Saturday, November 01, 2008

LAPD நாய்கள், Shoot 'em Up, கொலை வெறி

என்னுடன் பணிபுரிய வந்தவரை அழைத்து வர லாஸ் ஏஞ்சலீஸ் ஏர்போர்ட் உள்ளே நுழைந்த போது என் காரை தனியாக ஒதுக்கி மெட்டல் டிடெக்டர் வைத்து செக் செய்தார்கள். எனக்கு முன்பிருந்த காரிலும் இந்தியர் அல்லது தெற்காசிய நாட்டைச் சேர்ந்த ஏதோ ஒரு குடும்பம்தான் இருந்தது. அவர்களுக்கும் இதே சோதனை. என்னை நடு ரோட்டில் வைத்து முழுவதும் உறுவி தடவிப் பார்த்த மாதிரி இருந்தது. ங்கோ**தா, தா**ழி என சராமாரியாக திட்டிக் கொண்டே இருந்தேன் அவன் என் கார் முழுவதும் சோதனை போடும் வரை. அந்த பாடுகளும் மொழி புரியாமல் நான் எதோ பாடிக் கொண்டிருந்தேன் என நினைத்திருக்கலாம். உலகத்தில் இருக்கும் அத்தனை மலங்களையும் கொண்டு வந்து அங்கு கொட்ட வேண்டும் என்ற ஆத்திரம் இருந்தது. மெட்டல் டிடெக்டர் சோதனையை நூறு தடவை ஏர்போர்ட்டில் செய்திருந்தாலும் இன்று என்னை இது என்னவோ பண்ணியது.

கடந்த முறை கொழும்பு வழியாக அமெரிக்கா வந்த போது ஒரு சம்பவம் நடந்தது. அது எனக்கு கொடுமையாக தெரியவில்லை. பெருமையாக இருந்தது. கோவையிலிருந்து கொழும்பு வந்ததும் ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் ஏற்பாடு செய்திருந்த வண்டியில் கட்டுநாயக விமான நிலையத்திலிருந்து பாம் ட்ரீ ரெஸ்ட்டாரெண்ட் வந்து சாப்பிட்டு விட்டு ஆற அமர சிங்கள சிப்பாய்களைப் பார்த்து விட்டு (சாதரண மனிதர்களே கண்ணில்படவில்லை) உள்ளே நுழையும் போது இமிக்ரேஷனில் கேள்வி கேட்டு குடைந்தார்கள். மிகப் பொறுமையாக (பெருமையாகவும்) இருந்து பதில் சொல்லி, கேள்விக்கு பதில் கேள்வி என ஹீரோ மாதிரி உணர்ந்தேன். தமிழ்நாட்டிலிருந்து நான் இங்க வந்ததுக்கு காரணம் ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ். அவங்களை கேள்வி கேப்பீங்களா? என நக்கலடித்து விட்டு நகர்ந்தேன்.

அதற்கும் இதற்கும் பெரிய வித்தியாசம் இல்லையெனிலும் ஏதோ சம்திங் சம்திங் என்னை திட்ட வைத்து விட்டது.

********************************

இமிக்ரேஷன் முடித்து வெளியே வருபவர்களின் முகத்தை பார்க்கும் வாய்ப்பு இருக்குமாறு பார்த்து அமர்ந்தேன். சனியன் பிடிச்ச ஊருக்கு வந்துட்டமே என சில முகங்கள்;அழகான முகம் மற்றும் அனிமேட்டடு உரையாடல்களுடன் ஏர்ஹோஸ்டஸ்; பிரிந்த குழந்தைகளைப் பார்த்ததும் தாவி வந்து எடுத்த அப்பா; அப்பாவிடம் சொல்ல வேண்டும் என லிஸ்ட் வைத்து ஒவ்வொன்றாக சொல்லிய குழந்தைகள்; என்னையும் அணைக்க மாட்டாரா என்ற ஏக்கத்துடன் மனைவி; பல நாட்கள் அம்மாவை பிரிந்து இருந்ததால் மறந்து போன குழந்தை மற்றும் அழும் நிலையிருந்த அம்மா;மருமகளின் உப்பியிருந்த வயிற்றை தடவிப் பார்த்தபடி மகனை மறந்த ஊரிலிருந்த வந்த அம்மா; எஜமானனை பார்த்ததும் துள்ளிக் குதித்து தாவி வந்து தன் வாஞ்சையை வெளிப்படுத்திய நாய். எனக்கு அது நாய்தானா என்ற உணர்வு நீண்ட நாள் கழித்து இன்று வரை இருக்கிறது.
*************************************

Shoot 'em Up படத்தை பார்த்து வயிறு வலிக்க சிரித்தேன். உக்கார்ந்து ரூம் போட்டு யோசிப்பாங்களா என கேள்வி கேட்க வைத்து விட்டார்கள். தமிழ் இயக்குநர்கள் பார்வையில் இது பட்டால் சாம் ஆண்டர்சன் அல்லது ஜே.கே.ரித்தீஷ்க்கு பொருத்தமான கதை. பழைய ரஜினி, மிதுன் சக்கரவர்த்தி படங்கள் தான் இதுக்கு இன்ஸ்பிரேஷன் டைரக்டர் ஒத்துக் கொள்வார்ன்னு நினைக்கிறேன். காட்சிக்கு காட்சி பொறி கலங்க வைத்த காமெடி....

Vantage Point
பார்த்தேன். கதையை முதலிலேயே கேட்டதால் படம் கொஞ்சம் சுவாரசியம் குறைவாகவே ஆரம்பித்தது. படுத்துக் கொண்டு ஆரம்பித்து முடியும் போது நேராக உக்கார்ந்திருந்தேன்.

**************************************

பேத்தனாமாக பேசும் கும்பல் ஒரு புறம், கலவர பூமியிலும் விருது வாங்கி கிளுகிளுப்பைக் கூட்டும் கும்பல் ஒரு புறம்; தமிழகத்தில் தொடரும் கேலிக்கூத்துக்களைப் பார்த்து கொலை வெறிதான் வருதுப்பா... என்ன இழவு எடுத்த இறையாண்மையோ ஒன்னும் புரியல...

**************************************

பின் குறிப்பு: தலைப்பில் ஒரு கமா குறைவதாக இல்லைனா அதிகமா இருக்குன்னு நினைக்கறீங்களா???

6 பேரு குத்தாட்டம் போட்டிருக்காங்க!:

said...

//தமிழகத்தில் தொடரும் கேலிக்கூத்துக்களைப் பார்த்து கொலை வெறிதான் வருதுப்பா//

நீங்க ஸ்ரீலங்கன் ஏர்லைன்சுக்கு துட்டு குட்து தமிழரைக் கொல்ல ஆயுதம் வாங்க வழி செய்வதும் கேலிக்கூத்தில்லையா ப்ரதர்? கொன்னுடட்டுமா? :)

said...

ங்கோ**தா, தா**ழி..

In America, stand in the middle of the road and shout, "I love Bin Laden", then you will get the reply for your question என்ன இழவு எடுத்த இறையாண்மையோ

said...

sema collection

said...

தமிழீழ விடுதலைப் போராட்டமும் இந்தியாவும் தமிழ் நாடும்

தேவன். (கனடா)

