மின்னல் அழகே மின்னும் அழகே
முதல்ல இதை மலையாளம்ன்னு நம்பவே கஷ்டமா இருந்தது. அப்புறம், அந்த ராஜ், பிருத்வி ராஜ்... நல்ல மெனக்கெட்டு பண்ணிருக்காங்க, ரொம்ப நல்லா இருக்கு.
முதல்ல இதை மலையாளம்ன்னு நம்பவே கஷ்டமா இருந்தது. அப்புறம், அந்த ராஜ், பிருத்வி ராஜ்... நல்ல மெனக்கெட்டு பண்ணிருக்காங்க, ரொம்ப நல்லா இருக்கு.
சவுண்ட் விட்டது
Udhayakumar
at
Saturday, April 26, 2008
4
பேரு குத்தாட்டம் போட்டிருக்காங்க!
நான் பொறந்து வளர்ந்ததெல்லாம் கிராமத்துலதான். அந்தக் காலத்துல காலைக் கடன் (அது என்ன கடனோ தெரியலை, வாங்கின கடனை யாருக்கு திருப்பிக் குடுக்கிறேன்னும் தெரியல) எல்லாம் சுடுகாட்டுப் பக்கந்தான். இந்த காலத்துல எல்லார் வீட்டுலயும் டாய்லெட் கட்டிட்டாங்க. ஆனாலும், இந்த பஞ்சாயத்து சுகாதாரத்தை பேணிக் காக்கிறதுன்னு எழுதிருக்கிற போர்டுக்கு கீழேயே கடனை கொட்டி வைக்கிற பசங்க இன்னமும் இருக்கிறாங்க.
காலங்கார்த்தால சூரியன் சுள்ளுன்னு அடிக்கும் முன்னே சுடுகாட்டுப் பக்கம் போயிட்டு பனங்காய் பொறுக்கிட்டு வீடு வந்து சேர்ந்தால் பள்ளிக்கூடம் கிளம்ப சரியாக இருக்கும். லீவு நாட்களில் விளையாட போயிட்டு கடனை கழிச்சதே மறந்து போயி காடு காடாய் சுத்தி எலந்தை, கொய்யா என மரத்தில் காய்க்கும் அத்தனையும் பறிச்சு சாப்பிட்டு சாயங்காலம் காய்ந்து போய் வீடு வந்த சேர்ந்த கதையெல்லாம் இருக்கும். அரளிக்காயை மட்டும் எப்படி விடுவது என அதையும் அரைச்சு ஓணானுக்கு குடுத்த கதையும் இருக்கும்.
கக்கூஸ்ன்னுதான் இது எங்களுக்கு அறிமுகமானது. வீட்டில் கக்கூஸ் இருந்தாலும் காலற நடந்து ஊரிலிருக்கிற மாமன் மச்சான் எல்லாம் பார்த்து நலம் விசாரிச்சுட்ட வர சுகம் இல்லைன்னு அவசரத்துக்கு மட்டும் போய் வர ஆரம்பிச்சாங்க. காலேஜ் வந்ததுக்கு அப்புறம் லெட்ரின்ல பக்கத்துல பக்கத்துல சீட் போட்டு உக்கார்ந்துட்டு தியரி ஆப் மெக்கானிக்ஸ் கதை கேட்டவங்களும் இருந்தாங்க. இந்து இன்னைக்கு என்ன சுடிதார் போடுவான்னு பந்தயம் கட்டிட்டு வந்தவங்களும் இருந்தாங்க. இதனால கடுப்பாகி பாத்ரூமிலிருந்து பக்கெட் நிறைய தண்ணி அள்ளி அவனுக தலைக்கு மேல கொட்டுனவனுகளும் இருந்தாங்க.
ரயில் தண்டவாளத்தில எல்லாம் எவன்டா இருந்து வைக்கிறான் அறிவே இல்லையா என திட்டிய ஆட்கள் எல்லாம் உண்டு. ஒரு நாள் ரயில் எசகுபிசகாக ஆடி வைக்க அதுக்கப்புறம் "போதி மரத்தடியில் ஞானம் பெற்ற" அப்படிங்கற மாதிரி "ரயில் லேவட்டரி" புகழ் அப்படின்னு பேர் சொல்லற அளவுக்கு ஞானம் தெளிஞ்ச ஆட்களும் இருக்காங்க.

சலவைக்கு குடுத்த தேய்ச்ச சட்டை பேண்ட் கசங்காம இருக்கணும்ன்னு எல்லாத்தையும் மடிச்சி வைச்சுட்டு, ஏசி போட்ட ரூம்ல, கால் மேல் போட்டு எப்படி இருந்த நாம இப்படி ஆகிட்டமேன்னு யோசிச்ச ஆட்களும் இருந்தாங்க.கோட் டெலிவரி சாயங்காலம் வைச்சிட்டு, ஒரு பெரிய டிஃபெக்ட்டை எப்படி சரி பண்ணலாம்ன்னு நாலாபுறம் அலைஞ்சிட்டு ஒன்னும் முடியாம போய் குத்த வைச்சி ரெண்டு கையிலையும் பின்னந்தலைக்கு முட்டுக் கொடுத்த உக்காந்தா எகனை மொகனையா ஐடியா வந்து பிரிஞ்சு பிரிஞ்சு விழும் ஆசாமிக கூட இருந்தாங்க.


சவுண்ட் விட்டது
Udhayakumar
at
Wednesday, April 02, 2008
3
பேரு குத்தாட்டம் போட்டிருக்காங்க!
கிடங்கு: அனுபவம்/நிகழ்வுகள், கக்கூஸ், ரெஸ்ட் ரூம்
சென்னை: பெங்களூரில் தமிழர்களுக்கும், தமிழ்த் திரைப்படங்களுக்கும் எதிராக கன்னட அமைப்பினர் மேற்கொண்டுள்ள வன்முறையைக் கண்டித்து 4ம் தேதி தமிழத் திரையுலகினர் நடத்தவுள்ள உண்ணாவிரதப் போராட்டத்தில் ரஜினிகாந்த் கலந்து கொள்வாரா என்ற எதிர்பார்ப்பு கோலிவுட்டில் நிலவுகிறது.
பெங்களூர் வன்முறையைக் கண்டித்து தமிழ்த் திரையுலகம் ஒன்று திரண்டு மாபெரும் உண்ணாவிரதப் போராட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளன. இதுதொடர்பாக நேற்று நடந்த தயாரிப்பாளர் கவுன்சிலில் நடந்த கூட்டத்தில் இந்த உண்ணாவிரதத்தில் தமிழ்த் திரையுலகினர் அத்தனை பேரும் மொத்தமாக கலந்து கொள்ள வேண்டும்.
வெளியூர், வெளிமாநிலம், வெளிநாடு என எங்கிருந்தாலும் தவறாமல் கலந்து கொள்ள வேண்டும். அப்படிக் கலந்து கொள்ளாதவர்கள் தமிழ் சினிமாவில் இனிமேல் நடிக்க முடியாது. அவர்களுக்கு எந்தவித ஒத்துழைப்பும் வழங்கப்பட மாட்டாது என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதனால் இப்போது போகஸ் ரஜினிகாந்த பக்கம் திரும்பியுள்ளது. அவர் மட்டுமல்லாமல் பிரகாஷ் ரய், அர்ஜூன் சர்ஜா, முரளி, பிரபு தேவா உள்ளிட்ட அனைத்து கன்னட கலைஞர்கள் பக்கமும் இப்போது தமிழக மக்களின் கவனம் திரும்பியுள்ளது.கடந்த 2002ம் ஆண்டு விஜயகாந்த் நடிகர் சங்கத் தலைவராக இருந்தபோது, அக்டோபர் 12ம் தேதி காவிரிப் பிரச்சினையில் கர்நாடகத்தின் போக்கைக் கண்டித்து, பாரதிராஜா தலைமையில் நெய்வேலி அனல் மின் நிலையம் முன்பு மாபெரும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
அதில் ரஜினியைத் தவிர மற்ற அனைவரும் கலந்து கொண்டனர். ஆனால் அடுத்த நாள் தனியாக சென்னையில் உண்ணாவிரதம் இருந்தார் ரஜினி. அதில் கன்னட நடிகர்கள் கூட்டாக கலந்து கொண்டனர். நெய்வேலி போராட்டத்தில் கலந்து கொண்டு விட்டுத் திரும்பிய கலைஞர்கள் ரஜினியைப் போய் பார்த்து ஆதரவு தெரிவித்து விட்டு வந்தனர்.
இது வேறு மாதிரியான சிக்னலை கர்நாடகத்திற்கு அனுப்பியது. ரஜினி தமிழ் திரையுலகோடு சேர்ந்து நமக்கு எதிராக போராடவில்லை. தனியாகத்தான் இருக்கிறார் என்பது போல அங்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.மேலும், நெய்வேலி போராட்டத்தை ரஜினி விமர்சித்தும் பேசினார். உச்சநீதிமன்றத்தால் கூட தீர்க்க முடியாத பிரச்சினையை இந்தப் போராட்டம் தீர்த்து விடுமா என்று அவர் கோபமாக கேட்டார்.
அத்தோடு நில்லாமல், நதிகள் அனைத்தையும் தேசியமயமாக்குவதே இதற்கு ஒரே தீர்வு. அந்தத் திட்டத்தை அமல்படுத்தினால் அதற்கு ரூ. 1 கோடி நிதியுதவி அளிப்பேன் என்றும் ஆவேசமாக கூறினார். ரஜினிகாந்த்தின் அறிக்கையை அப்போது சரத்குமார்தான் செய்தியாளர்களுக்கு வாசித்துக் காட்டினார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஆனால், தான் தனியாக உண்ணாவிரதம் இருக்கக் காரணம், கர்நாடகத்தில் வசிக்கும் 50 லட்சம் தமிழர்களின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டுதான் என்றும் கூறினார் ரஜினிகாந்த். அவர் கூறியதில் நியாயம் இருந்ததும் நிஜம்.இந்த நிலையில் மீண்டும் இக்கட்டான நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளார் ரஜினிகாந்த். இம்முறை ரஜினிகாந்த் கண்டிப்பாக உண்ணாவிரதத்தில் கலந்து கொள்ள வேண்டும். இல்லாவிட்டால் கடும் நடவடிக்கை எடுப்பது என்ற மூடில் திரையுலகம் இருப்பதாக தெரிகிறது.
சென்னை திரும்பினார் ரஜினி:
இந் நிலையில் குசேலன் படப்பிடிப்புக்காக ஹைதராபாத் சென்றிருந்த ரஜினிகாந்த் இன்று ஹைதராபாத்திலிருந்து சென்னை திரும்பினார்.
உண்ணாவிரதம் குறித்து தனக்கு நெருக்கமான சிலருடன் அவர் ஆலோசனை மேற்கொண்டுள்ளதாக தெரிகிறது. அதன் இறுதியல் பங்கேற்பதா இல்லையா என்பது குறித்து ரஜினி முடிவெடுப்பார் எனத் தெரிகிறது. அதற்கு முன்பாக அவர் தரப்பிலிருந்து ஒரு அறிக்கை வெளியாகக் கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அவர்(ன்) கலந்துகிட்டா என்ன கலந்துக்காட்டா நமெக்கென்ன? அது அவங்க துறை சம்பந்தபட்ட விசயம். ஒதுக்கி வைப்பதும், ஒட்டி உறவாடுவதும் அவங்க பாத்துப்பாங்க. ஊதிப் பெருசாக்கலைன்னா இந்த நான்காவது எஸ்டேட் ஆசாமிகளுக்கு சோறு இறங்காதோ????) அவன் டவுசர் சரியா போடலை, **த்து தெரியுதுன்னு சொல்லியே அதுவரைக்கும் **த்து இருக்கா இல்லையான்னே தெரியாதவனுக்கும் தெரிய வைச்சிடுவாங்க... வாழ்க பத்திரிக்கை சனநாயகம், இந்த திட்டம் நிறைவேறலைன்னா எவ்வளவு கஷ்டம், சேதம்ன்னு எங்கேயும் பார்த்த ஞாபகமே இல்லையே?
சவுண்ட் விட்டது
Udhayakumar
at
Wednesday, April 02, 2008
0
பேரு குத்தாட்டம் போட்டிருக்காங்க!
Bringing Down the House என்ற ஆங்கில நாவலின் தழுவல்தான் இந்த 21. ஏற்கனவே இந்த நாவலின் பெயரில் ஒரு காமெடி படம் வந்துவிட்டதால் 21 என பெயர் வைத்துள்ளார்கள். 21க்கும் இந்த கதைக்கும் என்ன சம்பந்தம் (நான் இந்த நாவலை இன்னமும் படிக்கவில்லை) என மண்டையை குழப்பிக் கொண்டு படம் பார்க்க ஆரம்பித்தால் வெகு சீக்கிரத்திலேயே "21 will come only once in your life and enjoy it" "என கதாநாயகனின் அம்மா சொல்வதால் தெரிகிறது. (அடப்போங்கப்பா, இதுக்கா நான் இவ்வளவு நேரம் தலையைப் பிச்சிக்கிட்டேன்?)

MIT-யே பெரும்பாலனவர்களுக்கு கனவாகவும், குறைந்தபட்சம் ஒரு ஃபோட்டா ஆவது அந்த கேம்பஸில் நின்று எடுத்து விட வேண்டும் என என்று நினைக்கும் நேரத்தில் ஹார்வார்ட் மெடிக்கல் ஸ்கூலில் சேர வேண்டும் என நினைக்கும் MIT மாணவனின் கதை. கிளைமேக்ஸின் கொஞ்சம் காட்சிகளை முன்பே காட்டி, பின்வரும் 20-25 நிமிட உரையாடல்களுக்காக மக்களை கட்டிப் போட நினைத்திருக்கிறார் இயக்குநர். பலிக்கவில்லை என்றுதான் சொல்ல வேண்டும்.
சாமி வரம் குடுத்தும் பூசாரி வரம் குடுக்காதாது மாதிரி ஹார்வார்ட் மெடிக்கல் ஸ்கூலில் அட்மிசன் கிடைத்தும் முழு ஸ்காலர்ஷிப் கிடைக்க தனித்துத் தெரியும் வாழ்க்கை அனுபவம் வேண்டும் என ஒரு ஆபிசர் (ரொம்ப முக்கியம், வந்துள்ள அனைத்து மாணவர்களும் ஒரே மாதிரி தகுதியுடன் இருப்பதால் இது ரொம்பவே முக்கியம் என சொல்கிறார்) கையாட்டிக் கொண்டே சொல்கிறார். MIT மாணவர்கள் என்றாலே புத்தகப் புழுக்கள் தான்(?) , சமயம் கிடைக்கும் போதெல்லாம் அவர்கள் பெண்களைப் பற்றி "பேசி மட்டுமே" மகிழ்ச்சி அடையமுடியும் என ஒரு உள்குத்து வைத்திருப்பதாக தெரிகிறது.
Black Jack கிளப்பில் சேர்வதால் நிறைய பணம் கிடைக்கும் மற்றும் திரில் இருக்கும் என புரொபசர் சொல்லும் போது கேட்காத நாயகன் கதை நாயகி கழுத்தில் டை போட்டு சொன்னவுடன் நாய் மாதிரி பின்னாடியே போவது கொஞ்சம் கஷ்டமாத்தான் இருக்கிறது. (வயித்தெரிச்சல் எல்லாம் இல்லை, ஆனால் கொஞ்சம் லைம் சோடா குடித்தால் சரியாகி விடும் என நினைக்கிறேன்).
நாம் இருவரும் Black Jack Club-ல் இருக்கிறோம், நண்பர்கள் என்பதைத்தவிர வேறேதும் இல்லை என நல்ல பிள்ளையாக (MIT மாணவியாக) சொல்லும் நாயகி, வேகாஸில் ஸ்ட்ரிப் கிளப்பில் உக்கார்ந்து கொண்டு நாயகனை பேச்சால் மயக்கி முத்தமிடும் போது வேகாஸின் வாஸ்து சரியில்லை என நினைப்பது தவிர்க்க முடியாததாகிறது.
சேர்த்த பணத்தையெல்லாம் பத்திரமான இடத்தில் வைக்காமல் ரூமிலேயே ஒளித்து வைக்கும் மாணவனின் (எதையும் உணர்ச்சிபூர்வமாக அனுகாமல் நிகழ்தகவின் பட் பார்க்கும் மாணவனின்) லாஜிக் கொஞ்சம் இல்லை ஏணி வைத்து எல்லாப் பக்கமும் உதைக்கிறது.
