை வெள்ளை முடி!

Sunday, December 24, 2006

போய் வா!!!

என் வெற்றி
என் அழுகை
என் கோபம்
என் இயலாமை
என் சோகங்கள்
என் காதல்கள்

உன்னுடன் ஒத்துப் போகாதபோது
உன் செல்லச் சிணுங்கல்கள்
உன்னுடனான சின்னச் சண்டைகள்
உன்னால் சுருங்கிய
உறவுகளும் நட்பு வட்டங்களும்
உன்னால் குறைந்துபோன
தொலைபேசி
உரையாடல்கள்...

முகம் பார்த்து சிரிக்க மறந்து
சாட்டிங்கில் சிரிப்பு முகம்
காட்ட வைத்த உன்
கஞ்சத்தனம்...

அத்தனையையும்
கூட இருந்த
அமைதியாய் பார்த்தாய்
நீ...

நான் இழுத்த இழுப்புக்கு வராமல்
உன் பின்னால் என்னை
அலைய வைத்தாய்
ஒவ்வொரு முறையும்
ஜெயித்தது நீதான்...

என்னோடு நீ இருந்த
ஒவ்வொரு நாட்களும்
மறக்க முடியாதடி...

போய் வா 2006.

Thursday, November 16, 2006

குடைக்குள் மழை

வாசல் வரை வந்து
வழியனுப்பு விழா,
காருக்குள் அமர்ந்ததும்
உன் பறக்கும் முத்தம்,
என்னுடன் கை கோர்த்து
ஏரிக்கரையில்
நடை பயணம்...
செல்லச் சண்டையில்
மண்டையில் கொட்டு....

ஏய் பிசாசே,
யார் கண்ணுக்கும் தெரியாமல்
எனக்கு மட்டும் தெரியும்
வித்தையை
எங்கிருந்து கற்றாய்?

Tuesday, November 14, 2006

தூக்கம் தொலைக்கும் இரவுகள்

உன் முடிக்கற்றைகள்
விசிறியாய்...
உன் நினைவுகள்
தலையணையாய்...
உன் வார்த்தைகள்
தாலாட்டாய்...
உன் சிரிப்புகள்
போர்வையாய்...
ராட்சசி,
நானெப்படி உறங்குவேன்??

Monday, October 16, 2006

உள்ளாட்சித் தேர்தல் 2006

1. காலையில் வேட்பாளரின்
ஆவேச முழக்கம்
"சாதிகள் இல்லையடா மடையா".
இரவில் பக்கத்து ஊருக்கு
கூடுதல் பணப் பட்டுவாடா
அது வேறு சாதிக்காரர்கள்
இருக்கும் ஊராம்...

2. ஊருக்கு மட்டுமல்ல உபதேசம்
"ஸ்காட்ச்" உடன் ஊறுகாய்,
பழசை மறக்க மாட்டாராம் தலைவர்.

3. அனைத்து வேட்பாளர்களிடமும்
பணம் வாங்கியாயிற்று
யாருக்கு போடப் போகிறாய் ஓட்டு?
கேட்ட மனைவியிடம் சொன்னான்,
எல்லோருக்குந்தான்...
இவனுக ஜெயிச்சா
நாடு உருப்படவா போகுது.

Wednesday, August 23, 2006

கொடுத்தேனா இதுவரை???

டீச்சர் அடித்தார் என
பள்ளியை மாற்றினார்
எனக்கு வந்த காமாலைக்கு
அவர் பத்தியம் இருந்தார்
நான் பரிட்சை எழுத
எனக்கு முன் முழித்தார்


எனக்கெது பிடிக்கும் என
பார்த்து பார்த்து
செய்வதில்
என் அம்மாவுக்கு நிகர்
என் அம்மாதான்
ஊரெல்லாம் சொல்லிக்
கொண்டிருக்கிறேன்



நீ இப்படிச் சொல்ல
இதுவரை கொடுத்தேனா
ஒரு வாய்ப்பு???

Monday, August 21, 2006

அருமை...


நிலவின் அருமை
அமாவாசையில்,
வெளிச்சத்தின் அருமை
இருட்டில்.











குடையின் அருமை
வெயிலில்,
மார்கழியின் அருமை
சித்திரையில்.











அம்மாவின் அருமை
வைத்த குழம்பு
வாய்க்கு போகாமல்
நேரே குப்பைக்குப் போய்
பர்கர் சாப்பிடும் போது...