Friday, May 26, 2006

இட ஒதுக்கீட்டு பிரச்சனை

அடுத்து என்ன எழுதலாம் என் உக்கார்ந்தால் ஜொள்ளு உதய், லொள்ளு உதய் மற்றும் நல்ல உதய் என 3 பேர் என் முன்னாள் உக்கார்ந்தார்கள்.

ஜொள்ளு உதய்: அடுத்தது சேலையை பற்றித்தான் எழுதணும். ஏன்னா நம்ம ஜொள்ளுப்பாண்டி தாவணி பத்தி எழுதி அங்க வரவேற்ப்பு பிச்சிக்கிச்சு...

நல்ல உதய்: டேய், ஏந்தான் இந்த மாதிரியே பேசிட்டு இருக்க... எப்படி உதவலாம் - பார்ட் 2 இன்னும் வரலை. ஏன்? எதற்கு? எப்படி? ந்னு நான் 20 30 கேள்வி ரெடி பண்ணி வச்சிருக்கேன்... அதை போடலாம்.

லொள்ளு உதய்: ஏப்பா, இப்படியே நீ காலத்துக்கும் படத்தைப் போட்டு என்ன சுகத்தை கண்ட? ஒரு ஃபிகரா, ஒரு ஓசி பியரா? ஒன்னுக்கும் பிரயோசனம் இல்லை...இப்படியே நீ காலத்துக்கும் படத்தை போட்டு செத்து போயிரு, நாங்க ஒரு போட்டோ வாங்கி பூ போட்டு தினமும் கும்பிடுக்கறோம்

நல்ல உதய்: இவன் எப்பவுமே சத்தியராஜ் மாதிரி பேசி எவங்கிட்டயாவது வாங்கி கட்ட போறான். அப்ப நாந்தான் கூட இருக்கணும் ஹாஸ்பிடலில். இங்க பாரு உதய், நீ ஜொள்ளு உதய் சொல்லரது போடற இல்லை லொள்ளு உதய் சொல்லரது போடற. என்னை நீ சுத்தமாக கண்டுக்கறது இல்லை.

லொள்ளு உதய்: எதுக்கு இப்பொ ஒப்பாரி வைக்கிற? நாஞ் சொல்லரதுதான் போடறது இல்லை, எப்பவுமே நம்ம ஜொள்ளுக்கு தான் முதல் மரியாதை. அட, கோயில்ல கூட யாருக்கும் முதல் மரியாதை எல்லாம் கிடையாதுன்னு கலைஞர் உத்தரவு போடுட்டாரு. ஆனா, இங்க மட்டும் நம்ம ஜொள்ளு ராஜ்ஜியம்தான். இட ஒதுக்கீட்டு பிரச்சினை வெளிய மட்டும் இல்லை இங்கேயும்தான். நான் எழுத சொன்ன கருவாச்சி காவியம் பாதியில நட்டுக்கிடு நிக்குது, தெரியும்ல?

நல்ல உதய்: அப்போ பேசாம மூணு பிளாக் ஆரம்பிச்சிரலாம். பிரச்சினை முடிந்ததுல்ல..

ஜொள்ளு உதய்: ரொம்ப சரி, ஆனா அவனுங்க பிளாக் அப்டேட் பண்ணறியோ இல்லையோ, தினமும் என் பிளாக்ல கலரே கண் கண்ட தெய்வம், வடக்கத்தி பிகரும் நானும், கொடுத்து வைத்த T- சர்ட் ந்னு எதாவது வந்துட்டே இருக்கணும், சரியா???

