Wednesday, February 22, 2006

கல்யாணம் எப்போ?

25 - 30 வயதில் இருக்கும் கல்யாணம் ஆகாத வாலிப வயோதிக அன்பர்களை (சிவராஜ் சித்த வைத்திய சாலை ப்ரொக்ராம் விஜய் டிவியில் பார்த்து பார்த்து கெட்டு போயிவிட்டேன்) பார்த்தவுடன் கலாய்ப்பதற்க்காகவே இந்த கேள்வியை முக்கால்வாசி பேர் ரெடி பண்ணி வைத்துக் கொண்டு அலைகிறார்கள்.

என்னப்பா, 5 வருஷமா பெங்களூரில் இருக்கிற. இன்னும் ஒரு பொண்ணும் கிடைக்கிலையா? இல்லை வெளிய சொல்ல பயப்படறியா? இது மாதிரி கேள்விகள் பெண்ணை பெற்று கல்யாணம் பண்ணிக் கொடுத்த மாமாக்கள் கேட்பது.

பையன் 2 வருஷமா யு.எஸ்.ஏ. வில் இருந்திருக்கிறான். ஏதாவது வெள்ளைக்காரியை லவ் பண்ணிட்டு இருக்கப் போறான். நீ எதுக்கும் உஷாரா இரு என அம்மாவிடம் புகை போட்டால் அது கல்யாண வயதில் பெண் வைதிருக்கும் அத்தை.

பையனுக்கு ஏதோ தோஷம் இருக்கும் போல இருக்கு. அதான் ஒரு பொண்ணூகூட அமைய மாட்டேங்குது. ஜோசியம் பார்க்கலாமா? எனக்கு தெரிந்து ஒரு ஜோசியர் உள்ளது உள்ளபடி சொல்லராரு. ஏதாவது பரிகாரம் இருக்கும். அதை செஞ்சா சரியாகப் போகும் என சொன்னால் அது சித்தி.

என்னோட பழைய ஃபிரெண்டை ஈரோட்டில் பார்த்தேன். அவரு பேத்திகூட கம்ப்யூட்டரில் தான் வேலை செய்யுதாம். கேட்டுப் பார்க்கலாமா என்று சொன்னால் அது தாத்தா.

மாப்பிள்ளை எதோ ஃபிகர் கரெக்ட் பண்ணிட்டான் போலிருக்கு. வீட்டில் சொல்லி பிரச்சினை ஆயிடிச்சு. அதான் இன்னும் வீட்டில் பொண்ணு பார்க்க ஆரம்பிக்கலை. இது பள்ளிக்கூட நண்பர்கள்.

டேய், நீ காலேஜில் ஒரு அட்டு ஃபிகர் கூட சுத்திட்டு இருந்தியே, கல்யாணம் ஆயிடுச்சா? அவளுக்கு ஆயிடுச்சு, எனக்கு ஆகவில்லை என பதில் சொன்னால் அது ரொம்ப நாள் பார்க்காமல் ப்ஸ் ஸ்டாப்பில் பார்த்த காலேஜ் ஃபிரெண்ட்.

Common dude, you are the most eligible bachelor in our team. Why are you not getting married? Are you waiting for your best match? எனக் கேட்டால் அது கூட வொர்க் பண்ணும் ஃபிகர். நான் ரெடி, நீங்க ரெடியான்னு கேக்குதுன்னு அர்த்தம்.

ஆனா எங்களுக்குத்தான் தெரியும் நிலைமை. பையன் இன்னும் குழந்தை, கொஞ்ச நாள் போகட்டும் என நினைக்கும் அப்பா அம்மா, ஸ்கூல் காலேஜ் எங்கும் குனிந்த தலை நிமிராமல் படிப்புதான் முக்கியம் என்று காலேஜ் ஃபிகர்களை மிஸ் பண்ணியது, பையன் பெரிய வேலையில் இருக்கிறான், அவங்க அம்மா நிறைய எதிர்பார்ப்பா என பெண்கள் வீட்டில் இருந்தும் ஜாதகம் தராத மாமாக்கள், கூட வொர்க் பண்ணும் ஃபிகர்கள் நிறைய செலவு வைக்குது நமக்கு ஒத்து வராது என நினைக்கும் நாங்கள்.