தோற்பது கூட சறுக்கல் இல்லை, ஆனால் தோற்றபின் நான் தப்பே பண்ணவில்லை என சொல்வதுதான் பெரிய சறுக்கல் என்பது எல்லோருக்குமே பொருந்தும். ஏனோ இந்த டையலாக் எனக்கு ரொம்ப பிடித்திருந்தது. 300,000 டாலர் இருந்தால் இதை விட்டு ஓடிவிடுவேன் என ஆரம்பக் காட்சியில் சொல்வதும், எனக்கு ஹார்வார்ட் மெடிக்கல் ஸ்கூலும் வேண்டாம் ஒன்றும் வேண்டாம் இதுதான் பிடிச்சிருக்கு என நாயகிடம் சொல்லும்போது பெண்களை விட பணம் ரொம்ப போதையானது என சொல்லியிருக்கிறார்களா? (எனக்கு ஏனோ சொல்லணும் போல இருக்கு :-) )
வேகாஸ் லாஸ் பிரிவென்சன் ஸ்பெசலிஸ்ட் கொஞ்சம் நேரம் வந்து அடிதடி+ காமெடி பணியிருக்கிறார். கடைசியில் வில்லத்தனமும் கொஞ்சம் சேர்த்து கொடுத்த காசுக்கு நிறைவாக செய்திருக்கிறார்.
இப்படியே எழுதிக் கொண்டே இருந்தால் "21 படத்தில் 21 குறைகள்" ன்னு ஒரு புத்தகம் எழுதிவிடுவேன் என நினைக்க வேண்டாம். ஒரிஜினல் புத்தகத்தை படிக்காததினால் மேற் சொன்னவைகளையும் மீறி என்னால் படத்தை ரசிக்க முடிந்தது. மொத்தமாக அத்தனையும் எழுதி உங்களை குழப்புவதற்கு பதில்
மீதியை வெண்திரையில் காண்க!!!
பி.கு:- இதை எழுதும் போது நான் கோட் சூட் போட்டுக் கொண்டு காலாட்டிக் கொண்டே எழுதவில்லை.
சவுண்ட் விட்டது
Udhayakumar
at
Sunday, March 30, 2008
3
பேரு குத்தாட்டம் போட்டிருக்காங்க!
கிடங்கு: திரை விமர்சனம்
அக்பர்-பீர்பால் கதை ஒன்னு YouTube-ல பார்க்க வேண்டியதாப் போச்சு. அதுல பெர்சிய மன்னர் அக்பருக்கு பொழுது போகட்டுமேன்னு புதிர் ஒன்னு அனுப்பி வைப்பாரு. பொழுது போகலைன்னா டீக்கடைக்கு போயி 2 போண்டா, பஜ்ஜி வாங்கி சாப்பிட்டு மாலை மலர் படிச்சிட்டு வர வேண்டியதுதானே? பக்கத்து வீட்டு குழந்தை சாப்பிட அடம் பண்ணினதால அந்த புதிரை நாங்களும் தீர்க்க வேண்டியதா போச்சு.
*****************************
IT உலகத்துலயே ரெண்டு பேரு பேசரது மட்டும் ஒன்னுமே புரியாது. Solution Architect ன்னு சொல்லிட்டி BPEL, WSDL, XPATH, XLANG ன்னு எழுத்துக்கூட்டிப் படிச்சாலும் புரியாத மொழியில முற்றுப்புள்ளி வைக்காம பேசி பேசி பெரிய அறிவாளி ரேஞ்சுக்கு படம் காட்டுவாங்க. துரை இங்கிலீசு எல்லாம் பேசுது என முக்குக்கு முக்கு நின்னு தம் போட்டுட்டு கடைசில எல்லாமே XML தான்டா மாப்பிள என நம்ம டெவலப்பர் மக்கள் 6 மணி நேர பிரவுசிங், 6 மணி நேர கோடிங்ன்னு அவங்க வேலைய பார்க்க ஆரமிச்சிருவாங்க. கடைசியில என்ன ஆகும்ன்னுதானே கேக்கறீங்க? கீழ படத்தை பாருங்க....

ரெண்டாவது இந்த டாப் லெவெல் டேமேஜர்ஸ்...CEO, CFO, CIO, COO என பல பதவியில உக்கார்ந்துட்டு பின்நவீனத்துவ எழுத்தாளர்களே தோத்துப் போகும் அளவுக்கு நாக்கு சுளுக்க பேசுவாங்க... எந்த அளவுக்கு புரியாத மொழியில பேசறீங்களா, அந்த அளவுக்கு பங்கு, சம்பளம், சொம்பு தூக்க ஆட்கள்ன்னு களோபரமா இருக்கும்.
"The business world is being disrupted by the combined effects of growing emerging economies, shifts in global demographics, ubiquity of technology and accountability regulation. xxxxxx believes that to compete in the flat world, businesses must shift their operational priorities."
**********
டிஸ்கி:- இந்த பதிவில் எழுதிய கருத்துக்கள் அனைத்தும் என் சொந்த கருத்துக்களே...யாரையும் புண்படுத்தினால் அதுக்கெல்லாம் நான் பொறுப்பாக முடியாது...
சவுண்ட் விட்டது
Udhayakumar
at
Wednesday, March 26, 2008
2
பேரு குத்தாட்டம் போட்டிருக்காங்க!
கிடங்கு: மொக்கை
கடந்த நிதியாண்டில் (2007-08) ரயில்வேத் துறைக்கு கிடைத்த நிகர வருவாய் மட்டும் 18 ஆயிரத்து 416 கோடி ரூபாய். இதில், மத்திய அரசுக்கு பங்குத் தொகையாக அளித்த தொகை ரூ. 13 ஆயிரத்து 534 கோடி.
இந்த ஆண்டில், சரக்கு வருமானமாக ரூ. 47 ஆயிரத்து 743 கோடியும், பயணிகள் போக்குவரத்து மூலமாக ரூ. 20 ஆயிரத்து 75 கோடியும் வருவாய் வரும் என எதிர்பார்க்கிறது ரயில்வே.இத்துறையின் அமைச்சராக லாலு பொறுப்பேற்ற பின், கடந்த நான்காண்டுகளில் ரூ. 68 ஆயிரம் கோடி லாபம் கிடைத்திருப்பதாக பேசப்படுகிறது. பயணிகள் கட்டணத்தை உயர்த்தாமல், சரக்கு கட்டணத்தில் பெரிய மாற்றம் செய்யாமல் இவ்வளவு பெரிய சாதனையை லாலு எப்படிச் செய்தார் என்பது எல்லாருக்கும் புரியாத புதிராக இருக்கிறது.
இதன் பின்னணியில் இருக்கும் `செப்படி வித்தை' பற்றி அரசியல் கட்சியினருக்கும் அப்பாவி மக்களுக்கும் புரியாமல் இருக்கலாம்; பொருளாதார மேதைகளுக்கும், ரயில்வே உயரதிகாரிகளுக்கும் தெரியாமல் இருக்க வாய்ப்பே இல்லை.`பகிரங்கமாக பட்ஜெட்டில் சலுகைகளை வாரி வழங்கும் லாலுவும் வேலுவும், அதற்குப் பின் நிர்வாக உத்தரவுகள், சுற்றறிக்கைகள் மூலமாக மறைமுகமாக கட்டணங்களை மக்கள் தலையில் கட்டுகின்றனர்' என்பதுதான் இந்த லாபக்கணக்கின் பின்னணி.
பா.ஜ., எம்.பி.,க்களும் கூட, இதுபற்றி பார்லிமென்ட்டில் புகார் கிளப்பினர். அதை அரசியல்ரீதியான புகார் என்றே பல தரப்பினரும் ஒதுக்கி விட்டனர். ஏனெனில், தங்கள் குற்றச்சாட்டுகளுக்கான காரணத்தை அவர்கள் தெளிவாக விளக்கவில்லை.இந்நிலையில், கோவையைச் சேர்ந்த `கோயம்புத்தூர் கன்ஸ்யூமர் காஸ்' என்ற நுகர்வோர் அமைப்பு, இந்த மறைமுகக் கட்டணம் தொடர்பாக, சுப்ரீம் கோர்ட்டில் பொதுநல மனு தாக்கல் செய்து, பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இவ்வழக்கை சுப்ரீம் கோர்ட் விசாரணைக்கு ஏற்றுள்ளது. இவ்வழக்கில் கோவையைச் சேர்ந்த ராஜாராமன் என்ற வக்கீல் ஆஜராகியுள்ளார். வழக்கின் விசாரணை, வரும் ஆக., 1ல் வர உள்ளது.இந்த மனுவை தாக்கல் செய்வதற்கு முன்பாக, ரயில்வேத் துறையில் மறைமுகக் கட்டணங்களை வசூலிப்பது தொடர்பான பல்வேறு தகவல்களை, கடந்த ஒன்றரை ஆண்டாக சேகரித்துள்ளது இந்த அமைப்பு. தகவல் பெறும் உரிமைச் சட்டத்தின் உதவியுடன் இத்தகவல்கள் திரட்டப்பட்டுள்ளன.சூப்பர் பாஸ்ட் ரயில்களில் கூடுதல் கட்டணம் வசூலிப்பது, பாதுகாப்பு கட்டணம், தத்கல் முறையில் கூடுதல் கட்டணம் பெறுவது, முன்பதிவுக்காக அதிகத் தொகை வாங்குவது என நான்கு விதமான மறைமுக கட்டணங்களை வசூலிப்பதாக, சுட்டிக்காட்டுகிறது இந்த மனு.ஓரிரு ரயில்களில் மட்டுமே வசூலிக்கப்படும் மறைமுக கட்டணங்களே, பல கோடி ரூபாயாக உள்ளது; நூற்றுக்கணக்கான ரயில்களில் இவற்றை வசூலிக்கும் போது, அதுவே பல ஆயிரம் கோடி ரூபாயாக உயர்ந்து விடுகிறது.