லொள்ளு உதய்: பாரேன், அவன் சரியான்னு சொல்லுரது கூட ஹேமா சின்ஹா தலை சாய்ச்சுட்டு சொல்லரது மாரியெ சொல்லரான். இவன் உருப்பட மாட்டான். இவன் பேச்ச கேட்டன்னு வச்சுக்க பழனி பஞ்சாமிர்தம், மதுரை மல்லி ன்னு விவகாரமா எழுத உட்டடுருவான்.
என் பிளாக் பேரு என்ன வேணா வச்சுக்கோ, ஆனா, போட்டோ மட்டும் போடக் கூடாது. சும்மா போறவன் வரவனையெல்லாம் மானாவாரியா திட்டுனம்ன்னு வச்சுக்க, பிளாக் ஹிட் பிச்சுக்கிட்டு போகும், அப்புறம் தானியங்கு மறுமொழி மட்டுருத்தல் வசதி யாரு குடுப்பான்னு தெரிச்சுக்கிட்டு ஓடனும்.

நல்ல உதய்: இவனை கூட வச்சுக்குட்டு பேசவே பயமா இருக்கு. எங்காவது இவனை தள்ளிட்டு போயிடுங்கடா...

லொள்ளு உதய்: இதுதான் இளிவரல்.

நல்ல உதய்: டேய், நல்லத்தானட இருந்த, என்னென்னமோ பேசற, உன்மையிலயே பேய் எதுவும் புடிச்சிருச்சா???

லொள்ளு உதய்: அட இதுக்கே பயந்துட்டா எப்படி? பின் நவீனம், முன் நவீனம் கட்டுடைத்தல், நான் லீனியர், ரியலிஸம், சர்ரியலிசம், அங்கதம் ந்னு எத்தனை இருக்கு...

நல்ல உதய்: அய்யோ...

லொள்ளு உதய்: பாத்து பாத்து... இப்பவே செத்து போயிராத, நான் போட்டொ வச்சு
கும்பிடுவேன்னு வெளயாட்டுக்குத்தான் சொன்னேன்.

ஜொள்ளு உதய்: எதோ யோசனையில் இருந்து வெளியே வந்தவனாய், பழனி பஞ்சாமிர்தம் டைட்டில் கூட நல்லாத்தான் இருக்கு. 2 வாரத்துக்கு முன்னாடி பழனி போனப்ப பஸ்ல வந்த...

லொள்ளு உதய்: ஆரம்பிச்சுட்டான்டா, ஏன்டா உனக்கு வேற நினைப்பே கிடையாதா, நாங்கல்லாம் இங்க உக்காந்து நவீன தமிழ்ன்னு பேசிட்டு இருக்கோம்...

ஜொள்ளு உதய்: சரி சரி சொல்லித் தொலை (திரும்ப யோசனையில் மூழ்குகிறான்)

லொள்ளு உதய்: சுந்தர ராமசாமி, சாரு நிவேதிதான்னு பெரிய தலைகளை பத்தியெல்லாம் பேசலாம். நாய், பூனை, ஆந்தைன்னு அவனுக எழுதுனை போட்டுட்டு இறுக்கிட்டு உக்கார்ந்துட்டோம்ன்னு வை போரவன் வரவன் எல்லாம் ஆஹா ஓஹோ ம்ம்பாங்க... எழவு நமக்குத்தான் என்ன எழுதனம்னே மறந்து போய்விடும்.

நல்ல உதய்: எனக்கு தெளிவா தெரிஞ்சு போச்சு... குரூப் ஹெல்த் இன்சுரன்சுல இவனெல்லாம் கவராகரானா இல்லையா??? இல்லை, காட்டுக்கு எரிக்க எடுத்துட்டு போற செலவாவது குடுப்பாங்கலா?

லொள்ளு உதய்: சாவது நானாலும் வாழ்வது தமிழாக இருக்கட்டும்

உதய்: டேய், எல்லாருக்கும் ரொம்ப நன்றி. நான் இனிமேல் கனவில் கூட பிளாக் பக்கம் ஒதுங்க மாட்டேன்.போயிட்டு வாங்க...

ஜொள்ளு உதய்: அட் லீஸ்ட், அந்த பழனி பஞ்சாமிர்தமாவது...

உதய்: சாவடிச்சிருவேன், மரியதையா இடத்தை காலி பண்ணுங்க.

Wednesday, May 24, 2006

இந்தாங்க மதுமிதா...

வலைப்பதிவர் பெயர்: உதயகுமார்
வலைப்பூ பெயர் : சவுண்டு பார்ட்டி

உர்ல் : / சுட்டி http://www.soundparty.blogspot.com

ஊர்: பட்டக்காரன் பாளையம், ஊர் கடத்தப்பட்டு இப்பொழுது பெங்களூர்

நாடு: இந்தியா

வலைப்பூ அறிமுகம் செய்தவர்: ஃபிளாக் அறிமுகப்படுத்தியது என் நண்பன் "ஸ்மார்ட்" செந்தில். யுனிகோட் பற்றி தெரிந்ததும் நானே தமிழில் பதிய ஆரம்பித்தேன்.

முதல் பதிவு ஆரம்பித்த நாள்,வருடம் : 01 ஜூன் மாதம் 2005

இது எத்தனையாவது பதிவு: இதோடு 38

இப்பதிவின் உர்ல் / சுட்டி : http://soundparty.blogspot.com/2006/05/blog-post_24.html

வலைப்பூ ஏன் ஆரம்பித்தீர்கள்: இது என்னோட அந்நியன் சைட். இவனை இங்கே மட்டுந்தான் பார்க்க முடியும்.

சந்தித்த அனுபவங்கள்: தினமும் 3 மணி நேரம் கோவிந்தா கோவிந்தா!!!

பெற்ற நண்பர்கள்: கணக்கு வைக்கவில்லை.
கற்றவை: ஏராளம்...

எழுத்தில் கிடைத்த சுதந்திரம்: என்னப்பா சுதந்திரம்... நாந்தான் எல்லா கருமாந்திரமும் எழுதரனே...

இனி செய்ய நினைப்பவை: புதுசா ஒன்னும் இல்லை... இப்போ செய்வதை ஒழுங்கா செய்யணும்.

உங்களைப் பற்றிய முழுமையான குறிப்பு: சொல்லிக் கொள்ளும்படி பெரிய ஆள் இல்லை. சொன்னா வீடு புகுந்து அடிப்பாங்க...

இன்னும் நீங்கள் சொல்ல நினைக்கும் ஒன்றைச் சேர்க்கலாம்: தமிழ்மணத்திற்கு நன்றிகள்

Monday, May 22, 2006

கலர் கனவுகள்

போன வாரம் ஊருக்கு போன பொழுது அம்மா என்னை பார்த்து கேட்டாங்க, ஏன்டா, உனக்கு ரசனையே கிடையாதா, 5 கருப்பு பேண்ட், 3 லைட் புளூ சர்ட். ஏன் உலகத்தில வேற கலரே கிடையாதா என சத்தம் போட்டாங்க. எனக்கு கருப்பே பிடிக்காம கருவாச்சி காவியம் எழுதறவரைக்கும் போய்ட்டேன், ஆனா இவங்க இப்படி திட்டறாங்களேன்னு நினைச்சுட்டு இருக்கறப்போ நாலு அஞ்சு புடவையை எடுத்துப் போட்டு இதெல்லாம் நேத்து எடுத்தேன்னாங்க... என்னைய திட்டினீங்க, இதெல்லாம் என்ன கலர்,பஞ்சு மிட்டாய், ஆரஞ்சு, தக்காளி, மாம்பழம்ன்னு பழக்கடையை வாங்கிட்டு வந்திருக்கிங்க என சிரித்து விட்டேன். உனக்கென்ன தெரியும், நாலு பக்கம் வெளிய போய்ட்டு வந்தாதானே தெரியும்... எப்பவும் யுனிஃபார்ம் மாதிரி டிரெஸ் பண்ணிட்டு ரசனையே செத்து போச்சு, எப்படி வளர்த்திருக்கா பாருன்னு என்னைய எல்லாம் திட்ட போராங்கன்னு ஒரே புலம்பல்.

