Sunday, July 13, 2008

அன்பே என் அன்பே - தாம் தூம்

அன்பே என் அன்பே உன் விழி பார்க்க
இத்தனை நாளாய் தவித்தேன்
கனவே கனவே கண்ணுறங்காமல்
உலகம் முழுதாய் மறந்தேன்
கண்ணில் சுடும் வெயில் காலம்
உன் நெஞ்சில் குளிர் பனிக்காலம்
அன்பில் அடை மழைக்காலம்
இனி அருகினில் வசப்படும் சுகம் சுகம்

நீ நீ வர நதியலையாய் ஆனாய்
நான் நான் அதில் விழும் நிலை ஆனான்
உந்தன் மடியினில் மிதந்திடுவேனோ?
உந்தன் கரை தொட பிழைத்திடுவேனோ?
அலையினிலே பிறக்கும் நதி கடலினிலே கலக்கும்
மனதிலினே இருப்பதெல்லாம் மவுனத்திலே கலக்கும்

[அன்பே என் அன்பே]

நீ நீ புது கட்டளைகள் விதிக்க
நான் நான் உடன் கட்டுப்பட்டு நடக்க
இந்த உலகத்தினை ஜெயிப்பேனே?
அன்பு தேவதைக்கு பரிசளிப்பேனே?
எதைக் கொடுத்தோம் எதை எடுத்தோம்
தெரியவில்லை கணக்கு
எங்கு தொலைந்தோம் எங்கு கிடைத்தோம்
புரியவில்லை நமக்கு

[அன்பே என் அன்பே]

<p><a href="undefined?e">undefined</a></p>

0 பேரு குத்தாட்டம் போட்டிருக்காங்க!: