Thursday, August 03, 2006

நிஜமல்ல, கதை!

Part 2 Part 3

உதய் (விடுங்களேன், கதையிலயாவது ஹீரோவா இருக்க விடுங்களேன்...) அலுவலகத்தில் என்ட்ரி குடுத்ததும் பார்த்தது நீளமான கூந்தல். ஆஹா, முடியே இவ்வளவு சீரா அழகா இருக்கே, முகம் எப்படி இருக்கும் என கூந்தலின் பின்னாலே போனால், உதய், ட்ரிப் எப்படி இருந்தது, உன் சீட் அந்தப் பக்கம் இல்லை, இந்தப் பக்கம். 3 வாரமா ஆபீஸ் பக்கம் வராம நிறைய மெயில் வந்திருக்கும், அதை பார்த்து முடி, பிராஜெக்ட் ஸ்டேட்டஸ் நான் உனக்கு அதுக்கப்புறம் தரேன் என என் பிராஜெக்ட் மானேஜர் சாலினி உதயைத் தள்ளிக் கொண்டு போய் ஒரு சீட்டில் உட்கார வைத்தார். திரும்பி பார்த்தால் கூந்தல் அழகி எஸ்கேப். இந்த ஃப்ளோரில்தான் இருக்கப் போவது, பார்த்துட்டா போச்சு என மெயில் பார்க்க திரும்பி விட்டான்.

உதய், ரொம்ப பிஸியா? அவன் ஷேர் மார்க்கெட்டில் விட்ட சொத்தெல்லாம் எப்ப திரும்பி வரும் என கன்னத்தில் கை வைத்து பார்த்துக்கொண்டிருக்கும் போது சாலினி கேட்ட கேள்வி இது. கூடவே என் கூந்தல் அழகி! கொஞ்சம் பிஸி, ஆனா நீங்க கேட்டா வேலை இல்லைன்னுதான் சொல்லுவேன் சாலினி என்றான் உதய். ஆஹா, பொங்கு சனி ஆரம்பமாயிடுச்சு. குவாலிட்டி, C, C++, ஜாவா எது கேட்டாலும் ஓஓஓ... தெரியுமேன்னு சொல்லணும்ன்னு முடிவு பண்ணி சாலினி பார்க்காத போது ஹாய் என்றான் உதய். இது நிஷா, உன் பிராஜெக்ட்டுக்கு ஆள் வேணும்ன்னு கேட்டாயில்லையா? இவளுக்கு ஜாவா தெரியாது, நீ சொல்லிக் குடுத்து ரெடி பண்ணிக்க, சரியா? என சாலினி கிளம்பிவிட்டார்.

நிஷா, ஜாவா ரொம்ப ஈசி. நான் இருக்கேன், கவலைப்படாதே. அப்புறம், நீ எந்த ஊரு நிஷா? கலக்கிட்டடா உதய், நல்ல ஆரம்பம் பாதி வழி போய் சேர்ந்த மாதிரி என மனதுக்குள் நினைத்துக் கொண்டான். நான் திருவனந்தபுரம், ஆனா அப்பா, அம்மா தமிழ் என்றாள் நிஷா.. அப்படியா நிஷா, நாம ரொம்ப நெருங்கி வந்துட்டோம், நான் கூட உங்க ஊருக்கு போற வழிதான். அப்படியா, நீங்களும் கேரளாவா, கொல்லமா? என ஆச்சர்யத்துடன் கேட்டாள். இல்லை, போற வழியில... ஈரோடு. ஈரோடு திருவனந்தபுரம் போற வழியிலதான் இருக்கு என சிரித்துக் கொண்டே ஸ்டைலாக பார்த்தான். சரி, இப்பவே பாடத்தை ஆரம்பிக்கலாம். ஜாவா முதல்ல கத்துக்கறக்கு முன்னாடி நாம ஏன் இந்த வேலையை பண்றோம்ன்னு தெரிஞ்சுக்கணும்ன்னு ஆரம்பித்து வெட்டியாய் ஒரு ஒன்னே கால் மணி நேரம் பேசினான். 3 நிமிஷம் பேசறக்கு 3 நாள் தயார் பண்ணனும், ஆனா 3 மணி நேரம் பேசறதுக்கு ஒன்னுமே பண்ணத் தேவை இல்லை என்பதை மிகச் சரியாக நிருபித்து விட்டு நிஷா, வாயேன் போய் காஃபி சாப்பிட்டு வந்து பேசலாம் என்றான்.

உதய் விட்ட ஜொள்ளில் ஆடிப் போன நிஷா, என் ஃபிரெண்டு சுருதி வரேன்னு சொன்னாள், அவளையும் கூப்பிட்டுக்கட்டுமா என ஒரு பாதுகாப்பு வளையத்துக்குள் போனாள். ஒரே கல்லுல... ஏனோ காதலா காதலா டயலாக் மனதில் வந்து போனது உதய்க்கு. ஓ, கண்டிப்பா போலாமே? எங்க அந்த பொண்ணு? என அந்த இடத்தில் ஒரு குட்டி ஆறு ஓடத் தொடங்கி இருந்தது. சுருதியையும் சேர்த்துக் கொண்டு ஜொள்ளாற்றுப் படையை படைக்க ஆரம்பித்தான் காஃபி ஷாப்பில். வந்த வேகத்தில் கூகிளில் தடவி, ஒரு நாலைந்து நல்ல டுட்டோரியலிருந்து உருவி ஒரு டிரெயினிங் மெட்டீரியல் ரெடி பண்ணினான். நிஷா, இது உனக்காகவே நான் பண்ணது, படிச்சிட்டு நாளைக்கு ஏதாவது கேள்வி இருந்தா கேளு. நீ எப்போ வீட்டுக்கு போற? இன்னொரு முறை காஃபி என இழுத்துக் கொண்டு போய்விடுவான் என மனதுக்குள் நினைத்தாளோ எண்ணவோ, இதை பிரிண்ட் எடுத்துட்டு உடனே கிளம்பிருவேன், வெளிய கொஞ்சம் வேலை இருக்கு என்றாள். சொக்கா, நீ எப்பவும் என்கூடத்தான் இருக்கிறாய் என மனதுக்குள் துள்ளிக் குதித்து விட்டு ஓ, அப்படியா? வா எங்கூட பைக்கில போயிடலாமே? என்றான். இல்லை, இல்லை... சுருதி வரேன்னா, நான் அவள் கூட போய்க்கிறேன் என மான் மாதிரி துள்ளி ஓடினாள். சுருதி, உன்னை முதலில் ஊறுகாய்ன்னு நினைச்சேன், நீ மொத்த சாப்பாட்டுக்கும் உலை வைக்கிறயே, இரு உன் லீடரை கொஞ்சம் ஸ்குரூ ஏத்தி விடறேன் என மனதுக்குள் கருவிக் கொண்டான் உதய்.

~தொடரும்.

5 பேரு குத்தாட்டம் போட்டிருக்காங்க!:

said...

நிசம்மா கதை தானே? :)

said...

வாங்க ராசா, எம்மேல அவ்வளவு நம்பிக்கையோ??? கதைங்க, நம்புங்க.

said...

nijamave kathai thane da.. udhaya.. partha appadi theriya mattenguthe..

said...

கதையைக் கூட நிஜம் மாதிரி எழுதறீங்க ;-)

said...

பாபாண்ணே,

//கதையைக் கூட நிஜம் மாதிரி எழுதறீங்க ;-)

//
அவர் நிஜத்தைதான் கதை மாதிரி எழுதிட்டிருக்கிறார் :-))