அம்மா சொன்னதிலும் ஒரு நியாயம் இருப்பதாக பட்டது. இனிமேல் மத்தவங்க எப்படி ட்ரெஸ் பண்ணராங்கன்னு பார்க்கலாம்ன்னு முடிவு பண்ணினேன். அப்படியே சாகவாசமா டாவின்சி கோட் படத்துக்கு PVR ல டிக்கெட் புக் பண்ணிட்டு வரலாம்ன்னுட்டு போனா படம் இன்னும் ரீலிஸ் பண்ணவே இல்லைன்னுட்டாங்க... சரி வந்ததுதான் வந்தோம் வேற ஏதாவது படம் பார்க்கலாம்ன்னு லைன்ல நின்னேன். எனக்கு முன்னாடி தக்காளி கலர் சுடிதார் போட்டு ஒரு பொண்ணு.மணி ரத்னம் படத்தில் ஹீரோயின் பின்னாடி வெளிச்சம் போட்டு காட்டுவாங்கள்ள அந்த மாதிரி அந்த இடமே ரொம்ப வெளிச்சமா இருந்தது. சுடிதாரையே பார்த்துட்டு இருக்கலாம் போல சும்மா நச்சுன்னு இருந்தது. என் கண்ணு அங்க இங்க சுத்தி கடைசியில் சுடிதாரையே ஜொள்ளு ஒழுக பார்த்துட்டு இருந்தேன்.

அந்த பொண்ணு டிக்கெட் வாங்கிட்டு நகர்ந்ததும் அந்த பொண்ணு வாங்கின படத்துக்கே எனக்கும் டிக்கெட் கேட்டேன். சார், அவங்க நைட் 10 மணி ஷோவுக்குதான் வாங்கிருக்காங்க, உங்களுக்கு என இழுத்தார். எனக்கும்தான் என டிக்கெட் வாங்கிட்டு நடையை கட்டினேன்.

கீழே வந்தால் பஞ்சு மிட்டாய் சேலை ஒன்று லேண்ட் மார்க் கடையினில் நுழைந்தது. நானும் அப்படியே நுழைந்து பார்த்தால் அந்த சேலை தமிழ் புத்தகங்கள் அடுக்கி வைத்திருந்த பக்கத்தில் நின்று கொண்டிருந்தது. எனக்கு சும்மாவே தமிழ் புத்தகங்கள் படிக்க பிடிக்கும் இதுல இது வேறயா என அங்கு இருந்த 60 அறுசுவை உணவுகள், ஜாதகம் கணிப்பது எப்படி என பொது அறிவு புத்தகங்களை புரட்டி விட்டு அப்படியே கொஞ்சம் பஞ்சு மிட்டாயை பார்த்துக் கொண்டிருந்தேன். அது சதாரண சேலை கிடையாது. கொஞ்சம் வேலைப்பாடுகள் நிறைந்த சேலை. வடக்கும் தெற்க்கும் சேலையில் சங்கமம் என்று சொல்லும் போத்தீஸ் சேலை மாதிரி இருந்தது. பஞ்ச தந்திர கதைகள் புத்தகத்தை பார்த்ததும் அக்காள் மகள் ஞாபகம் வர அதை எடுத்துக் கொண்டு பஞ்சு மிட்டாய் கனவுடன் நகர்ந்தேன்.

வெளியே மாம்பழக் கலரில் T- சர்ட் போட்டுக்கொண்டு 4 பொண்ணுங்க ஃபேர் & லவ்லி வித்துட்டு இருந்தாங்க. T- சர்ட்டை அப்படியே கண்ணில் ஒற்றிக் கொள்ளலாம் போல இருந்தது. அதிலிருந்த வாசகங்கள் அப்படியே என்னை கறைத்து விட்டது. எதோ ஃபில் பண்ண சொன்னாங்க...100 ரூபாய் வாங்கிட்டு ஒரு டப்பாவை குடுத்துட்டு சார், இது 90 ரூபாய், 10 ரூபாய் சில்லரை இல்லையேன்னாங்க... நான் பரவாயில்லைன்னுட்டு மாம்பழக் கலரை கண்ணு நிறைய வைத்துக் கோன்டு வண்டியை கிளப்பும் போது எனக்கு நானே சொல்லிக் கொண்டேன் எனக்கும் ரசனை இருக்கு...