இந்த உலகானது பல சுவர்களால் எழுப்பப்பட்டுள்ளது. அவையாவன மேற்காகவும், கிழக்காகவும், மொழிவாரியாகவும், வகுப்பு வாரியாகவும், அடிப்படையவாதங்களாகவும், நிற, இன, வாத வேறுபாடுகளாகவும் பிரிக்கப்பட்டுள்ளன. இப்படியாக பல வேறுபாடுகளை கொண்ட உலகமும், பலம் வாய்ந்த பெரும் தேசிய இனங்களும், அடிப்படைவாதங்கள் பேசும் குறுந்தேசிய, இனங்களும் ஒன்றை ஒன்று அடக்குவதாகவும் அல்லது விழுங்குவதாகவும் அமைந்துள்ளன. இத்தகைய சூழலில் நின்றுதான் எதிர்காலத்துக்கான அமைதி சுபீட்சம், மானிட இருப்பு என்பவற்றுக்காக குரல் கொடுக்க வேண்டியுள்ளது. இலங்கைத் தீவின் இனங்களுக்கிடையேயான இனமுரண்பாடுகளையும் வரலாறுகளையும் ஆராயும் போது, 1977களின் பின்புதான் மிகவும் உச்சநிலையும் கொதிநிலையையும் அடைந்தது எனும் முடிவுக்கு வரக்கூடியதாக உள்ளது. 1977 தமிழருக்கு எதிரான இனக்கலவரம், வடக்கில் பாதுகாப்பு படைகளின் அட்டகாசம் தொடர்ச்சியாக 1981ல் தமிழ் மக்களின் ஆன்மாவாக கருதப்பட்ட யாழ். நூலகம் எரிப்பைத் தொடர்ந்து, 1983ல் ஜே.ஆர்.ஜெயவர்த்தனாவின் அரசினால் தமிழ் மக்களுக்கு எதிராக கட்டவிழ்த்து விடப்பட்ட இனக் கலவரம். இதனைத் தொடர்ந்து தமிழ் தரப்பில் உருவாகிய எழுச்சிகள், பல்வேறு இயக்கங்கள் என இலங்கை வரலாற்றில் ஒரு திருப்பு முனையான காலகட்டம் என்று கூறலாம்.

இதனைத் தொடர்ந்து இந்தியாவின் கரிசனை அக்கறை இலங்கைத் தீவின் மீது என்றும் இல்லாதவாறு மிகவும் தீவிரம் பெற்றது. அன்றைய காலகட்டத்தில் இலங்கையில் ஆட்சியில் இருந்த ஜே.ஆர் அரசு மேற்கொண்ட திறந்த பொருளாதாரச் கொள்கையும் மேற்குலக சார்பான அரசியல் கொள்கை முன்னெடுப்புகளும் இந்தியாவுக்கு மிகவும் எரிச்சல் ஊட்டுவனவாகவும் உவர்ப்பாகவும் இருந்தது என்றே கூறலாம். இதன் காரணமாக அக்காலட்டத்தில் இந்தியாவை ஆட்சி செய்த இந்திரா காந்தி தலைமையிலான இந்திரா காங்கிரஸ் அரசு, தெற்காசிய பிராந்தியத்திய நாடான இலங்கையில் தனது ஆதிக்கத்தையும், ஆழுமையையும் ஸ்திரமாக பேணவேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டது. அமெரிக்காவின் தலையீட்டிறகு ஓர் முற்றுப்புள்ளி வைக்கும் நோக்கில், இந்திய மத்திய நடுவன் அரசு பல்வேறு தமிழ் அமைப்புகளுக்கு ஆயுதப் பயிற்சிகள் மற்றும் பலவித உதவிகளையும் வழங்குவதன் மூலம் ஜே.ஆர் அரசை ஆட்டங்காண வைத்து, இந்தியாவிடம் சரணாகதி அடைய வைப்பதற்காக இலங்கைத் தீவின் இனமுரண்பாட்டைக் கையாண்டது. இந்தியாவின் இந்நிலைப்பாடானது தவிர்க்க முடியாததும்கூட. ஏனெனில் இலங்கை சுதந்திரம் அடைந்த பின் இலங்கைத் தீவில் ஆட்சி செய்த பெரும்பான்மை அரசுகள் ஒர் உறுதிப்பாடற்ற அரசியல் தலைமைகளை கொண்டுள்ளதால், சிறுபான்மை சமூகங்களின் பிரச்சினைகளை சரிவர கையாளாதாலும், அனைத்து விடையங்களிலும் இந்தியாவை சார்ந்தே இருக்க வேண்டிய நிலைக்கு இலங்கை தள்ளப்பட்டுள்ளது. இதுவே தெற்காசிய பிராந்தியத்தின் ப+கோள அரசியல் நலன்களை கொண்ட அரசியல் யதார்த்தமாக உள்ளது. இந்த அடிப்படையில்தான் தமிழர் பிரச்சினையும் பார்க்கப்படல் வேண்டும்.