இது ஒரு பொல்லாத உலகம்!!!

Tuesday, February 21, 2006

கருவாச்சி காவியம்- அத்தியாயம் 3

கெமிஸ்டிரி லேபில் பொங்கல் வைத்ததற்க்குப் பின்னால் லேப்க்கு போவதுன்னா சின்ன ராசுவுக்கு முதலில் பயமாக இருந்தாலும் அங்கே மட்டும்தான் நின்று நிதானமாக ஃபிகர்களை சைட் அடிக்க முடியும் என கண்டுபிடுத்து வைத்திருந்தான். Physics புரொஃபசர் வெங்கடாசலம் பக்கத்து ஊர்க்காரராய் இருந்ததால் நன்றாக சோப்பு போட்டு வைத்திருந்தான். அவர் மிக அற்புதமாக வகுப்பு எடுத்தாலும் லேபில் எல்லோருக்கும் எட்டிக்காயாய் இருந்தார்.

நண்பர்கள் எல்லோருக்கும் சின்ன ராசு பண்ணும் கூத்து தெரிந்து இருந்தாலும் புரொஃபசர்க்கு பயந்து அடக்கி வாசித்தார்கள். அன்புவுக்கு மட்டும் இதை கேட்டதற்க்கு அப்புறம் சும்மா இருக்க முடியவில்லை. தமிழில் இது வரைக்கும் நடித்த அனைத்து கதாநாயகிகளுக்கும் ஒரு நாளவது ரசிகனாக இருந்திருக்கிறேன். கூட படிக்கிறவங்களை சைட் அடிக்காமல் விட்டால் அவர்களது சாபம் என்னை சும்மா விடாது என்றான்.

ஸ்பெக்ட்ரோ மீட்டர் எக்ஸ்பெரிமென்ட் என்றாலே எல்லோரும் நடுங்குவார்கள். அதில் சிலிட்டை தேடி கண்டுபிடிப்பதற்க்குள் பாதி உயிர் போய் விடும். அன்புவுக்கு வகையாக அது வந்து மாட்டியது. ஸ்பெக்ட்ரோ மீட்டரை செட் அப் செய்கிறேன் என்று பாதி நேரம் சிந்துவையும் சுமதியையும் மாறி மாறி பார்த்துக் கொண்டிருந்தான். சின்ன ராசு நீ உண்மையிலேயே என் கண்ணை திறந்து விட்டாய் என நடுவில் வந்து பாராட்டு பத்திரம் வாசித்து சென்றான்.

அந்த சமயத்தில் அன்புவின் கெட்ட நேரம் ஸ்பெக்ட்ரோ மீட்டர் மேல் ஏறி கால் மேல் கால் போட்டு உக்கார்ந்து கொண்டு புரொஃபசரை அங்கு வர வைத்திருந்தது. அவர் பேச ஆரம்பிததால் மற்றவர்களுக்கெல்லாம் சந்தோஷமாக இருக்கும். ஆனால் பதில் சொல்பவர்க்களுக்குத்தான் பாதி உயிர் போய் விடும். என்னப்பா, சிலிட் தெரியுதா என அவர் கண்ணாடியை துடைத்துக் கொண்டே கேட்டார். இவனும் தெரியுது சார் என்றான்.
என்னுடைய 25 வருட சர்வீசில் லைட் போடாமல் ஸ்பெக்ட்ரோ மீட்டரில் சிலிட் பார்த்தவன் நீதான் என்றார். அன்புவுக்கு அப்பொழுதுதான் உரைத்தது சைட் அடிக்கும் மும்மரத்தில் செட் அப் செய்யவே இல்லை என்று. இவன் சைட் அடித்துக் கொண்டிருந்ததை அவர் கவனித்து விட்டார். நீ மட்டும் வாழ்க்கையில் உருப்பட்டு விட்டால் எங்கிருந்தாலும் வந்து சொல்லு என் பேரை மாற்றிக் கொள்கிறேன் என சவால் விட்டார்.