`சூப்பர் பாஸ்ட்' ரயில்கள்: இந்தியாவில் தற்போது இயக்கப்படும் 628 ரயில்களில் 306 ரயில்கள், கடந்த இரண்டு ஆண்டுகளில் (2005 ஜன., 1லிருந்து) `சூப்பர் பாஸ்ட்' ரயில்களாக அறிமுகப்படுத்தப்பட்டன. இவற்றில், 198 ரயில்கள் ஏற்கனவே இயக்கப்பட்ட ரயில்களிலிருந்து `சூப்பர் பாஸ்ட்' ஆக மாற்றப்பட்டவை.கடந்த 2005-06ல் 70 ரயில்களும், 2006-07ல் 38 ரயில்களும்`சூப்பர் பாஸ்ட்' ரயில்களாக அறிமுகம் செய்யப்பட்டன. மற்ற ரயில்களை விட இந்த ரயில்களில் பயணம் செய்ய `ஏசி' வகுப்புக்கு டிக்கெட் கட்டணத்தை விட ரூ. 50ம், படுக்கை வசதி கொண்ட வகுப்புக்கு ரூ. 20ம் கூடுதலாக செலுத்த வேண்டும்.உதாரணமாக, கோவையிலிருந்து சென்னைக்கு சாதாரண பாசஞ்சர் ரயில்களில் ஒரு டிக்கெட்டுக்கு ரூ. 121 ஆகவும், எக்ஸ்பிரஸ் ரயிலில் ரூ. 215 ஆகவும், `சூப்பர் பாஸ்ட்' ரயிலில் ரூ. 235 ஆகவும் கட்டணம் வசூலிக்கப்படுகிறது; இந்த டிக்கெட்டை கோவையில் வாங்காமல், போத்தனூரில் வாங்கினால் கூடுதலாக ரூ. 10 செலுத்த வேண்டும்.மற்ற ரயில்களை விட இந்த ரயில்களில் கூடுதல் வேகமோ, கூடுதல் வசதியோ இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. பாசஞ்சர் ரயிலை விட சற்று வேகமாகச் செல்வதே எக்ஸ்பிரஸ் ரயில் என்று சொல்லும் ரயில்வேத் துறை, அதற்கென ஒரு வேகத்தை நிர்ணயிக்கவில்லை.அதே நேரத்தில் `சூப்பர் பாஸ்ட்' ரயில்கள், அகல ரயில் பாதையில் மணிக்கு 55 கி.மீ., வேகம் செல்பவை, என்று கூறுகிறது ரயில்வேத் துறை. ஆனால், ரயில்வே சட்டத்தில் `சூப்பர் பாஸ்ட்' ரயில்களுக்கான வேகம் பற்றி குறிப்பிடப்படவில்லை. இந்த ரயில்களில் பாசஞ்சர் ரயிலை விட கூடுதலாக எந்த வசதியும் இருப்பதில்லை; அதேபோன்று, இத்தனை ஸ்டேஷன்களில்தான் நிறுத்த வேண்டுமென்ற குறிப்புகளோ, கட்டுப்பாடுகளோ இல்லை. தவிர, இவ்வளவு தூரத்துக்கு இடையில் மட்டுமே `சூப்பர் பாஸ்ட்' ரயிலை இயக்க வேண்டுமென்ற நியதியும் கூட இல்லை. கோவையிலிருந்து மேட்டுப்பாளையம் செல்லும் பாசஞ்சர் ரயிலைக் கூட, ரயில்வேத் துறை நினைத்தால் `சூப்பர் பாஸ்ட்' ரயில் என்று பெயர் மாற்றி, கட்டணத்தை உயர்த்த முடியும். ரயில்களில் கூடுதலாக எந்த வசதியையும் செய்யாமல், சிறிதும் வேகத்தையும் கூட்டாமல், செலவே இல்லாமல் கட்டணத்தை மட்டும் உயர்த்துவதே, ரயில்வேத் துறையின் அதீத லாபத்துக்கு அஸ்திவாரம்.
பாதுகாப்பு கட்டணம்: சாமர்த்தியமாக ரயில்வேத் துறை செய்யும் இன்னொரு வசூல், பாதுகாப்பு கட்டணம். ரயில்களில் `ஏசி' வகுப்பில் பயணம் செய்பவர்களுக்கு ரூ. 100ம், படுக்கை வசதியுள்ள வகுப்புகளில் பயணம் செய்பவர்களுக்கு ரூ. 20ம் பாதுகாப்பு கட்டணமாக ரயில்வேத் துறை வசூலிக்கிறது. ஆயிரம் கி.மீ., தொலைவில் செல்லும் ரயில்களில் இந்த கட்டணம் ரூ. 20 என்றும், 200 கி.மீ., செல்லும் ரயில்களில் ரூ. 10 என்றும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
உதாரணமாக, மேட்டுப்பாளையத்திலிருந்து சென்னை செல்லும் நீலகிரி எக்ஸ்பிரஸ் ரயிலில் மட்டுமே ஒரு நாளில் `சூப்பர் பாஸ்ட்' கட்டணமாக ரூ. 60 ஆயிரம் வசூலாகிறது; தவிர, பாதுகாப்பு கட்டணமாக ஒரு நாளில் ரூ. 75 ஆயிரம் வசூலாகிறது. பயணிகளின் வசதிக்கும் பாதுகாப்புக்கும் எந்த உத்தரவாதமும் தராமல், இந்த ஒரு ரயிலில் மட்டும் ஆண்டுக்கு ஐந்து கோடி லாபம் பார்க்கிறது ரயில்வேத் துறை. இந்த அடிப்படையில் கணக்கிட்டால், இந்தியாவிலுள்ள 306 சூப்பர் பாஸ்ட் ரயில்களில், ஆண்டுக்கு மூவாயிரத்து 500 கோடி ரூபாயும், அனைத்து ரயில்களிலும் சேர்த்து ஐயாயிரம் கோடி ரூபாயும் ரயில்வேத் துறைக்கு பணம் கிடைக்கிறது. இவற்றை மிஞ்சும் வகையில் ரயில்வேத் துறை, மற்றொரு பகல் கொள்ளையும் அடிக்கிறது.
தத்கல் பதிவில் கொள்ளை:அதற்குப் பெயர்தான் `தத்கல்' முறை. ஐந்தாண்டுகளுக்கு முன், இந்த முறையை அறிமுகம் செய்தபோது `அவசர கால முன்பதிவு' என்று விளக்கம் தரப்பட்டது. பயணம் செய்வதற்கு இரு நாட்களுக்கு முன்பாக டிக்கெட் பதிவு செய்பவர்களுக்கு, கூடுதல் கட்டணத்தை பெற்றுக் கொண்டு, இடத்தை உறுதி செய்வதே இந்த முறை. அதாவது, சாதாரணத் தொகைக்கு வழங்க வேண்டிய இடத்தை ரயில்வேத் துறையே அதிக விலைக்கு விற்றது. இந்த ஒதுக்கீட்டுக்காக கூடுதல் பெட்டிகளும் அப்போது ஒதுக்கப்பட்டன; சில குறிப்பிட்ட ரயில்களில் மட்டுமே இந்த முறை கொண்டு வரப்பட்டது.ஆனால், 2004லிருந்து இந்த முறையில் மாற்றம் செய்து, எல்லா ரயில்களிலும் இந்த முறை கொண்டு வந்ததுடன், கூடுதல் பெட்டிகள் இல்லாமலே, பொதுமக்களுக்கு ஒதுக்கப்பட்ட இடங்களில் `தத்கல்' முறைக்கு 10- 20 சதவீத இடம் ஒதுக்கப்பட்டது.இந்த முறையில், வழக்கமாக தரப்படும் டிக்கெட் கட்டணத்தை விட ரூ. 50 செலுத்த வேண்டும் என முதலில் கூறப்பட்டது. பின்பு, அத்தொகையை ரூ. 75 ஆகவும், கூட்டம் அதிகமாகவுள்ள ரயில்களில் (பீக் சீசன்) ரூ. 150 ஆகவும் உயர்த்தியது; ஆண்டுக்கு எட்டு மாதங்கள், இந்த ரயில்களுக்கு `பீக் சீசன்'தான். சாதாரண ரயில்களில் இந்த `தத்கல்' ஒதுக்கீடு, 10 சதவீதம் என்றும், முக்கிய ரயில்களில் 20 சதவீதம் (ஸ்லீப்பர் கிளாஸ் டிக்கெட்) என்றும் கூறப்பட்டது. ஆனால், நீலகிரி எக்ஸ்பிரஸ் ரயிலில் மேட்டுப்பாளையத்திலிருந்து சென்னை செல்லும் போது 33.33 சதவீதமும், சென்னையிலிருந்து வரும் போது 28.37 சதவீதமும் `தத்கல்' டிக்கெட்களுக்கு இடம் ஒதுக்கப்படுகிறது.