இவற்றினுள் ஒன்றை ஒன்று பிரித்து பார்க்க முடியாது. அதாவது பாலும் நீரும் போல இந்தத் தளத்தில் நின்றுதான் இலங்கைத் தீவில் அமைதியை ஏற்படுத்த முடியும். 1984 ஆண்டில் எதிர்பாராத இந்திராகாந்தியின் படுகொலை என்னும் கொடிய விபத்தின் காரணமாக அரசியலுக்கு அழைத்து வரப்படுகின்றார் ராஜீவ் காந்தி. ஏனெனில் அரசியல் என்பது அவரது விருப்பமான தேர்வாக இருக்கவில்லை. அதனால் அவரது வாழ்வின் முடிவும் கொடிய விபத்தாகவே அமைந்துவிடுகின்றது. இந்த வரிகளை எழுதும்போது எனது உடலும் அதிர்ச்சியில் உறைந்து போகிறது எனது உணர்வுகளே இப்படி இருக்கும் போது பிரிட்டிஸ் காலனித்தவத்தை எதிர்த்து போரிட்ட இந்திய காங்கிரசும், அந்த படு கொலையால் பாதிக்கப்பட்ட 110 கோடி மக்களின் உணர்வுகளையும் என்னால் விபரிக்க முடியாமல் உள்ளது. புலிப் பாசிச கும்பலின் ஊடகங்கள் இன்றுவரை இந்திய எதிர்ப்புவாதத்தை கைவிடாத நிலமையில், புலிகளின் பேச்சாளரான ப. நடேசனின் கோரிக்கைகளான கடந்த காலத்தை மறக்கும் படியும், தங்கள் மீதான தடையை இந்திய அரசு நீக்கும்படியும் கூறி இருக்கிறார். புலிகளின் தலைவரால் திட்டமிட்டு நடத்தப்பட்ட இந்த கொலையை மறப்பதற்க்கு இது என்ன மாமியார் மருமகள் சண்டையா? இந்த விடையத்தை சர்வதேச இன்டர்போலும், இந்திய உயர் நீதிமன்றமும் ஏற்கனவே சட்ட நடவடிக்கைகள் மூலம் தீர்மானித்துவிட்டன. இந்த நிலையில் பிரபாகரன் சார்பாக ப. நடேசன் சோனியாகாந்தியிடம் கோரிக்கைவிடுவது மிகவும் அபத்தமானது.