Thursday, May 11, 2006

ஏன்? எதற்கு?? எப்படி???

சுஜாதா ரேன்ஞ்சுக்கு நினைச்சுட்டு வந்து பார்த்தீங்கன்னா இதுல ஒன்னும் இல்லை. எனக்கு ஏற்பட்ட சின்ன சின்ன சந்தேகங்களுக்கு யாரவது விடை சொன்னா நல்லா இருக்கும்..

முதல் கேள்வி சினிமா உலகம் பற்றியது. சிங்குச்சா சிங்குச்சா சிவப்பு கலரு சிங்குச்சா மஞ்ச கலரு சிங்குச்சா ந்னு பாட்டுல எல்லாம் போட்டு கும்மாங்குத்து குத்தறாங்களே அந்த துணியெல்லாம் அதுக்கப்புறம் என்ன பண்னுவாங்க??

Wednesday, May 03, 2006

உறவுகளை மேம்படுத்துவது எப்படி?

ஒரு பட்டாம்பூச்சியின் அசைவுகூட உலகில் வேறு எங்கோ பூகம்பம் ஏற்படுத்தும் என படித்துள்ளேன். சின்ன சின்ன வார்த்தைகள்கூட பெரிய மாற்றங்களை கொண்டு வரும் என நான் அனுபவித்த பிறகு இதை எழுதுகிறேன்.

உறவுகளை மேம்படுத்துவது எப்படி? என ஒரு வகுப்பு சென்று 2 நாட்கள் கூட ஆகவில்லை. நான் என் வீடு வாங்கும் கனவை புதுப்பித்த நேரம் அது. பார்ப்பவர்கள் எல்லோரிடமும் ஏதாவது வீடு இருக்கா வீடு இருக்கா என கேட்டு அவர்களை ஓட ஓட விரட்டிக் கொண்டிருந்தேன். இதற்க்கு முன் ஊரிலேயே ஒரு 2 வாரம் தங்க நேர்ந்த படியால் யாருடனும் அதிக தொடர்பில்லாமல் இருந்தது. இப்பொழுதெல்லாம் பெரிய பெரிய IT கம்பெனிகளில் எதுவேணுமானாலும் வாங்க விற்க விளம்பரம் செய்யும் வசதி இருப்பதால் பக்கத்தில் இருந்த இன்னொரு IT கம்பெனியில் இருந்த நண்பருக்கு ஃபோன் செய்து பேசிவிட்டு நான் அப்படியே என் விண்ணப்பதை எல்லொரிடமும் சொல்வது போல அவரிடமும் சொன்னேன். "அதானே, காரியம்ன்னா மட்டும்தானே எங்ககிட்ட பேசுவீங்க, இல்லைன்னா பேசுவீங்களா?" என கேட்டார். என் நடு மண்டையில் யாரொ (அவங்கன்னே கூட வச்சுக்கலாம்) கொட்டியது மாதிரி இருந்தது.

உறவுகளை மேம்படுத்துவது எப்படி? வகுப்பிலெல்லாம் உக்கார்ந்தது வெட்டி என தோண்றியது. என்னவோ சொல்லணும் போல இருந்துது சொல்லிட்டேன். உண்மையிலேயே உறவுகளை மேம்படுத்துவதுவதற்க்கு என்னாலானதை இன்று முதல் செய்ய ஆரம்பித்து விட்டேன்.

இதே மாதிரி ஒரு பதிவு இளவஞ்சியின் சுய மதிப்பீடுகள் பதிவிலும் நீங்க பார்க்கலாம்.

பின்குறிப்பு: இவ்வளவு நாள் காலை வணக்கம்ன்னு ஒரு மெயில் மெயில் வந்தா நான் படித்ததேயில்லை, நேரே குப்பை கூடையில்தான் கிடக்கும். யாரவது இந்த மாதிரி அனுப்பினா அதை முழுதாக படிக்க முடியாவிட்டாலும் நீங்களும் பதிலுக்கு சொல்லலாம், தப்பில்லை.