அன்பு, எல்லோருக்கும் சான்ஸ் கிடைக்கததால்தான் இன்னும் நிறைய பேர் நல்லவங்களாக இருக்காங்க. அதனால நீ இதை எல்லாம் மனசுல வச்சுக்காதே என எல்லாம் கரைத்துக் குடித்தது மாதிரி உபதேசம் பன்னினான் சின்ன ராசு. நாளைக்கு நாம சிந்து மேல ராக்கெட் விடுவோம் என அன்பு அடுத்த சவாலுக்கு ரெடியானான். அன்பு, நீ மட்டும் கரெக்டா ராக்கெட் விடல அது பக்கதுல இருக்கற தனலட்சுமி மேல விழும். தனலட்சுமியோட அண்ணன் ஃபைனல் இயரில் பெரிய ரவுடியாம். அப்புறம் உன்பாடு திண்டாட்டம்தான் என சின்ன ராசு எச்சரித்து வைத்தான்.

நினைத்தது போலவே அன்பு தனலட்சுமி மேல் ராக்கெட் விட்டு தொலைக்க ஒரு வாரம் முழுவதும் தனலட்சுமியின் அண்ணன் அடித்து விடுவான் என்று பேயடித்த மாதிரி திரிந்தான்.

- தொடரும்.

Friday, February 17, 2006

கருவாச்சி காவியம்- அத்தியாயம் 2

அப்படி இப்படி என்று ஊரிலிருந்து 80 கிமீ தள்ளி இருக்கிற காலேஜில் சேர்ந்தாகி விட்டது. முதன் முதலில் பார்த்த அனைவரும் நண்பர்கள் ஆகி விட்டார்கள். அருண்,அன்பு, ஜூலிய்ஸ், பூவராகவன், கௌதம் ,வெங்கி, கார்த்தி, செந்தில், தியாகு, விஜய், மோகன், நாதன், வினோத் என பெரிய கூட்டம் சேர்ந்து விட்டது. அசைன்மென்ட், லேப் என ஆயிரம்தான் இருந்தாலும் உலகமே அவர்களுக்காக என எப்பொழுதும் கலகலப்பாக இருந்தார்கள்.

என்னை பார்த்த அனைவரும் லேசாக சிரித்து வைத்தார்கள். அது நான் போடும் பூ போட்ட சட்டையை பார்த்து என நண்பர்கள் சொன்ன போது எனக்கு என் அம்மாவின் மேல் கோபமாக வந்தது. அடுத்த முறை ஊருக்கு போகும் போது அண்ணனின் சட்டையை எடுத்து வர வேண்டும் என்று முடிவு செய்து விட்டேன்.

சின்ன ராசுவான எனக்கு இங்கிலீஷில் வேகமாக மற்றவர்கள் பேசினால் பேதி வந்த மாதிரி இருந்தது. அன்று கெமிஸ்ட்ரி லேபில் ஆசிட்டை மேலும் கீழும் ஊற்றி பொங்கல் வைத்து விட்டதால் போகிறவர்கள் வருகிறவர்கள் எல்லாம் நான் அங்கேயே மூச்சா போக வேண்டும் என்று நினைத்தார்களோ என்னவோ என் வரலாற்றைக் கேட்டு டார்ச்சர் செய்தனர். எப்போதுமே என் கூட மட்டும் தான் சனி பகவான் இருப்பதாக நான் நினைக்க ஆரம்பித்தது அன்று முதல் தான்.

என் நண்பர்கள் எல்லாம் ஹாஸ்டலுக்கு சென்று விட்டார்கள். கிளாஸிலேயெ நல்ல ஃபிகர் சிந்து. கிளாஸில் பாதி பேர் அவள் நிற்பது, நடப்பது, பேசுவது என விவஸ்தை இல்லாமல் அளவெடுக்க முடிவதை எல்லாம் எடுத்துக் கொன்டிருந்தார்கள். அவள் இதை எல்லாம் கூடவே இருந்து பார்த்து விட்டு எதுவுமே நடக்காதது போல் ஃபிசிக்ஸ் அசைன்மென்ட் கௌதம் கிட்ட கூடுக்க சொன்னாங்க. யாரு அது? என்றாள். நான் இருந்த நிலைமையில் விளக்கி வியாக்ஞானம் கொடுக்க மனம் இல்லாததால் கொடு என நானே வாங்கிக் கொண்டேன்.