எது எப்படி இருப்பினும் ராஜீவ் காந்தியின் விருப்பமற்ற அரசியல் பிரவேசம் அந்தக் காலகட்டத்தில் இந்திய தேசத்திற்கு ஒரு நம்பிக்கையை கொடுத்தது. இளைய தலைமுறைக்கு ஒரு உத்வேகத்தை கொடுத்தது. இன்று கணனித்துறையில் இந்தியா ஓர் புரட்சிகரமான வளர்ச்சியை எட்டுவதற்கு அடித்தளம் இட்டவர், ராஜீவ் காந்தியே. இவரது வசீகர தோற்றம் துணிவு, போன்ற ஆழுமைகளை அன்றைய நாளேடுகள் பதிவு செய்தன, பாராட்டியும் இருந்தன. ஆனால் இலங்கைப் பிரச்சினையில் இரு தரப்பாலும் (இலங்கை அரசு –புலிகள்) அவருக்கு ஏற்பட்ட அவமானம், வடுக்கள், விபத்துக்கள், கோரமான மரணம் வாழ்வின் முடிவு இவைகள் என்றும் இரத்தக்கறை படிந்த வரலாறுகளாகவே பதிவேடுகளில் பதிவு செய்யப்பட்டிருக்கும். மேலும் களங்கமற்ற முகங்கொண்ட ராஜீவ் காந்தியின் கொலையென்பது மறக்கப்படவோ மன்னிக்கப்படவோ முடியாத குற்றமாகவும், அவரைக் கொலைசெய்தவர்கள் தண்டிக்கப்படவேண்டும் என்னும் குரல்கள் பலமாக எப்போதும் உலக அரங்கில் ஒலித்துக்கொண்டே இருக்கும். புலிகளின் கடந்த கால நூற்றாண்டிற்கும் மேலான பாசிச பொறிமுறைகளை உன்னிப்பாக அவதானிப்பவர்களுக்கு ஓர் உண்மை புலப்படும். அது என்னவெனில், புலிகளது பாசிச கட்டுமானங்களையும, செயற்திட்டங்களையும் முன்னெடுப்பதற்கு நேர்மையான, பலவீனங்களற்ற திறன் உள்ளவர்களை, புலிகள் ஒருபோதும் அணுகுவதில்லை. மாறாக, தங்களை கேள்வி கேட்பவர்களையும் தமக்கு அரசியல் சவாலாக இருக்ககூடியவர்களையும், திறமையானவர்களையும் துரோகம் பட்டம் சூட்டி, சுட்டு அழித்தே வந்துள்ளர்கள்.

ஒரு பழமொழி கூறுகின்றது ‘பணம் அண்ட, பாதாளம் வரையும் பாயும்’என்று. பணம், குற்றவியல், அதிகாரம், துதிபாடுதல், வழிபடுதல், இவை அனைத்துக்கும் நிறைய தொடர்புகள் இருக்கின்றன. உறுதியற்ற பலவீனமானவர்களையே புலிகள் தங்கள் தேவைகளிற்காக பணத்தால் விலைக்கு வாங்குகிறார்கள். தற்போது தமிழ் நாட்டு அரசியலிலும் பலர் புலிக்கு விலை போகின்றனர். ஆனால் இவையெல்லாம் ஒரு தற்காலிகமான சினிமாக் காட்சிதான். ஏனெனில் இறுதியில் மனிதத்துடன் கூடிய ‘மானுடம் வெல்லும்’என்று வரலாறு கூறுகிறது. இன்று தமிழ் நாட்டில் புலிகளுக்கு ஆதரவாக சலசலப்பொன்று உருவாகியிருக்கின்றது. சாதி அடிப்படையிலான கட்சிகளாலும், இன்றைய திராவிட பிற்போக்குத்தனமான கட்சிகளாலும் மற்றும் சிறுபான்மையினக் கட்சிகளாலும், இந்திய தேசத்தின் வேற்றுமையில் ஒற்றுமை காணும் தன்மைக்கும், இறையான்மைக்கும் அச்சுறுத்தல் ஏற்பட்டு இருப்பதை அவதானிக்க முடிகிறது. இது போன்ற புலிகளுக்கு ஆதரவான அழுத்தங்களையும் அச்சுறுத்தல்களையும் நடுவன் அரசு மிகச் சிறப்பாகவே எதிர்கொள்ளும் என்ற நம்பிக்கையில், இலங்கைத் தமிழ் இனமும் பிற பல்லின மக்களும் எதிர்பார்புடன் இந்திய தேசத்தை உன்னிப்பாக அவதானித்துக் கொண்டிருக்கிறார்கள்.

‘சோழியன் குடும்பி சும்மா ஆடாது’என்ற இந்த பழமொழிக்கும் தமிழ் நாட்டு சினிமாக் காரர்களும் நிறையவே தொடர்பு உண்டு என்பார்கள் ஏனெனில் கோடம்பாக்கத்தின் சினிமாத் தொழிற்சாலை வருடத்துக்கு 200 படங்களுக்கு மேல் எடுக்கிறார்கள். இவற்றுள் 95 வீதமான படங்கள் மசாலத்தனமானவை. உலகின் செவ்விய இனமான மூத்த குடி தமிழரின் ஒரு பிரிவினர், அதாவது புலம்பெயர் தமிழர்கள் தமிழ் நாட்டில் ஓடாத பல தரமற்ற படங்களையும் ஓட வைத்து, இசைத் தட்டுக்களையும் விற்பனை செய்து சினிமாக்காரர்களை செழிப்புடன் வாழவைக்கிறார்கள். அத்துடன் நின்றுவிடாது, சினிமா நடிகைகளையும் நடிகர்களையும் வசந்த –கோடை காலங்களில் புலம் பெயர் தேசங்களுக்கு வரவழைத்து, அவர்களின் வாழ்விற்கு செழிப்பூட்டிவருகிறார்கள். இவ்வாறு நிலைமைகள் இருக்கும் போது, தமிழ் நாட்டு சினிமாக் காரர்கள் மட்டும் தங்கள் நன்றிக் கடனை வெளிப்படுத்த வேண்டாமா? தமிழ்நாட்டு சினிமாக் காரர்களிடமும் திராவிட கட்சிகளிடமும் இலங்கைத் தமிழனான நான் ஒரு வேண்டுகோள் விடுக்கிறேன். முழங்காலுக்கும் தலைக்கும் முடிச்சு போடுவது போல நினைத்து, இலங்கை தமிழர் பிரச்சினையை அணுகாதீர்கள். இந்து, தினமலர், துக்ளக், குமுதம், கல்கி போன்ற பத்திரிகைகள் புலிகளை எதிர்த்து எழுதி வருவதால், அவைகளை பிராமணியப் பத்திரிகைகள் என வர்ணித்து, அதனால்தான் இலங்கைத்தமிழர்களை எதிர்க்கிறார்கள் என்கிறீர்கள். தயவுசெய்து உங்குள்ள பிராமணிய ஆதிக்கத்தையும் இலங்கை தமிழர் பிரச்சினையும் தொடர்புபடுத்தாதீர்கள். (மனுசாத்திரத்தையும், ஆறுமுகநாவலரின் சைவமும் தமிழும், யாழ்ப்பாண வேளாhளர்களின் ஆதிக்க போக்குகளையும் இன்னுமொரு சந்தர்ப்பதில் பார்க்கலாம்) அத்துடன் இருபது ஆயிரம் மாவீரர்களும், புலிகளுக்கும் மட்டும் குரல் கொடுக்காது, புலிகளால் உருவாக்கிய முப்பது ஆயிரத்துக்கும் மேற்பட்ட விதவைகளுக்கும், இரண்டு இலட்சத்துக்கு மேற்ப்பட்ட அநாதை சிறுவர்களுக்காகவும், கந்தன் கருணை படுகொலைகக்காகவும், வடபகுதியிலிருந்து வெளியேற்றப்பட்ட முஸ்லீம் மக்களுக்காவும் காத்தான்குடி பள்ளிவாசல் கொலைக்காகவும், சிங்கள சகோதரர்களின் கொலைக்காகவும், சகோதரப்படுகொலைக்காகவும், கல்விமான்கள் கொலைக்காகவும் குரல் கொடுங்கள். புலிகள் மாத்திரமல்ல, இலங்கை மக்கள் அனைவருமே உங்கள் தொப்புள் கொடி உறவுதான்.
http://www.thenee.com/

said...

If mumbai police had had the same level of alertness, the unfortunate incident might not have happenned. I am proud of LAPD.

said...

ஐயோ.. நானும் Shoot'em up கொடுமையைப் பார்த்தேன்!!
உங்கள் கோப‌ம் அத‌ன் விளைவான‌ வேக‌ம் இர‌ண்டின் ஆழ‌த்தையும் இய‌ல்பாய் உண‌ர‌முடிகிற‌து.... தொட‌ர்ந்து ர‌வுத்திர‌ம் ப‌ழ‌குவோம் உத‌ய்!!