Friday, September 01, 2006

வேட்டையாடு விளையாடு

வேட்டையாடு விளையாடு படம் வந்தாலும் வந்தது, அவங்கவங்க ஸ்டைல்ல விமர்சனம் பண்ணி தள்ளிட்டாங்க. நான் வேற தனியா சொல்லணுமா என்ன??? இது நாங்க வேட்டையாடு விளையாடு படத்துக்கு போய் வந்த பயணக் கட்டுரை.

தமிழ் படம் எதுவும் எங்க ஊர்ல ரிலீஸ் பண்ண மாட்டாங்க (அருள் மட்டும் ஆச்சு, பாய்ஸ், விருமாண்டி ரெண்டும் பக்கத்து ஊர்ல ஆச்சு) நாங்க சிகாகோக்கு வண்டி கட்டிட்டு போய்த்தான் படம் பார்ப்போம். தமிழ் மக்கள் யாருக்கு நியூஸ் கிடைச்சாலும் உடனே கூட்டம் போட்டு யாரு கார்ல யாரு, எத்தனை மணி ஷோ ந்னு கிளம்பி போய்ட்டு நிதானமா ஊர் சுத்திட்டு வருவோம். இப்போ கூட்டம் ரொம்ப கம்மியாயிடுச்சு. அதானால தெரிஞ்சவங்களுக்கெல்லாம் தகவல் சொல்லிடுங்கன்னு சொல்லிட்டு நாங்க நாலு பேரு கிளம்பறதா முடிவு பண்ணிட்டோம். ஒரு புது நண்பர் நான் வர்றப்ப மட்டும் உங்களோட வரட்டுமான்னு கேட்டதுக்கு சரின்னு சொல்லிட்டு நாங்க வண்டியை கிளப்பினோம்.

அந்த தியேட்டரில் அதுதான் நாங்க பார்க்கும் முதல் தமிழ் படம் அதனால வழி மாறிட கூடாதுன்னு உஷாரா ரோட்டையே பார்த்துட்டு இருந்ததுல பெருசா ஒன்னும் பேசிக்கவே இல்லை. தியேட்டரில நிறைய நம்மூர்காரங்களை பார்த்தவுடனே எனக்கு கல்யாண ஆசை வந்துடுச்சுன்னு கூட வந்த ஒரு பட்சி சிறகடிக்க ஆரம்பிச்சிருச்சு. அதை அமைதிப்படுத்தறதுக்கு கொஞ்சம் கஷ்டப்பட வேண்டியிருந்தது. தியேட்டரில் இருந்து சிவாவுக்கு ஃபோன் போட்டு படத்து வந்தால் சிகாகோவில் வலைப்பதிவர் மாநாடுன்னு ஒரு பதிவு போடலாம்னா அவர் வர முடியாத நிலைய சொன்னார்.

கூட்டத்துல அடிச்சு புடிச்சு உள்ள போயி உக்கார்ந்து படம் ஆரம்பிச்சது முதல் சின்ன சின்ன ஜோக்குகளை ரசிச்சுட்டும், கமெண்ட் அடிச்சிட்டும் விளையாட்ட போயிடுச்சு முதல் பாதி. பொண்ணு யாரு மாதிரி வேணும்ன்னு கேட்டா கமலினி மாதிரின்னு கமலினியைப் பார்த்த முதல் ஷாட்டிலேயே முடிவு பண்ணிட்டேன். இந்த மாதிரிதான் ஒவ்வொரு கதாநாயகியை பார்க்கும் போதும் நினைச்சுக்கறது, ம்ம்ம்ம்....... நீங்க இதை கண்டுக்காதீங்க. ஏன் தயாரிப்பாளருக்கு நஷ்டம் வந்திருக்கும் என அமெரிக்கா தொடர்பான சில தேவையில்லாத காட்சிகளைப் பற்றி இடைவேளையில் ஒரு குட்டி விவாதம் பண்ணிட்டு ரெண்டாவது பாதி பார்க்க உக்கர்ந்த்தா அது கொஞ்சம் சோதனையாத்தான் இருந்தது.