முகமெல்லாம் ஃபேர் & லவ்லி போட்டுக் கொண்டு நான் சிகப்பாக இருக்கிறேனா என ஒருவன், இன்னும் கொஞ்சம் டிரை பண்ணினா அர்னால்டு மாதிரி இருப்பேன் என இன்னொருவன், ஒரு பெண்ணிடம் தான் பேசியதை ஒருவன் சொல்ல ஒரு கும்பல் பொறாமையில் வெந்து கேட்டுக் கொண்டு என்று ஹாஸ்டல் களை கட்டியிருந்தது.

எங்கள் மக்கள் எல்லாம் வழக்கம் போல் ஒன்றாக உக்கார்ந்து எதோ பேசிக் கொன்டிருந்தார்கள். நான் கௌதமிடம் சிந்துவின் அசைன்மெண்ட் கொடுத்து விட்டு உன்னை யாருன்னு தெரியாதுன்னுட்டா அதான் நானே வாங்கிட்டு வந்துட்டேன் என்றேன். மக்கள் எல்லாம் உலகமே இடிந்து விழுவது போல சிரித்தார்கள். நான் எதாவது தப்பாக சொல்லி விட்டேனா என நான் சொன்னதையே திரும்ப சொல்லி பார்த்தேன்.

கௌதம் மட்டும் பேய் முழி முழிப்பதை பார்த்து எனக்கு ஓரளவுக்கு போன உயிர் திரும்பி வந்து விட்டது. அப்புறம்தான் தெரிந்தது, சிந்து இவனிடம் உருகி உருகி பேசிக் கொண்டு இருந்தாக நூல் விட்டுக் கொன்டு இருந்தான் என்று. அப்புறம் நடு இரவில் அவன் தமிழ் சினிமாவில் இருக்கும் எல்லா சோக பாடல்களையும் பாடிக் கொண்டிருந்தான் என்பது தனிக்கதை.

-தொடரும்

Wednesday, February 15, 2006

கேரட் ஜூஸ்

இனி மேல் டிரீட் போனால் எவ்வளவு பேர் பசங்க எவ்வளவு பேர் பொண்ணுங்கன்னு கேட்டுட்டுதான் போகணும்னு முடிவு பண்ணிட்டேன். அப்புறம் எல்லோரும் என்ன சாப்பிடராங்களோ அதை மட்டும் சாப்பிடணும்னு முடிவு பண்ணிட்டேன்.

ஒரு நண்பி அவருடைய முடிந்து போன பிறந்த நாள் கொண்டாட முடிவு பண்ணி என்னை அழைத்து இருந்தார். நாம் தான் ஃபிரீயா குடுத்தா ஃபினாயில் கூட குடிக்க பழகிட்டாதால எங்கே, எப்போ, யாரெல்லாம்ன்னு ஒரு கேள்வி கூட கேட்காமல் சரி என்று சொல்லி விட்டேன்.

மொத்தம் 6 பேர் அதில் நான் மட்டும் பையன். சரி போட்டிக்கு யாரும் இல்லைன்னு நான் பாட்டுக்கு நான் உண்டு என் கடலை சாகுபடி உண்டுன்னு சிவனேன்னு வேலையை பார்த்துட்டு இடுந்தேன். எல்லாம் நல்லா போயிட்டு இருந்தது. நான் என் வேலையில் தீவிரமாக இருந்ததால் என்ன வந்தாலும் சாப்பிட்டு விட்டு சமர்த்தா இருந்தேன்.

எல்லோரும் ஐஸ் க்ரீம் சொல்ல எனக்கு எதுவும் வேண்டாம் என்றேன். எங்களுக்கு சாப்பாடு பரிமாறியவர் உதட்டில் ஒரு புன்னகையுடன் கேரட் ஜூஸ் நல்லா இருக்கும்ன்னார். வாழ்க்கையில் எப்பவுமே என் கூடவே இருக்கும் சனி பகவான் இன்னைக்கு லீவ் போல என நினைத்து கொஞ்சம் ரிலாக்ஸா இருந்து விட்டேன். சரி கொண்டு வாங்கண்ணு சொல்லி விட்டு விட்ட இடத்தில் இருந்து தொடர்ந்து கொண்டு இருந்தேன்.