தென்னக ரயில்வேயில் இயக்கப்படும் ரயில்களில் மட்டுமே, 15 ஆயிரம் டிக்கெட்கள் `தத்கல்' முறைக்கு ஒதுக்கப்படுகின்றன. இவற்றில், முக்கிய ரயில்களில் இந்த `தத்கல்' டிக்கெட் கட்டணம், 200 சதவீதம். தென்னக ரயில்வேக்கு, ஒரு நாளுக்கு சராசரியாக ரூ. 11 லட்சம் `தத்கல்' மூலமாக வசூலாகிறது.இந்த முறையில் கிடைக்கும் அதிக வருவாய் காரணமாக, இப்போது எத்தனை மாதத்துக்கு முன்பாக `வெயிட்டிங் லிஸ்ட்' இருந்தாலும் அப்போதே `தத்கல்' டிக்கெட் தொகையைக் கட்டிவிட்டால் முன்னுரிமையில் இடம் தரலாம் என்றும் புதுச்சலுகையை அறிவித்துள்ளது ரயில்வேத் துறை.நீலகிரி எக்ஸ்பிரஸ், சேரன் எக்ஸ்பிரஸ் ஆகிய இரு ரயில்களில் மட்டுமே, ஒவ்வொரு ஆண்டும் `தத்கல்' கட்டணத்தால் நான்கு கோடியே 25 லட்சம் ரூபாய் வசூலாகிறது. ஒரே ஒரு ரயிலில் இவ்வளவு வருவாய் என்றால், இந்தியாவில் இயக்கப்படும் பல நூறு ரயில்களில் வருவாய் பற்றி மக்களே கணக்கிட்டுக் கொள்ளலாம்.ஏற்கனவே, `எமர்ஜென்சி கோட்டா (இ.க்யூ.,)' இருக்கும்போது, இந்த `எமர்ஜென்சி ரிசர்வேஷன்' முறையை (தத்கல்) கொண்டு வந்ததற்கு, பணம் சம்பாதிப்பதே ஒரே நோக்கம் என்பது தெளிவாகியுள்ளது.
சரக்கு கட்டண உயர்வு:ரயில்வேத் துறையின் மறைமுக வசூல் பட்டியலில் சமீபமாகச் சேர்ந்து இருப்பது, சரக்கு கட்டண உயர்வு. பட்ஜெட்டில் சரக்கு கட்டணத்தை உயர்த்தவே இல்லை என்று செய்திகள் வந்த ஒரே வாரத்துக்குள், சரக்கு கட்டணத்தை அதிரடியாக உயர்த்தினர், ரயில்வே அதிகாரிகள்.சரக்குகள் அனுப்புவதை ஸ்டாண்டர்டு, பிரீமியம், ராஜதானி, லக்கேஜ் என நான்காகப் பிரித்து, தாறுமாறாக கட்டணம் வசூலிக்கின்றனர். உதாரணமாக, மதுரையிலிருந்து சென்னைக்கு ஒரு `பைக்' அனுப்ப முன்பு ரூ. 145 மட்டுமே கட்டணமாக இருந்தது; இப்போது ரூ. 435 வசூலிக்கப்படுகிறது.ஒரு குவிண்டால் காய்கறிக்கு ரூ. 55 ஆக இருந்த கட்டணம், இப்போது ரூ. 120 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. சரக்கு கட்டணம் இவ்வாறு பல மடங்கு உயர்த்தப்பட்டு இருந்தாலும், பட்ஜெட்டில் இதுபற்றி லாலு வாய் திறக்கவே இல்லை.
-தினமலர்.
சவுண்ட் விட்டது
Udhayakumar
at
Sunday, March 23, 2008
1 பேரு குத்தாட்டம் போட்டிருக்காங்க!
கிடங்கு: தினமலர், லல்லு, வயித்தெரிச்சல்
சவுண்ட் விட்டது
Udhayakumar
at
Wednesday, October 31, 2007
4
பேரு குத்தாட்டம் போட்டிருக்காங்க!
கிடங்கு: விமர்சனம்
சவுண்ட் விட்டது
Udhayakumar
at
Saturday, October 27, 2007
11
பேரு குத்தாட்டம் போட்டிருக்காங்க!
கிடங்கு: நிலா
இதுவரை இந்த டாபிக்கை தொட அனுபவம் இல்லை என்பதை விட ஆறின பழங்கஞ்சி என தள்ளி விட்ட நாட்கள்தான் அதிகம். தொடாத காதல், பார்க்காத காதல், காவிய காதல் என இதைப் பிரித்து மேயாத சினிமாவோ, பத்திரிக்கைகளோ விரல் விட்டு எண்ணி விடலாம். பெற்றோர்களின் பார்வையில் இந்த காதலை மையப்படுத்தி எந்த கதையையும், சினிமாவையும் நான் இதுவரைக்கும் பார்த்ததில்லை. அப்படி இருந்தாலும், பிள்ளைகளின் காதலை தெரிந்த பெற்றோர்களின் இயல்பை, சந்தோசத்தை, பயத்தை, பரிதவிப்பை முழுதாக சித்தரித்தது மிகவும் குறைவே (இருந்தால் சொல்லுங்களேன், பார்த்து விடலாம்.)
20, 25 வருடம் பார்த்து பார்த்து வளர்த்த நம் குழந்தை எடுத்த முடிவு தப்பாகி விடவா போகிறது என நினைக்கும் பெற்றோர்களும் இருக்கிறார்கள். உலகம் தெரியாத பையன் விளையாட்டுத்தனமா செய்யறதையெல்லாம் ஏத்துக்க முடியாது என சொல்லும் பெற்றோர்களும் இருக்கிறார்கள். கொஞ்சம் அதீதமாக சிந்தித்து எக்குத்தப்பான முடிவு எடுக்கும் பெற்றோர்களும் உண்டு. காதலை துணையிடம் சொல்லத் தெரிந்த மனதுக்கு பெற்றோருக்கு தெரியப்படுத்தும் எண்ணம் ஏனோ பெரும்பாலும் இருப்பதில்லை. வயது, நமது சமூக கட்டமைப்பு என பல விசயங்களை சொல்லித் தப்பித்துக் கொள்ளலாம். ஆனாலும், பெற்றோர்களின் பார்வையில் காதல் என்பது தீண்டாமையா? இல்லை என்றுதான் சொல்ல வேண்டும்.
ஒரு வருடம் உனக்கே உனக்காக அழைந்து திரிந்து ஒரு பெண்ணை உனக்கு மனைவியாக்கும் அந்த சுகம் இனிமேல் இருக்கப் போவதில்லை; கல்யாண கோலாகலத்தில் ஒரு மூன்று மாதம் அலைந்து திரிந்து எனக்கு ஓய்வே இல்லை என புலம்ப முடியாது; கல்யாண அலைச்சலில் பிளட் பிரசர் ஏறி ஒரு நாலு நாள் பெட் ரெஸ்ட் எடுக்க முடியாது; உன் அக்காவுக்கு மறு சீர் என சொல்லி அவள் கல்யாணத்துக்கு செய்த அதே அளவு திரும்ப சீர் செய்ய முடியாது; பெண் வீட்டு பெருமையெல்லாம் நானே சொல்ல முடியாமல் உன்னைக் கேட்டு சொல்ல வேண்டி இருக்கும்; பரவாயில்லை உன் சுகமே எங்களுக்கும் சுகம் என சொல்லும் அம்மாக்களும் இருக்கத்தான் செய்வார்கள்.