பரவாயில்லை, ஒரு நல்ல படம் பார்த்த திருப்தியில் வெளியில் வந்தால் அந்த புது நண்பர் வந்து சேர்ந்திருந்தார். எல்லோரடையும் அறிமுகப் படலம் முடிந்தவுடன் ரெண்டாவது பாதி உக்கார முடியலை என ஆரம்பித்து வைத்தார். காரில் அப்படியே ஒவ்வொரு கேரக்டராக, ஒவ்வொரு காட்சியாக எல்லோரும் அலசி காயப் போட்டோம். இந்த படத்தில் நிறைய ஆங்கில வசனங்கள், சப் டைட்டில் இருந்தாலும் மக்களை ரீச் ஆகாது. A சென்டர் மக்களுக்கு இந்த படம் ரொம்ப புடிக்கும், கட்டாயம் அங்க ஒடும் என சொல்லி முடித்தார். பேசறதுக்கு ஒன்னும் இல்லைன்னு அவங்கவங்க மூஞ்சிய மூஞ்சிய பார்த்துட்டு இருந்தப்போ என்னைய பார்த்து "உங்களுக்கு படம் புடிச்சிருக்கா?" ந்னு கேட்டார்.

நான் எனக்கு புடிச்சிருக்குன்னு சொல்லிட்டு கொஞ்ச நேரம் சும்மா உக்கார்ந்துட்டு இருந்தேன். அப்போ என் மூளையில் ஒரு ஃபிளாஷ்... அப்போ நான் A சென்டரா??? என மனசுக்குள் நினைத்தது வாயிலும் வந்துருச்சு. பசங்க எல்லோரும் சிரிச்ச சிரிப்புக்கு புது நண்பருக்கு அர்த்தம் புரியலை. பாஸ், சந்துல அவன் ஊரை சிட்டின்னு சொல்லிக்கிறான். பாவம், அவந்தான் என்ன பண்ணுவான், இப்படியாவாது அவன் ஊரை சிட்டின்னு மாத்திக்கட்டும்ன்னாங்க... மனசுக்குள்ள மட்டும் சொல்லிருந்தா போன பதிவோட டைட்டிலை மனசுக்குள்ள சொல்லியிருக்க வேண்டியதில்லை. அது மட்டுமில்லாம நம்ம சொந்த ஊரு ரொம்ப மாறிடுச்சுன்னா நாம அன்னியப்பட்டு போயிடுவம்ல... எப்பவும் நாம் நினைக்கறதா நடக்குது????

மூணு நாளைக்கு லீவு... அடுத்ததும் பயணக் கட்டுரைதான்... லேக் சுப்பிரீயரைப் பார்க்க போறேன். மத்த நாலையும் ஏற்கனவே பார்த்தச்சு, இது ஒன்னுதான் பாக்கி...

4 பேரு குத்தாட்டம் போட்டிருக்காங்க!:

said...

சிவா, படம் எப்படி இருந்தது, லாங் வீக் எண்ட் பிளான் பத்தின உங்க கேள்விகளுக்கான பதில்தான் இந்த பதிவு...

said...

உதய்,

//லேக் சுப்பிரீயரைப் பார்க்க போறேன் //

ஜாலியா போய் என் ஜாய் பண்ணிட்டு வாங்க..

நல்ல எழுதிருங்க உதய். நல்லாயிருக்கு..

வலைப் பதிவர்கள் சந்திப்புக்கு ஏற்பாடு பண்ணி India House Restaurantல் சந்திப்புன்னு ஒரு பதிவை தட்டி விடுங்க..

said...

Thalai I am new to ur blopg Its good. Nanum Milwaukee la than irukaen.

said...

படம் பாத்தாச்சா! ரொம்ப லேட்டு போலத் தெரியுது!!!!!!!!!