Sunday, December 31, 2006

புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!!!

உலகமெலாம் பருவ மழை ஒத்தபடி பெய்யட்டும்
உழவரெலாம் தானியத்தை உவப்புடனே பெருக்கட்டும்
பல தொழில்கள் புரிகின்ற பாட்டாளி உயரட்டும்
கல்லாமை கடன் வறுமை களங்கங்கள் மறையட்டும்
நலவாழ்வை அளிக்கும் மெய் ஞான ஒளி வீசட்டும்
நம் கடமை அறவாழ்வின் நாட்டத்தே சிறக்கட்டும்
வாழ்க வையகம்! வாழ்க வளமுடன்!

- வேதாத்ரி மகரிஷி.

Monday, December 25, 2006

ஓற்றை முடி

என்னை என்னால்
நம்ப முடியவில்லை
என் முகத்தை பார்க்கவே
எனக்கு பிடிக்கவில்லை.
தினமும் உபயோகித்த
ஞாபகம் இருக்கிறது.

கை மீறி போய் விட்டது
இன்னமும் கல்யாணம்
வேறு ஆகவில்லை
ஊர் என்ன பேசுமோ?
அப்படியே மறைத்து
விட்டால்...
இல்லை கல்யாணத்துக்கு
முன்னால் சொல்லி விட்டால்...

-என் தலையில்
ஒற்றை வெள்ளை முடி!

Sunday, December 24, 2006

போய் வா!!!

என் வெற்றி
என் அழுகை
என் கோபம்
என் இயலாமை
என் சோகங்கள்
என் காதல்கள்

உன்னுடன் ஒத்துப் போகாதபோது
உன் செல்லச் சிணுங்கல்கள்
உன்னுடனான சின்னச் சண்டைகள்
உன்னால் சுருங்கிய
உறவுகளும் நட்பு வட்டங்களும்
உன்னால் குறைந்துபோன
தொலைபேசி
உரையாடல்கள்...

முகம் பார்த்து சிரிக்க மறந்து
சாட்டிங்கில் சிரிப்பு முகம்
காட்ட வைத்த உன்
கஞ்சத்தனம்...

அத்தனையையும்
கூட இருந்த
அமைதியாய் பார்த்தாய்
நீ...

நான் இழுத்த இழுப்புக்கு வராமல்
உன் பின்னால் என்னை
அலைய வைத்தாய்
ஒவ்வொரு முறையும்
ஜெயித்தது நீதான்...

என்னோடு நீ இருந்த
ஒவ்வொரு நாட்களும்
மறக்க முடியாதடி...

போய் வா 2006.