மிஸ்டர் சர்வர் சுந்தரம் கேரட் ஜூஸுடன் 6 ஸ்ட்ரா கொண்டு வந்து கொடுத்து விட்டு எனிதிங் எல்ஸ் சார்? என்றார். எல்லோரும் சிரித்து விட்டார்கள். ஒரு ஸ்ட்ரா கொடுத்திருந்தால் டேஸ்ட் பண்ண கேட்டிருப்போம். இனி மேல் கேட்கவே மாட்டோம் என்றார்கள்.

நான் முட்டுச் சந்தில் மொக்கை அடி வாங்கிய வடிவேலு மாதிரி விழி பிதுங்கி நின்றேன். நல்ல வேளை நான் பணம் கொடுக்க போவதில்லை. இல்லைன்னா உனக்கு டிப்ஸ் கட் என மனதுக்குள் நினைத்துக் கொண்டேன்.
அதற்க்கு அப்புறம் தான் மேலே சொன்ன சபதம் எல்லாம். ம்ம்ம்ம்... ஆண்டவன் ஆட்டுக்கு வாலை அளந்துதான் குடுக்கிறான்.

Monday, February 13, 2006

அத்தியாயம் 1

அப்படி இப்படி என்று இஞ்சினியரிங் காலேஜ் சீட் கிடைத்து விட்டது. மனதுக்குள் எதோ சாதித்த மாதிரி ஒரு நினைப்பு. இப்பொழுதுதான் முதன் முறையாக வீட்டை விட்டு வெளியில் தங்கி படிக்கும் வாய்ப்பு கிடைத்துள்ளது. பத்தாம் வகுப்பு நன்றாக படித்தால்தான் +2 முதல் வகுப்பு கிடைக்கும் என மாங்கு மாங்கு என படித்து கரை ஏறியதும் +2 நன்றாக படித்தால்தான் நல்ல இஞ்சினியரிங் காலேஜ் சீட் கிடைக்கும் என சொல்லி என்னை ஏமாற்றி விட்டதாக ஒரு சின்ன ஃபீலிங் இருந்து கொண்டே இருந்தது.

என்னோடு சுற்றும் பசங்களெல்லாம் பக்கதில் இருந்த கலைக் கல்லூரிக்கு சென்று கொன்டிருந்தார்கள். அவர்கள் தினமும் சொல்லும் கதையை கேட்டு காலேஜ் என்பது ஜாலியாக இருக்க கட்டியிருக்கிறார்கள் என்றும் காலேஜ் போய் படிக்க வேண்டியது இல்லை என்றும் சொன்னதால் மனதுக்குள் இனித்தது.

பெரியப்பா களத்து மேட்டில் மாட்டுக்கு தவிடு காட்டிக் கொண்டிருந்தார். சின்ன மகன் ஊரில் இரண்டாவது இஞ்சினியர் என்பதில் அவருக்கு ஏக மகிழ்ச்சி.ஏன்டா சின்ன ராசு, இஞ்சினியருக்கு படிச்சுட்டு எனக்கு தார்ஸ் வீடு கட்டி தருவையில்ல என அப்பாவியாக கேட்டார். பெரியப்பா, அதுக்கு சிவில் இஞ்சினியரிங் படிக்கணும்.நான் மெக்கானிகல் இஞ்சினியர் என கோபமாக சொன்னேன்.

டேய், நம்ம அழுக்கு முருகன் மாதிரி மெக்கானிக் ஆக போறியா நீ? அதுக்கா உன்னை உங்க அப்பன் அவ்வளவு படிக்க வைக்கிறான்.பெரியப்பா, உனக்கு எத்தனை தடவை சொல்ல. அழுக்கு முருகன் டிவிஸ் 50 ரிபேர் தான் பண்ணுவான். ஆன நான் டிவிஸ் 50 மாதிரி புது மொபெட் கண்டு பிடிப்பேன் என சொல்லும் பொழுது என் முகம் பிரகாசித்தது.

பெரியப்பா கை கழுவிக் கொண்டே சொன்னார், சரி சரி நல்லா படிக்கணும், அங்கே 50 ரூபாய் இருக்கு எடுத்துக்கோ, பெரியம்மா கிட்ட சொல்லிராதே. ஏற்கனவே சுற்றமும் நட்பும் கொடுத்த 250 ரூபாய் பாக்கெட்டில் இருந்தது. பாட்டியையும் பார்த்து விட்டால் நாளைக்கு காலையில் வண்டி ஏறும் பொழுது வீடு வீடாக ஓட வேண்டியிருக்காது.

