Friday, March 03, 2006

கருவாச்சி காவியம்- அத்தியாயம் 4

இந்த ஒரு வருட காலத்தில் சின்ன ராசு சைட் அடிக்காத பெண்களே காலேஜில் இல்லை என்பதை விட சின்ன ராசு சைட் அடிக்கும் பெண்களெல்லாம் உடனே அடுத்தவர்களுடன் செட்டில் ஆகிறார்கள் என்ற செய்தி மற்றவர்களிடம் நன்றாக பரவியிருந்தது. டேய் சின்னராசு, எனக்கு அந்த பொண்ணு மேல ஒரு இதுடா, நீ எப்படியாவது அவகூட ஒரு வாரம் பேசிட்டு இரேன் என்று யாரும் வந்து சொல்லாததுதான் பாக்கி. நொந்து நூலாகி விட்டிருந்தான் சின்ன ராசு.

இரண்டாவது வருடத்தில் சில சிறிய மாற்றங்கள் சின்ன ராசுவின் கூட்டத்தில். மெக்கானிக்கல் டிபார்ட்மெண்டில் சில புதிய நண்பர்கள் சேர்ந்தாலும் ஒரு பெண்கூட மெக்கானிக்கல் டிபார்ட்மெண்டில் இலையென்பதால் டிபார்ட்மெண்ட் வாரியாக சின்ன ராசு எல்லா மக்களிடமும் தொடர்பு வைத்திருந்தான். அந்த நண்பர்களை பார்க்கும் சாக்கில் ஃபிகர்களை நோட்டம் விடலாம் என்பதுதான் உண்மையென்றாலும் முதல் வருடம் எல்லோருக்கும் பொதுவான பாடம் என்பதால் ஒன்றாக கும்மியடித்ததை மறக்க முடியவில்லை என கதை விட்டுக்கொண்டிருந்தான்.

அதே நேரம் சின்ன ராசு உருப்படியாவதற்கான சூழலும் அந்த புதிய நண்பர்கள் வட்டத்தில் உருவாகி இருந்தது. மற்றவர்கள் எல்லாம் கம்ப்யூட்டர் கிளாஸ் சென்று சி, சி++ படிக்க தனியாக உட்காரப் பிடிக்காமல் இவனும் சேர்ந்திருந்தான். டேய், இன்னைக்கு கிளாஸ் எப்படி இருந்தது எனக் கேட்டால் செங்கனி மேடம் இன்னைக்கு சூப்பர டிரெஸ் பண்ணிருந்தாங்க, எங்கதான் சுடிதார் எடுக்கராங்களோ என சொல்லிக் கொண்டிருந்தவன் மெல்ல மெல்ல படிக்க ஆரம்பித்திருந்தான். நண்பர்கள் எல்லாம் இவன் படிப்பதற்கான காரணம் சி சொல்லிக் கொடுக்கும் பெண்ணே ஒழிய சி மேல் உள்ள ஆர்வத்தில் இல்லை என சத்தியமாக நம்பினார்கள்.

டேய் கண்ணா, எலெக்ட்ரிக்கல் மேடம் உயிரை எடுக்காறாங்கடா, எதாவது பண்ணுடா என நைசாக சின்ன ராசு கண்ணனின் காதை கடித்தான். ஒரு ஃபிகர் கும்பல் கிளாஸை கடந்து போனதுதான் அதற்க்குக் காரணம் என தெரியாத அப்பாவி கண்ணன், "மேரியம்மா, மேரியம்மா, உன் கிளாஸ் போரு அம்மா போரு அம்மா" என கரகாட்டக்காரன் ராமராஜன் மாதிரி பெருங் குரலெடுத்து பாட ஆரம்பித்து விட்டான். அது வரைக்கும் சாந்தமாக இருந்த லெக்சரர் மேரிக்கு இவன் பாட்டைக் கேட்டதும் சாமி வந்து விட்டது. இப்பொ யாரு பாடுனாங்கண்ணு சொல்லும் வரை நான் உங்களை வெளியே விட மட்டேன் என சொல்லி அனைவரையும் எரிக்கும் பார்வையில் பார்க்க ஆரம்பித்தார்.

டேய் கண்ணா, நான் உன்கிட்ட என்ன சொன்னேன். நீ இப்படி பழிவாங்கிட்டயேடா என ஃபிகர் பார்க்க முடியாத வருத்ததில் சின்ன ராசு புலம்ப ஆரம்பித்தான். மேரி மேடமை சமாதனப் படுத்த சீட்டுக் குலுக்கியதில் சின்ன ராசு பெயர் மாட்டியது. கையில் காலில் விழுந்து வாழ்க்கையில் கேட்கக் கூடாத வார்த்தையெல்லாம் கேட்டு சமதானப்படுத்தியிருந்தான் சின்ன ராசு. ஆனால் என்னவோ இவன் சொன்னால் எல்லாம் நடக்கும் என்பது மாதிரி மக்களிடம் உதார் விட்டுக் கொள்ள ஆரம்பித்தது அன்று முதல்தான்.

லேட்ரல் என்ட்ரியாக ஒரு பெண் மெக்கானிக்கல் டிபார்ட்மெண்டில் சேர்ந்த செய்தி காட்டுத் தீ போல் பரவியிருந்தது காலேஜ் எங்கும்.

--தொடரும்.

1 பேரு குத்தாட்டம் போட்டிருக்காங்க!:

said...

thalaipu kandu padithen. Emaarnthen ;(