இருக்கறதுலயே பெரிய சந்தோசம் அடுத்தவங்களை சந்தோசப்படுத்திப் பார்க்கறதுதான் என பதிலுக்கு மல்லுக்கட்டி காதலை தூக்கியெறிபவர்களும் இருப்பார்கள். வீழ்வது நம் கனவாக இருப்பினும் வாழ்வது நம் காதலாக இருக்கட்டும் என காவிய வசனங்கள் பேசமால், கிடைத்த வாழ்க்கையில் டையப்ப்ர் மாத்திக் கொண்டிருக்கும் இப்போதைய அம்மா அப்பாக்கள் என்ன செய்வார்கள்?
சவுண்ட் விட்டது
Udhayakumar
at
Monday, July 23, 2007
4
பேரு குத்தாட்டம் போட்டிருக்காங்க!
கிடங்கு: சிதறல்கள்
சவுண்ட் விட்டது
Udhayakumar
at
Sunday, July 22, 2007
7
பேரு குத்தாட்டம் போட்டிருக்காங்க!
கிடங்கு: அனுபவம்/நிகழ்வுகள், டேக்
சவுண்ட் விட்டது
Udhayakumar
at
Thursday, July 19, 2007
8
பேரு குத்தாட்டம் போட்டிருக்காங்க!
வாழ்க்கை முழுக்க ஒரே டென்ஷன் மயமா இருக்கா? கொஞ்ச நேரம் சிரிச்சு வெச்சுட்டு போய் திரும்ப டென்ஷன் ஆகுங்க...
கொல்ட்டியின் (வெட்டியா, இல்லை கொல்ட்டியா? பேரு சரியா ஞாபகம் இல்லை :-)) ஆர்குட் அலம்பல்களின் இரண்டாம் பாகம் இது. எப்படியெல்லாம் நம்ம பசங்க ஆர்குட்ல பொண்ணுங்களை ஃபிரண்ட் பிடிக்கரானுங்கனு பாருங்க...
1.
nee alaga iruukanu nenikala anna
ahtuellaam nadathrumu payama irkku
hi how r u?
just fun crazy introdution.
HOW IS IT.
மானங் கெட்ட நாயே, நீ கெட்ட கேட்டுக்கு மாதவன் டயலாகா?! பயமா இருந்தா பேன்ட்-ல ஒன்னுக்கு அடி... இதுல ஹவ் இஸ் இட் வேற? நல்லா இல்லைன்னு சொன்னா தூக்கு மாட்டிக்க போறியா?!
2.
had to tell you this....you just remind of somebody, whom i thought i should forget.....but still i felt happy lookin at your face. If you understand tamil....
Nallathor veenai saeithaen athai nalamkaeda puzhithiyil aerivathundo?
நாயீ, எதுக்கெல்லாம் பாரதியார் பாட்டை இழுக்குது பாருங்களேன். தமிழ் பற்று இருக்கற நாலு பேரு பார்த்தா ரத்தக் கண்ணீர் விடுவாங்க. இந்த ஸ்கிரேப்பைப் பார்த்தா பாரதி படத்துல சாயஜி ஷிண்டே போன கழுதை கூட விக்கி விக்கி சாகும்.
3.
hi
This is Karthik from chennai adayar workng in sutherland.
If u like my pic just scrap me. lets hav a nice time
add me in yahoo messenger.
guy22foru@yahoo.com
i come with cam from 8.30 to 9.30am daily.
lets hav a nice time
scrap me. i giv u my mobile number. nama meet panalam. vanga
8.30 to 9.30 கேமரா புடிப்பேன்னா அதுக்கப்புறம் விளக்கு புடிப்பியா? உன்னைய விளக்குமாத்தால அடிச்சு விளக்கு (கேமரா?) புடிக்கற கைக்கு விலங்கு மாட்டி, மகளிர் காவல் நிலையத்துல அண்டர் வேர்/அரணாக்கயிறோடா உக்கார வெச்சு ரிவிட் எடுக்கணும். படுவா, வந்துட்டான்...
4.
hello shaline tell me about ur climate there
கிளைமேட் தெரிஞ்சா என்ன ராக்கெட் விடப் போறியா?
5.
hai, i've not yet put a scrap tu u.
first one
இவரு பெரிய கணித மேதையாத்தான் இருக்கணும். இல்லேன்னா, நம்ம தமிழ் நாட்டுல கேப்டனைத் தவிரா யாரால இப்படி புள்ளி விவரம் தர முடியும்? இதுக்கென்ன கேக் வெட்டி, விழா கொண்டாட சொல்லறியா? ச்சீ, ஓடிப் போ...
6.
can i have this kutti pisasu as my friend???????????????????????????
தம்பி, பிசாசுகூட ஃபிரெண்டு ஆகணும்னா சுடுகாட்டுக்கு போ, இங்க ஏன் வந்து மொக்க போடுற? பெரிய குடுகுடுப்பைக்காரானா இருப்பான் போலிருக்கே?
7.
Hi Dear friend,
This is Raghu from chennai working as a Soft eng.
i like to have friendship with u.
my mail id : raghu0107@gmail.com
i am expecting ur reply
take care
- Raghu
டேய், இதென்ன ஃபிரெண்ட்ஷிப் ரிக்வெஸ்டா? இல்ல, லீவ் லெட்டரா??
எடுக்கறது பிச்சை... இதிலென்ன ஃபார்மல் லெட்டர்?
8.
hi vaisu,
how r u.how is ging u r life da.if u don mine. can v be a frnds.
reply as soon as
takecare
bye
இது வரைக்கும் நல்லாத்தான் இருந்திருக்கும். நீ ஃபிரெண்ட் ஆனதுக்கப்புறந்தான் நாசமாப் போகும். இதுல ,"if u don mine".. 'mine'க்கும் ,'mind'க்கும் வித்தியாசம் தெரியாதா மண்ணாங்கட்டி மண்டையா?
9.
r u BCCCCCCCCCCCCCCCCCCCC
ஏன், BC -ல இருந்தா அர்ஜீன் சிங்கிட்ட சொல்லி சீட் வாங்கித் தரப்போறியா?
10.
ur name s nice mrs.mosquito bite crazzyyyy.....
ஏன்டா, "கொசுக்கடி"ங்கறது நல்ல பேரா? வேணும்னா, உன் குழந்தைக்கு வைச்சுக்கவேன்???
Courtesy: Gethu thaan aambalaiku sothu (Community)
சவுண்ட் விட்டது
Udhayakumar
at
Monday, April 30, 2007
25
பேரு குத்தாட்டம் போட்டிருக்காங்க!
கிடங்கு: சுட்ட பழம்
பொதுவாகவே நடுவர்கள் முகத்தில் எந்த சலனமும் இல்லாமல் அமைதியாக கவனிப்பார்கள். இங்கு சௌம்யாவிடம் இருக்கும் துள்ளல் கலந்த உற்சாகம் அரங்கத்தில் இருக்கும் அனைவரையும் ஆர்ப்பரிக்க வைத்திருக்கிறது. மெகா சீரியலுக்கு மத்தியில் ஒரு நல்ல நிகழ்ச்சி!!!
பாடல் வரிகளுக்கு அர்த்தம் தெரிந்திருந்தால் இந்த பாட்டை தேர்வு செய்திருப்பாரோ???
சவுண்ட் விட்டது
Udhayakumar
at
Sunday, April 29, 2007
9
பேரு குத்தாட்டம் போட்டிருக்காங்க!
கிடங்கு: சுட்ட பழம்

சவுண்ட் விட்டது
Udhayakumar
at
Wednesday, April 18, 2007
15
பேரு குத்தாட்டம் போட்டிருக்காங்க!
கிடங்கு: அழகு
தமிழ் சினிமாவுக்கும், அமெரிக்க மாப்பிள்ளைகளுக்கும் என்றைக்கும் ஏழாம் பொருத்தம்தான். பெண் ஒரு உதவாக்கரையை காதலித்தால் "இரு, அமெரிக்காவில் இருக்கும் என் தம்பியை இப்பவே போன் பண்ணி வரச் சொல்லறேன்" என அம்மாக்காரி கோபமாக மகளை மிரட்டுவது ஒழுங்கா சாப்பிடு, இல்லைன்னா பூச்சாண்டி கிட்ட புடிச்சிக் குடுத்துருவேன் ரகம்.
கல்யாண மண்டபத்தில் நம்ம ஹீரோ கண்ணீர் விட்டுக் கொண்டு டயலாக் விடும் போது அந்த ஹோம குண்டத்தின் புகையத் தவிர்க்க மட்டும் எழுந்து நின்று கொண்டு "சரி சரி, தாலியை கட்டிடறனே, அப்புறம் பேசலாமே" என உலகமே அழிந்தாலும், உண்டக் கட்டியை வாங்கிட்டுத்தான் சாவேன் என ஒரு ரகம்.