Tuesday, May 02, 2006

இரட்டுற மொழிதல்

எங்க வீட்டில் TV ரிமோட் கன்ட்ரோல் பெரியவங்ககிட்டதான் இருக்கும். எதோ சீரியலுக்கு நடுவில் கிடைக்கும் சந்தில் அப்படி இப்படி என்று எனக்கு பிடித்த சிலவற்றை பார்க்க முடியும். அப்படி நான் சேனல் மாற்றிய சமயத்தில் தில்லானா மோகனாம்பாள் படத்தில் இருந்து மறைந்திருந்தே பார்க்கும் மர்மம் என்ன என மோகனாங்கி பத்மினி சிக்கல் சண்முகசுந்தரம் சிவாஜி கணேசனை பார்த்து பாடிக் கொண்டிருந்தார். இவ்வளவு நான் இது ஒரு சீண்டல் வகையை சேர்ந்த பாடல் என் நினைத்துக் கொண்டிருந்தேன்.

சுசீலா நன்றாக பாடியிருக்கிறார், சிவாஜி நன்றாக நடித்திருக்கிறார், பத்மினி நன்றாக ஆடியிருக்கிறார் என்ற முறையிலேதான் பார்த்திருக்கிறேன். அதே பாட்டை நான் சிறுது நேரம் கழித்து பாடிக்கொண்டிருந்த போது கண்ணதாசன் விளையாண்டிருக்கும் விளையாட்டு எனக்கு முழுதாக விளங்கியது. இது இரட்டுற மொழிதல் என்பதற்கேற்ப எழுதிய பாடல். காளமேகப் புலவர் பாடல்களை புத்தகத்தில் படித்தது, அதுக்கப்புறம் யாரும் இந்த மாதிரி எழுதுவது இல்லை என நினைத்துக் கொண்டிருந்தேன்.

சாமி முன்னாடி நின்று பாடி பாருங்கள் முருகன் முழு அருள் உங்களுக்குத்தான். அதே பாட்டை சிக்கல் சண்முகசுந்தரத்தை பார்த்து மோகனாங்கி ஒரு பூங்காவில் பாடுவதாக கற்பனை செய்து பாருங்கள் இது காதலி காதலனை முழுதும் தன் பக்கம் இழுக்கப் பார்க்கும் மோகமான பாடல் என்பது புரியும். கண்ணதாசன் பிச்சு உதறியிருக்கிறார்.

எங்கிருந்தாலும் உனை நான் அறிவேன்
உன்னை என்னையல்லால் வேறு யாரறிவார்....

மாலவா, வேலவா, மாயவா, சண்முகா ...

இது ரெண்டும் முதல் சரணத்தில்... மோகனாம்பாள் தன் அழகின் மேலுள்ள கர்வத்தில் பாடுவது போல் வரும்.

சுவையோடு நானாட எனை நாடி இது வரை விரைவில் துணையாக நீ வருவாய்...
தூயனே, மாலவா, மாயவா, வேலவா, எனை ஆளும் சண்முகா ...

இது ரெண்டும் ரெண்டாம் சரணத்தில்... மோகனாம்பாள் அப்படியே உருகி உருகி தன் காதலை சொல்லும் கட்டம்.

இதில் யார் பெரியவர் என்ற போட்டியெல்லாம் இல்லை...சிவாஜி, பத்மினி, கண்ணதாசன் எல்லோரும் டாப் கிளாஸ் இதில்... கேட்பவர் மனநிலைக்கேற்ப மாறும் பாடல்...

இப்போ யாருக்கும் இந்த மாதிரி எழுத வருமா என தெரியவில்லை. இதையெல்லாம் வைத்துக் கொண்டாட வேண்டும். இப்போ பாடல்கள் எல்லாம் டபுள் மீனிங்கெல்லாம் கிடையாது, நேராவே சொல்லிடராங்க.

கண்ணதாசன் வாரம் அப்படின்னு போடலாம்ன்னு கூட நினைக்க வைத்தது இந்த பாட்டு.