Saturday, November 01, 2008

LAPD நாய்கள், Shoot 'em Up, கொலை வெறி

என்னுடன் பணிபுரிய வந்தவரை அழைத்து வர லாஸ் ஏஞ்சலீஸ் ஏர்போர்ட் உள்ளே நுழைந்த போது என் காரை தனியாக ஒதுக்கி மெட்டல் டிடெக்டர் வைத்து செக் செய்தார்கள். எனக்கு முன்பிருந்த காரிலும் இந்தியர் அல்லது தெற்காசிய நாட்டைச் சேர்ந்த ஏதோ ஒரு குடும்பம்தான் இருந்தது. அவர்களுக்கும் இதே சோதனை. என்னை நடு ரோட்டில் வைத்து முழுவதும் உறுவி தடவிப் பார்த்த மாதிரி இருந்தது. ங்கோ**தா, தா**ழி என சராமாரியாக திட்டிக் கொண்டே இருந்தேன் அவன் என் கார் முழுவதும் சோதனை போடும் வரை. அந்த பாடுகளும் மொழி புரியாமல் நான் எதோ பாடிக் கொண்டிருந்தேன் என நினைத்திருக்கலாம். உலகத்தில் இருக்கும் அத்தனை மலங்களையும் கொண்டு வந்து அங்கு கொட்ட வேண்டும் என்ற ஆத்திரம் இருந்தது. மெட்டல் டிடெக்டர் சோதனையை நூறு தடவை ஏர்போர்ட்டில் செய்திருந்தாலும் இன்று என்னை இது என்னவோ பண்ணியது.

கடந்த முறை கொழும்பு வழியாக அமெரிக்கா வந்த போது ஒரு சம்பவம் நடந்தது. அது எனக்கு கொடுமையாக தெரியவில்லை. பெருமையாக இருந்தது. கோவையிலிருந்து கொழும்பு வந்ததும் ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் ஏற்பாடு செய்திருந்த வண்டியில் கட்டுநாயக விமான நிலையத்திலிருந்து பாம் ட்ரீ ரெஸ்ட்டாரெண்ட் வந்து சாப்பிட்டு விட்டு ஆற அமர சிங்கள சிப்பாய்களைப் பார்த்து விட்டு (சாதரண மனிதர்களே கண்ணில்படவில்லை) உள்ளே நுழையும் போது இமிக்ரேஷனில் கேள்வி கேட்டு குடைந்தார்கள். மிகப் பொறுமையாக (பெருமையாகவும்) இருந்து பதில் சொல்லி, கேள்விக்கு பதில் கேள்வி என ஹீரோ மாதிரி உணர்ந்தேன். தமிழ்நாட்டிலிருந்து நான் இங்க வந்ததுக்கு காரணம் ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ். அவங்களை கேள்வி கேப்பீங்களா? என நக்கலடித்து விட்டு நகர்ந்தேன்.

அதற்கும் இதற்கும் பெரிய வித்தியாசம் இல்லையெனிலும் ஏதோ சம்திங் சம்திங் என்னை திட்ட வைத்து விட்டது.

********************************

இமிக்ரேஷன் முடித்து வெளியே வருபவர்களின் முகத்தை பார்க்கும் வாய்ப்பு இருக்குமாறு பார்த்து அமர்ந்தேன். சனியன் பிடிச்ச ஊருக்கு வந்துட்டமே என சில முகங்கள்;அழகான முகம் மற்றும் அனிமேட்டடு உரையாடல்களுடன் ஏர்ஹோஸ்டஸ்; பிரிந்த குழந்தைகளைப் பார்த்ததும் தாவி வந்து எடுத்த அப்பா; அப்பாவிடம் சொல்ல வேண்டும் என லிஸ்ட் வைத்து ஒவ்வொன்றாக சொல்லிய குழந்தைகள்; என்னையும் அணைக்க மாட்டாரா என்ற ஏக்கத்துடன் மனைவி; பல நாட்கள் அம்மாவை பிரிந்து இருந்ததால் மறந்து போன குழந்தை மற்றும் அழும் நிலையிருந்த அம்மா;மருமகளின் உப்பியிருந்த வயிற்றை தடவிப் பார்த்தபடி மகனை மறந்த ஊரிலிருந்த வந்த அம்மா; எஜமானனை பார்த்ததும் துள்ளிக் குதித்து தாவி வந்து தன் வாஞ்சையை வெளிப்படுத்திய நாய். எனக்கு அது நாய்தானா என்ற உணர்வு நீண்ட நாள் கழித்து இன்று வரை இருக்கிறது.
*************************************

Shoot 'em Up படத்தை பார்த்து வயிறு வலிக்க சிரித்தேன். உக்கார்ந்து ரூம் போட்டு யோசிப்பாங்களா என கேள்வி கேட்க வைத்து விட்டார்கள். தமிழ் இயக்குநர்கள் பார்வையில் இது பட்டால் சாம் ஆண்டர்சன் அல்லது ஜே.கே.ரித்தீஷ்க்கு பொருத்தமான கதை. பழைய ரஜினி, மிதுன் சக்கரவர்த்தி படங்கள் தான் இதுக்கு இன்ஸ்பிரேஷன் டைரக்டர் ஒத்துக் கொள்வார்ன்னு நினைக்கிறேன். காட்சிக்கு காட்சி பொறி கலங்க வைத்த காமெடி....

Vantage Point
பார்த்தேன். கதையை முதலிலேயே கேட்டதால் படம் கொஞ்சம் சுவாரசியம் குறைவாகவே ஆரம்பித்தது. படுத்துக் கொண்டு ஆரம்பித்து முடியும் போது நேராக உக்கார்ந்திருந்தேன்.

**************************************

பேத்தனாமாக பேசும் கும்பல் ஒரு புறம், கலவர பூமியிலும் விருது வாங்கி கிளுகிளுப்பைக் கூட்டும் கும்பல் ஒரு புறம்; தமிழகத்தில் தொடரும் கேலிக்கூத்துக்களைப் பார்த்து கொலை வெறிதான் வருதுப்பா... என்ன இழவு எடுத்த இறையாண்மையோ ஒன்னும் புரியல...

**************************************

பின் குறிப்பு: தலைப்பில் ஒரு கமா குறைவதாக இல்லைனா அதிகமா இருக்குன்னு நினைக்கறீங்களா???