நாயகன் சேட்டு கடையில் வைப்பதற்க்கு எதை வைக்கலாம் என குழப்பமாக இருக்கும் சமயம் 10 ரவுடிகளை அனுப்பி தூக்கிப் போட்டு மிதித்துவிட்டு கிளைமாக்ஸில் நாயகன் தெரியாமால் வேற மண்டபத்துக்கு வேறு நாளில் வந்து விட்டால் என்ன செய்வது என கல்யாண பத்திரிக்கையை குடுத்து நாள், இடம் எல்லாம் தெளிவா சொல்லிவிட்டு வரும் நாசா விஞ்ஞானிகள் ஒரு வகை.
பெங்களூரில் பத்து கிரவுண்ட், ஒரே பொண்ணு, நல்ல இடம் என சொன்ன மாத்திரத்தில் "நல்ல இடமாத்தான் இருக்கும், எப்படியும் 2 கோடிக்கு மேல் போகும்" என மனதிலும் "அப்போ அந்த இடத்தையே பேசி முடிச்சிடிங்க" என skype phone-லும் சுருக்கமாக வாழ்க்கையை தீர்மானிக்கும்-
என பல தரப்பட்ட ரகங்களில் தமிழ் இயக்குநர்களின் கைகளில் கசங்கி சின்னாபின்னாப்படும் கேரக்டர் இந்த அமெரிக்க மாப்பிள்ளை.
சுமார் ஒரு 20 வருடமாகாவாவது இந்த கொடுமை நடந்து கொண்டிருக்கிறது. க்ரீமீ லேயர்ன்னு சொல்லி அமெரிக்க மாப்பிள்ளைகளை தூக்கி எறிந்து விட்டு வேற ஊர் மாப்பிள்ளைகளை இனி மேல் கலாய்க்க சொல்ல வேண்டும். உயர் நீதி மன்றத்தில் தமிழக இயக்குநர்களுக்கு எதிராக ரிட் மனு தாக்கல் செய்யலாமா என கூட நான் நினைத்தேன். சிவாஜி படப் பாடல்களில் வரும் ஆங்கில வரிகளுக்கு ஆட்சேபனை, காவிரி குறித்து வரும் பாடலுக்கு எதிர்ப்பு, உலக கோப்பையில் தோற்ற இந்திய வீரர்களை கழுதை மேல் ஏற்றி கரும் புள்ளி செம்புள்ளி குத்தலாமா என பல பிரச்சினைகள் தலை விரித்தாடும் இந்த நேரத்தில் இதை யாரும் கவனிப்பார்களா என தெரியவில்லை.
சவுண்ட் விட்டது
Udhayakumar
at
Tuesday, April 10, 2007
22
பேரு குத்தாட்டம் போட்டிருக்காங்க!
கிடங்கு: ஆர்வக் கோளாறு, நையாண்டி
தமிழ்மணச் சண்டைகள், பின்னூட்ட உயரெல்லை, சுடரோட்டம், கடவுள் பாதி மிருகம் பாதியான வித்தியாசமான குணங்கள் என எதுவும் காதுக்கெட்டாதபடி இறக்கை முளைத்த குதிரையாய், எதையும் சட்டை செய்யாமால் வேகமாய் ஒடிக் கொண்டிருந்தது வாழ்க்கை.
சின்ன வயதில் ஊர் சுற்றுவதில் ஆர்வம் கொஞ்சம் அதிகமாகவே இருந்தது. தீபாவளிக்கு தாத்தா துணி எடுத்து தருவதற்காக ஈரோடு கூட்டிக் கொண்டு போய் தெரிந்தவர் வீட்டில் உட்கார்ந்து பேசிக் கொண்டிருந்தார். ஊர் சுற்ற வந்த எனக்கு போரடிக்கவே தாத்தாவை நச்சரிக்க ஆரம்பித்தேன். அவரும் அடுக்கி வைத்த்ருந்த செங்கல்லை எண்ணி விட்டு வந்தால் கிளம்பலாம் என்றார். நீள வாக்கில், அகல வாக்கில், உயர வாக்கில் என செங்கல்லின் எண்ணிக்கையை கணக்கிட்டு பெருக்கி இரண்டே நிமிடத்தில் சொன்னேன்.
அவசரத்துல பொறந்தவன்டா இவன் என பல பேர் நொந்து போயிருக்கிறார்கள். KBC யில் பங்கு பெற்றிருந்தால் கூட கடைசி கேள்விக்கு முதல்ல பதில் சொல்லறனே என் ஆரம்பித்து விடுவேன். பருத்தி வீரனை முதலிலிருந்தே பார்த்து தொலைத்திருக்கலாம். எடுத்தவுடன் கடைசியை பார்த்து மனசே சரியில்லை,
முழுபடத்தையும் பார்க்கவே முடியவில்லை.
வாழ்க்கையில் எல்லோரும் எதாவது தேடிக் கொண்டே இருப்பதை நினைத்தால் சிரிப்பாக வந்தது. அதையே நான் செய்யும் பொழுது தவமாய் தெரிகிறது...
வானம் வேண்டுமாம்
வானவில் வேண்டுமாம்
தென்றல் வேண்டுமாம்
சாரல் வேண்டுமாம்
குளிர் வேண்டுமாம்
இருட்டு வேண்டுமாம்
தனிமை வேண்டுமாம்
கண்ணீர் வேண்டுமாம்
காதலி வேண்டுமாம்
கவிதை வேண்டுமாம்
வாழ்க்கை வட்டத்தில்
இல்லாததை தேடி ஓடும்
இந்த கால்கள்...
இருப்பதை வைத்து
இன்பம் என்பது
எட்டாக் கனியோ???
சவுண்ட் விட்டது
Udhayakumar
at
Sunday, April 01, 2007
11
பேரு குத்தாட்டம் போட்டிருக்காங்க!
கிடங்கு: அனுபவம்/நிகழ்வுகள்
மெயிலில் வந்த கவிதை இது.
On 2/18/07, Parthiban Subramanian
Only when the last tree falls,
Only when the last fish get caught,
Only when the last drop of water gets poisoned,
Then only you'll know,
You can't eat money.
எப்போதோ அவுட்லுக்கில் படித்தது; கவிதை சிறியதாயினும் அதன் உள்கருத்து மிக சிந்திக்கத்தக்கது. " Global Warming" மற்றும் " Environmental pollution" பற்றிய ஆய்வு கட்டுரையில் இடம் பெற்றிருந்தது.
எனக்கான வரையில் தமிழ்ப்படுத்தி உள்ளேன்.
கடைசி மரம் வேரற்றுச் சாய்ந்த பிறகு
தூண்டிலில் கடைசி மீனும் மாட்டிய பிறகு
மரணச் சுவையை சொல்லக் காத்திருக்கும்
கடைசி சொட்டு நீரும் விஷமேறிய பிறகு
பயமறியா மனிதனுக்கு பிறகுதான் தெரியும்
இனி காகிதப் பணத்தை உண்ண முடியாது என்று.
சவுண்ட் விட்டது
Udhayakumar
at
Sunday, February 18, 2007
5
பேரு குத்தாட்டம் போட்டிருக்காங்க!
கிடங்கு: கவிதை
திரை விமர்சனம் என்பதை விட தீபாவளியில் எனக்கு பிடித்ததும் பிடிக்காததும் என்பதுதான் சரியாக இருக்கும்.
கதை NH 7 ல் ஓசூருக்கும் கிருஷ்ணகிரிக்கும் இடையில் பில்லுவை (ரவி) துவைத்து துவம்சம் செய்து ரோட்டின் ஓரத்தில் தூக்கிப் போடுவதில் ஆரம்பிக்கிறது. எனக்கு நினைவு தெரிந்தே சென்னைக்கு ஒரு ஐந்து அல்லது ஆறு முறைதான் சென்றிருப்பேன். ராயபுரம் ஏரியாவில் நடக்கும் கதை. ராயபுரம் மாதிரியே செட் போட்டு எடுத்திருக்கிறார்கள் என படித்தேன். ராயபுரத்துக்காரர்கள்தான் சொல்ல வேண்டும்.
ராயபுரத்தின் மரியாதைக்குரிய முதலியார் (விஜயகுமார்), மகன் பில்லு, பெரிய இடத்து பெண் சுசீ (பாவனா) மற்றும் ராயபுரம் மக்களைச் சுற்றி கதை நகர்கிறது. பில்லு சுசீக்காக பயங்கரமாக ரத்தம் சிந்துவதை பார்த்ததும் இன்னொரு துள்ளாத மனமும் துள்ளும் மற்றும் பெண்ணின் மனதை தொட்டு கதையை வேறொரு மிக்சியில் போட்டு அடித்துத் தரப் போகிறார் என எழிலின் பழைய படங்கள் நினைவுக்கு வந்து தொலைத்தது.
கொஞ்சம் தொப்பையுள்ள தேவதையாக பாவனா (உடை விஷயத்தில் கொஞ்சம் கவனம்; இல்லை கொஞ்சம் உடற்பயிற்சி அவரை முழு தேவதையாக்கும்). சொந்த செலவில் சூனியம் என்ற வார்த்தையை கேட்டு சிரிக்காமல் இருக்க முடியவில்லை. மகனை அடிக்க வந்த ரவுடியிடம் சாப்பிட்டாயா என கேட்கும் முதலியார், சுசிக்காக மாலையை கழட்டிவிட்டு கவுச்சி சாப்பிடும் சேட்டு, பாசக்கார மக்கள் என ராயபுரம் கண் முன் விரிகிறது.
சுசியை அட்டு பிகர் என பில்லு காலய்ப்பது, ஹோலியின் போது கலராய் விரியும் அவர்கள் நட்பு, ஆசிரமத்தில் மொட்டவிழும் அவர்கள் காதல் (?) என படம் ஜாலி நடை போடுகிறது. அவர்களுக்குள் வரும் சின்ன சின்ன மாற்றங்களை எழில் நன்கு காட்சிக்குள் அடைத்திருக்கிறார். காதல் வைத்து பாடல் எடுத்த விதம் அருமை. சுசீக்கு உள்ள பிரச்சினையை (post traumatic event amneshia) பார்வையாளர்களுக்கு விளக்கும் டாக்டராக ரகுவரன்.
நானே உன்னை மறந்துட்டு தெரியாதுன்னு சொன்னாலும் நீ என்னை விட்டுடக் கூடாது என் சுசீ கதறும் போது இனி என்ன நடக்கும் என எங்களுக்குத் தெரியும் என்னும் முடிவுக்கு அழைத்துச் செல்கிறார்கள். கைப்புள்ள் ஸ்டைலில் பில்லும் சுசீயும் தப்பு செய்யும் காட்சி ரசிக்க வைக்கிறது.
பில்லுவின் புஜ பலத்தைக் காட்ட 3 சண்டைகள், கொஞ்சம் காமெடி, நிறைய சென்டிமெண்ட் என கதை நகர்கிறது. வழக்கமான எழில் பட கிளைமாக்ஸ். போகாதே பாடலில் பெங்களூரும், யவன் சங்கர் ராஜாவும் அருமை. என் பெங்களூர் நினைவுகளை கிளறி விட்ட விஜய் மில்டன் கேமராவுக்கும் ஒரு ஓ...
காதல் , சென்டிமெண்ட் என கலந்து ஒரு வெற்றிப்படத்தை தந்த எழிக்கும், லிங்குசாமிக்கும் வாழ்த்துக்கள்.
சவுண்ட் விட்டது
Udhayakumar
at
Sunday, February 18, 2007
6
பேரு குத்தாட்டம் போட்டிருக்காங்க!
கிடங்கு: விமர்சனம்
காவேரியை தேடு தேடுன்று இணையத்தில் தேடினால் கீழ்க்கண்ட விக்கிபீடியா சுட்டி கிடைத்தது.
http://en.wikipedia.org/wiki/Kaveri_River_Water_Dispute
இது ஒரு நடுநிலையான கட்டுரை இல்லையென முகப்பிலேயே சொல்லி இருக்கும் போதிலும் உங்கள் மேலான கருத்துக்களை அதில் இணைப்பதன் மூலம் தமிழர்களின் காவேரி வாதம் இணையத்தில் இன்னும் வலுப்படும்.
என் பார்வையில்:
என் நண்பன் சுவாமிநாதன் இதற்காகவெல்லாம் வாதாடி இருக்கிறான் என்பது எனக்கு ஆச்சரியமாகவும், பெருமையாகவும் உள்ளது.
வாழ்த்துக்கள் நண்பா!!!
இந்த வாதங்களை இங்கே பார்க்கலாம்.
http://en.wikipedia.org/wiki/Talk:Kaveri_River_Water_Dispute
நமக்கு தமிழ்மணத்திலும், நமக்குள்ளும் சண்டை போட எவ்வளவோ இருக்கிறது, இதற்கெல்லாம் எங்கே நேரம் என்கிறீர்களா?
சவுண்ட் விட்டது
Udhayakumar
at
Friday, February 09, 2007
8
பேரு குத்தாட்டம் போட்டிருக்காங்க!
கிடங்கு: கட்டுரை, சண்டைக்கோழி
IT தொழிலாளியும் - ஆளவந்தானும் - நம்ம பாமரனும்! என்ற கட்டுரைக்கு என் பின்னூட்டம் இது. நீண்ட நாட்களுக்கு அப்புறம் நான் இணையத்தில் உலாவியதாலோ என்னவோ ஒரு பதிவுக்கு தேவையான அளவு சேர்ந்துவிட்டது.
=========
அசுரன் அவர்களே,பாமரனின் இந்த கட்டுரைக்கு என் எதிர்ப்பை முதலில் பதிவு செய்து கொள்கிறேன்.
1. மொத்த IT கும்பலுமே காசு வெறி பிடித்தும், இரவில் குடிக்காமல் விட்டால் பைத்தியம் பிடுத்து விடுவது போலும் சித்தரித்திருக்கிறார் பாமரன். டாஸ்மாக்கின் விற்பனை மொத்த தமிழ்நாடுமே குடிகாரந்தான் என சத்தியம் செய்யாமல் செய்கிறதே. அதற்கென்ன பதில் வைத்திருக்கிறார் அவர், அல்லது நீங்கள்தான்????
2. பப் கலாச்சாராத்தை ஒழிக்க தனிப்படை இல்லை தமிழ்நாட்டில். ஆனால் கள்ள சாராயத்தை ஒழிக்க மது விலக்குப் பிரிவு 24 மணி நேரமும் தொடர்ந்து தமிழ்நாடு முழுவதும் செயல்படுகிறது. பாமரானார் அவர்கள் என்றாவது கள்ள சாராயத்தை எதிர்த்து ஒரு கட்டுரை (ஒன்றே ஒன்று போதும்) எழுதியிருக்கிறாரா? அவர் புகழ் பாட என் வாய் மட்டும் இல்லை, என் பின்னால் ஓராயிரம் வாய் இருக்கும் என்பதில் எனக்கு மாற்றுக் கருத்து இல்லை.
3. 20 வயதில் முடிவெடுக்கும் திறன் இருக்காது என பொத்தம் பொதுவாக முடிவுக்கு வருவதை தவிர்க்க வேண்டுகிறேன். 21 வயதில் 27 வயது அக்கா கல்யாணத்துக்கு வாங்கிய கடனுக்கு வட்டி, அப்பா அம்மாவுக்கு மெடி கிளெய்ம் பாலிசி, சித்தி மகனுக்கு காலேஜ் செலவு என எங்களுக்கும் ஒரு வட்டம் இருக்கிறது. மொத்த IT கூட்டத்தில் 10% (ஒரு லாரி அளவு :-) ) இருக்குமா இந்த குடித்து விட்டு கும்மாளம் போடும் கூட்டம். மொத்த IT கூட்டத்தையும் குனிய வைத்து கும்முகிறாரே பாமரனார்???
4. IT மக்களின் காரில் இப்போழுது கல் எறிவதை விட அம்மாவுக்கு இருதய ஆபரேஷன் 1 லட்சம் வேண்டும் என் ஒரு மெயில் தட்டிப் பாருங்கள், ஒரு வாரத்தில் உங்கள் அம்மாவின் ஆபரேசனுக்குத் தேவையான பணம் மட்டும் அல்ல, சிறந்த சிகிச்சைக்கும் வழி செய்து விடுவார்கள். யாருக்காவது இது பற்றிய மேலதிக விவரங்கள் வேண்டுமானால் என்னைத் தொடர்பு கொள்க.
5. என் அப்பாவின் ரிடையர்மெண்ட் கால சம்பளம் என் முதல் மாச சம்பளத்தை விட குறைவு என காலரை தூக்கி விட்டவர்களை விட அதை அப்படியே மொத்தமாக அவரிடம் குடுத்து காலில் விழுந்தவர்கள்தான் என் கண்ணில் நிறைய (நிறையவே...) தென் படுகிறார்கள். என் பார்வை சரியானது என உறுதியாக நான் நம்புகிறேன்.
சவுண்ட் விட்டது
Udhayakumar
at
Monday, February 05, 2007
35
பேரு குத்தாட்டம் போட்டிருக்காங்க!
கிடங்கு: கட்டுரை, சண்டைக்கோழி