Monday, August 21, 2006

அருமை...


நிலவின் அருமை
அமாவாசையில்,
வெளிச்சத்தின் அருமை
இருட்டில்.











குடையின் அருமை
வெயிலில்,
மார்கழியின் அருமை
சித்திரையில்.











அம்மாவின் அருமை
வைத்த குழம்பு
வாய்க்கு போகாமல்
நேரே குப்பைக்குப் போய்
பர்கர் சாப்பிடும் போது...

6 பேரு குத்தாட்டம் போட்டிருக்காங்க!:

said...

//அம்மாவின் அருமை
வைத்த குழம்பு
வாய்க்கு போகாமல்
நேரே குப்பைக்குப் போய்
பர்கர் சாப்பிடும் போது...//

:)) அருமையாக உள்ளன கவிதைகள் உதய் :)

said...

//அம்மாவின் அருமை
வைத்த குழம்பு
வாய்க்கு போகாமல்
நேரே குப்பைக்குப் போய்
பர்கர் சாப்பிடும் போது...//

:))...
ஏனுங்க சமைக்கத் தெரியலனா நமக்கு போன் பண்ணுங்க ரெசிப்பி தரன்...

நான் தான் பயன்படுத்தறதில்லை... உங்களுக்காவது பயன்படட்டும் ;)

said...

வெளிநாட்டுல இருந்தா என்னவெல்லாம் தோணுது இல்ல...நடக்கட்டும் நடக்கட்டும்..

கவிதை கேளுங்கள் கருவில் பிறந்தது ராகம்
நடனம் பாருங்கள் இதுவும் ஒருவகை யாகம்

said...

//ஏனுங்க சமைக்கத் தெரியலனா நமக்கு போன் பண்ணுங்க ரெசிப்பி தரன்...//

அய்யோ, நான் நல்லா சமைப்பேங்க. நேத்து ஏதோ கொஞ்சம் சொதப்பிருச்சு, அவ்வளவுதான்.

said...

//'ஒளியின்/வெளிச்சத்தின்' அருமை இருட்டில் சரியாக இருக்குமோ? //

சின்னத்தம்பி, நீங்க சொன்னதுதான் கரெக்ட், நன்றி!!!

said...

கவிதை மட்டுமல்ல, தேர்ந்தெடுத்து பிரசுரித்துள்ள படங்களும் அருமை.