Wednesday, April 02, 2008

கம்மாக்கரை to ரெஸ்ட் ரூம்...

நான் பொறந்து வளர்ந்ததெல்லாம் கிராமத்துலதான். அந்தக் காலத்துல காலைக் கடன் (அது என்ன கடனோ தெரியலை, வாங்கின கடனை யாருக்கு திருப்பிக் குடுக்கிறேன்னும் தெரியல) எல்லாம் சுடுகாட்டுப் பக்கந்தான். இந்த காலத்துல எல்லார் வீட்டுலயும் டாய்லெட் கட்டிட்டாங்க. ஆனாலும், இந்த பஞ்சாயத்து சுகாதாரத்தை பேணிக் காக்கிறதுன்னு எழுதிருக்கிற போர்டுக்கு கீழேயே கடனை கொட்டி வைக்கிற பசங்க இன்னமும் இருக்கிறாங்க.





காலங்கார்த்தால சூரியன் சுள்ளுன்னு அடிக்கும் முன்னே சுடுகாட்டுப் பக்கம் போயிட்டு பனங்காய் பொறுக்கிட்டு வீடு வந்து சேர்ந்தால் பள்ளிக்கூடம் கிளம்ப சரியாக இருக்கும். லீவு நாட்களில் விளையாட போயிட்டு கடனை கழிச்சதே மறந்து போயி காடு காடாய் சுத்தி எலந்தை, கொய்யா என மரத்தில் காய்க்கும் அத்தனையும் பறிச்சு சாப்பிட்டு சாயங்காலம் காய்ந்து போய் வீடு வந்த சேர்ந்த கதையெல்லாம் இருக்கும். அரளிக்காயை மட்டும் எப்படி விடுவது என அதையும் அரைச்சு ஓணானுக்கு குடுத்த கதையும் இருக்கும்.


கக்கூஸ்ன்னுதான் இது எங்களுக்கு அறிமுகமானது. வீட்டில் கக்கூஸ் இருந்தாலும் காலற நடந்து ஊரிலிருக்கிற மாமன் மச்சான் எல்லாம் பார்த்து நலம் விசாரிச்சுட்ட வர சுகம் இல்லைன்னு அவசரத்துக்கு மட்டும் போய் வர ஆரம்பிச்சாங்க. காலேஜ் வந்ததுக்கு அப்புறம் லெட்ரின்ல பக்கத்துல பக்கத்துல சீட் போட்டு உக்கார்ந்துட்டு தியரி ஆப் மெக்கானிக்ஸ் கதை கேட்டவங்களும் இருந்தாங்க. இந்து இன்னைக்கு என்ன சுடிதார் போடுவான்னு பந்தயம் கட்டிட்டு வந்தவங்களும் இருந்தாங்க. இதனால கடுப்பாகி பாத்ரூமிலிருந்து பக்கெட் நிறைய தண்ணி அள்ளி அவனுக தலைக்கு மேல கொட்டுனவனுகளும் இருந்தாங்க.




ரயில் தண்டவாளத்தில எல்லாம் எவன்டா இருந்து வைக்கிறான் அறிவே இல்லையா என திட்டிய ஆட்கள் எல்லாம் உண்டு. ஒரு நாள் ரயில் எசகுபிசகாக ஆடி வைக்க அதுக்கப்புறம் "போதி மரத்தடியில் ஞானம் பெற்ற" அப்படிங்கற மாதிரி "ரயில் லேவட்டரி" புகழ் அப்படின்னு பேர் சொல்லற அளவுக்கு ஞானம் தெளிஞ்ச ஆட்களும் இருக்காங்க.







சலவைக்கு குடுத்த தேய்ச்ச சட்டை பேண்ட் கசங்காம இருக்கணும்ன்னு எல்லாத்தையும் மடிச்சி வைச்சுட்டு, ஏசி போட்ட ரூம்ல, கால் மேல் போட்டு எப்படி இருந்த நாம இப்படி ஆகிட்டமேன்னு யோசிச்ச ஆட்களும் இருந்தாங்க.கோட் டெலிவரி சாயங்காலம் வைச்சிட்டு, ஒரு பெரிய டிஃபெக்ட்டை எப்படி சரி பண்ணலாம்ன்னு நாலாபுறம் அலைஞ்சிட்டு ஒன்னும் முடியாம போய் குத்த வைச்சி ரெண்டு கையிலையும் பின்னந்தலைக்கு முட்டுக் கொடுத்த உக்காந்தா எகனை மொகனையா ஐடியா வந்து பிரிஞ்சு பிரிஞ்சு விழும் ஆசாமிக கூட இருந்தாங்க.







பிளைட்ல கொஞ்சம் தண்ணி போறதுக்கு அந்த சவுண்டு வருதேன்னு தலைய உள்ள விட்டுப் பார்த்தவங்களும் இருக்காங்க. பாட்டு பாடுனாத்தான் போவுது, தம்மடிச்சாத்தான் போவுதுன்னு இந்தியாவுல இருந்தப்போ சொன்னாங்கன்னா, புக் இல்லைன்னா போக மாட்டேங்குதுன்னு கைல கிடைச்ச பேப்பர், லேப்டாப்பை பொறிக்கிட்டு போயிட்டு போறவங்களும் இருக்கறாங்க. 'ஆய்'ரம்தான் இருந்தாலும் கம்மாக்கரை மாதிரி வருமுங்கல்லா...அது அதுதான் இது இதுதான்...








குறிப்பு:


இது ரெஸ்ட்ரூமிலிருந்து லாப்டாப்பில் தட்டச்சி அனுப்பட்டது. This mail is sent from my handheld ன்னு படம் காட்டுவாங்கல்ல, இந்த குறிப்பு அந்த வகைய சேர்ந்தது இல்லை.

3 பேரு குத்தாட்டம் போட்டிருக்காங்க!:

said...

அடப்பாவி, இப்படி ஆயி'போயிருச்சா உங்க வாழ்க்கை. ஹ்ம்ம், சொல்லி என்னத்த ஆயி'ரப்போவுது..

said...

நீங்கள் நவீன இலக்கியவாதியா? நாற்றம் குடலை புடுங்குது.

said...

\\இது ரெஸ்ட்ரூமிலிருந்து லாப்டாப்பில் தட்டச்சி அனுப்பட்டது. This mail is sent from my handheld ன்னு படம் காட்டுவாங்கல்ல, இந்த குறிப்பு அந்த வகைய சேர்ந்தது இல்லை.\\

:-))