பாட்டி வரப்பில் இருந்த கீரை பறித்துக் கொண்டு இருந்தது. பாட்டியின் காலில் விழுந்தேன் ஏதாவது தேறும் என்ற நம்பிக்கையில். நம்பிக்கை வீண் போகவில்லை. பாட்டி எட்டாய் மடித்த100 ரூபாய் கொடுத்து விட்டு அண்ணன் மாதிரி ஊர் சுத்தத கூடாது என சொல்லிவிட்டு என்னமோ யோசித்தாள். என் பெரியப்பா மகன் +2 முதல் தடவை எழுதி 10 வருடம் ஆகிறது. இன்னும் பாஸ் ஆகாமல் ஊரெல்லாம் நல்ல பேர் எடுத்து வைத்திருந்தான். பாட்டி அருகிலிருந்த கருப்பராயன் கோவிலுக்கு கூட்டி போய் சூடம் பற்ற வைத்து சாமி கும்பிட்டாள். மது, மாமிசம் சாப்பிட மாட்டேன் என சத்தியம் செய்ய சொன்னாள்.அண்ணனை மனதுக்குள் திட்டிய படியே சத்தியம் செய்து விட்டு வீட்டுக்கு நடையைக் கட்டினேன்.

-தொடரும்

Sunday, February 12, 2006

நீங்களும் தமிழில் எழுதலாம்!

இது ஒரு நேயர் விருப்பம் போஸ்ட்!

நிறைய கண்மணிகள் கேட்டதால் இதை தருகிறேன்.

In the blog "Change Settings" option, In the settings tab, in formatting Encoding should be Universal (Unicode UTF-8).

அப்புறம் நிறைய தமிழ் இணைய பக்கங்கள் Unicode to தமிழ் மாற்றுக் கருவிகள் வைத்திருக்கிறார்கள். நான் கண்டதில் ஒன்று

http://www.jaffnalibrary.com/tools/Unicode.htm

இதில் தங்கிlish-ல் டைப் செய்தால் உடனே தமிழில் மொழி மாற்றம் செய்து உங்கள் blog-ல் பதிப்பிக்கலாம்.
Happy Blogging!!!

25-டிசம்பர்-2006: நீங்கள் அந்த htm கோப்பை தரவிறக்கம் செய்து உங்கள் கணினியில் சேமித்து வைத்துக் கொண்டீர்களானால் இணைய தொடர்பும் தேவை இல்லை.

ஈ கலப்பை 2.0யை இன்ஸ்டால் செய்து கொண்டீர்களானால் இன்னமும் வசதி.
http://thamizha.com/modules/mydownloads/index.php

Friday, February 10, 2006

ஓ போடு!

ஓ! மிக்க நன்றி!!!
இது என் நண்பன் செல் போனில் சொன்ன வார்த்தைகள். இது சதாரண வார்த்தைதான்.ஆனால் சொன்னதற்கான காரணம்தான் சிரிப்பை வரவழைத்தது.
நீண்ட நாட்களாக மற்ற எல்லா நண்பர்களிடம் இருந்தும் இந்த நண்பனை பற்றி புகார் பட்டியல் வந்து கொண்டு இருந்தது. யாரோ ஒரு பெண் ஒருத்தி இவன் செல் போன் வைத்திருப்பதாக எல்லோரும் சொன்ன பொழுது அவர்கள் வேண்டும் என்றே விளையாடுகிறார்கள் என அவன் நினைத்தான்.
நேற்று இரவு என் நண்பனது சக கூட்டாளி என் நண்பனை அழைத்து உன் செல் போன் எண் என நினைத்து வேறொரு எண்ணை டையல் செய்து விட்டேன். ஒரு பெண் பேசுகிறாள். முடிந்தால் எதாவது செய்து கொள் என்றான்.
சும்மா இருந்த சங்கை ஊதிக் கெடுத்தது போல் இவனும் ஒத்திகை எல்லாம் பார்த்து பேச ஆரம்பித்தான். உரையாடல் ஆங்கிலத்தில் நடந்ததால் அதை அப்படியே இங்கு தருகிறேன்.


The girl: Hi Mr.x, I really want to talk to you for a long time.
Mr.X: You didn't give me a chance!!! Anyway, my apologize for the inconveinence caused by my friends.
The girl: OK. Give your number properly to your friends. I hope I will not get more calls inquiring you.
Mr.X: Huh... I know that you are very angry with me. Why don't we have ice cream in the forum and may be you can punch on my face to reduce your anger. What do you say?

With in a split second this guy thought he almost accomplished the mission. Date with an unknown girl!!! Might be he is saying "Hurray!!! I did it" in his mind.

The girl didn't hesitated and immediately replied "Can I come with my husband?"

"Oh! No thanks!!!" are the words from my friend.

Tuesday, February 07, 2006

கருவாச்சி காவியம்

என் இனிய தமிழ் மக்களுக்கு வணக்கம்!!!

கடந்த முறை சென்னை போன பொழுது நன்பர்களுடன் கோவளம் கடற்கறைக்கு சென்றிருந்தேன். சற்று நேரம் நான் ஆழ்ந்த சிந்தனையில் இருந்தேன்.வைர முத்து மீசையை தடவிகொண்டு இருப்பது மாதிரி உக்கார்ந்து இருந்தால் எப்படி இருக்கும் அப்படி உக்கார்ந்து இருந்தேன்.உதய் பாரேன் கருவாச்சி காவியம் எழுதிட்டு இருக்கும் வைர முத்து மாதிரி உக்காந்துட்டு இருக்கான்னு என் நண்பன் பார்த்திபன் மற்ற மொக்கை மக்களிடம் சொன்னான். (யாருக்கும் புரியலன்னா மன்னிச்சுக்கங்கண்ணா, நதி மூலம், ரிஷி மூலம் ஆராயக்கூடாதுன்னு பெரியவங்க சொல்லிருக்காங்க, இல்லையா?)

From that time itself I thought why I can't write "Karuvachi Kaviyam". Even if it is not in the Vairamuthu, Sujatha level at least the "Mokkai Raasu" level in Vikatan. Appuram ennenavo karanathala ennala elutha mudiyala. Etho intha varam eluthalam adutha varam eluthalam-nnu nenaicha mudiyave illa. (yarum encourage pannarathe illa, Phone panni thitta mattum theriuthu.Kekutha Milwaukee-la?)

Ithu etho Cinema title vachittu appuram Kathai eluthara matter illa. Matter ellam 4 varushathukku Munnadiye ready ayiduchhu. Ana title thaan kidaikkala. (Vairamuthu munthittaru.) Ippavum avaru onnum thappa eduthukka mattarannu thairiyama nambi elutha poren.

Intha kathyil varum pathirangal matrum sampavangal anaithum karpanye. If anything coincide with GCT memories/people it is purely coincidence and this is not intended to hurt anyone.

Intha kathiyoda Hero Peru Chinna Raasu. Enga area-a la konjum common name ithu. Heroine vanthu vijay padathula vara heroine mathiri. Pattukku mattum vanth dance addittu poiduvanga (athukkappuram hero mattum thanniya dance adittu iruppannu yaro pesarathu kekkuthu, athukkelam anja matten naan.). Heroine peru innum vekkala. Enna avanga late entry kathai-la.

Athaan kathiye sollite appuram enna elutha pore nnu sollarengala? Tamil Cinema parthu parthu romba kettu poiteenga neenga...

Keep watching this blog. Ethavathu thittaramathri iruntha blog-la thittunga. (Kaikkra maram thaan kalladi padum nu enga patti solirukkanga.)

தத்துவம்

Ippo neraya peru thathuvam solla kilampi irukkanga... Daily at least I am getting 3 mails . Few samples are here:

Saturday to Sunday-> oru naal,
Aana Sunday to Saturday -> oru naal agathu.

mechanical engineer mechanic aagalam aana
software engineer software aaga mudiyadhu......

Key boardla key irrukkum Anna
Mother boardla mother irrukkuma


I think the origin of this kind of ularals started from Vikatan. Now I am seeing the regularly in the Sun Music. At the end of the show ethavathu ularittu show mudikkirathu.

Athe thathuvathai Sandiya (Pick of the Sun Music) sonna mattum sweet-a irukke, athu en?