Wednesday, February 15, 2006

கேரட் ஜூஸ்

இனி மேல் டிரீட் போனால் எவ்வளவு பேர் பசங்க எவ்வளவு பேர் பொண்ணுங்கன்னு கேட்டுட்டுதான் போகணும்னு முடிவு பண்ணிட்டேன். அப்புறம் எல்லோரும் என்ன சாப்பிடராங்களோ அதை மட்டும் சாப்பிடணும்னு முடிவு பண்ணிட்டேன்.

ஒரு நண்பி அவருடைய முடிந்து போன பிறந்த நாள் கொண்டாட முடிவு பண்ணி என்னை அழைத்து இருந்தார். நாம் தான் ஃபிரீயா குடுத்தா ஃபினாயில் கூட குடிக்க பழகிட்டாதால எங்கே, எப்போ, யாரெல்லாம்ன்னு ஒரு கேள்வி கூட கேட்காமல் சரி என்று சொல்லி விட்டேன்.

மொத்தம் 6 பேர் அதில் நான் மட்டும் பையன். சரி போட்டிக்கு யாரும் இல்லைன்னு நான் பாட்டுக்கு நான் உண்டு என் கடலை சாகுபடி உண்டுன்னு சிவனேன்னு வேலையை பார்த்துட்டு இடுந்தேன். எல்லாம் நல்லா போயிட்டு இருந்தது. நான் என் வேலையில் தீவிரமாக இருந்ததால் என்ன வந்தாலும் சாப்பிட்டு விட்டு சமர்த்தா இருந்தேன்.

எல்லோரும் ஐஸ் க்ரீம் சொல்ல எனக்கு எதுவும் வேண்டாம் என்றேன். எங்களுக்கு சாப்பாடு பரிமாறியவர் உதட்டில் ஒரு புன்னகையுடன் கேரட் ஜூஸ் நல்லா இருக்கும்ன்னார். வாழ்க்கையில் எப்பவுமே என் கூடவே இருக்கும் சனி பகவான் இன்னைக்கு லீவ் போல என நினைத்து கொஞ்சம் ரிலாக்ஸா இருந்து விட்டேன். சரி கொண்டு வாங்கண்ணு சொல்லி விட்டு விட்ட இடத்தில் இருந்து தொடர்ந்து கொண்டு இருந்தேன்.

மிஸ்டர் சர்வர் சுந்தரம் கேரட் ஜூஸுடன் 6 ஸ்ட்ரா கொண்டு வந்து கொடுத்து விட்டு எனிதிங் எல்ஸ் சார்? என்றார். எல்லோரும் சிரித்து விட்டார்கள். ஒரு ஸ்ட்ரா கொடுத்திருந்தால் டேஸ்ட் பண்ண கேட்டிருப்போம். இனி மேல் கேட்கவே மாட்டோம் என்றார்கள்.

நான் முட்டுச் சந்தில் மொக்கை அடி வாங்கிய வடிவேலு மாதிரி விழி பிதுங்கி நின்றேன். நல்ல வேளை நான் பணம் கொடுக்க போவதில்லை. இல்லைன்னா உனக்கு டிப்ஸ் கட் என மனதுக்குள் நினைத்துக் கொண்டேன்.
அதற்க்கு அப்புறம் தான் மேலே சொன்ன சபதம் எல்லாம். ம்ம்ம்ம்... ஆண்டவன் ஆட்டுக்கு வாலை அளந்துதான் குடுக்கிறான்.

2 பேரு குத்தாட்டம் போட்டிருக்காங்க!:

said...

மொக்க ராசு கெலம்பிட்டான், இனி அவனை கைல பிடிக்க முடியாதுன்னு நெனைக்கிறேன !!!

மச்சி, படிக்கிறப்ப எல்லாம் நல்லா தான் இருந்தது. ஆனa, இது எல்லாமே உண்மை அப்படின்னு நெனைக்கிறப்பதான் .... ... !!!

என்னால கொஞ்சம் தாங்க முடியல. !!! நல்லா இர்ருடா , நல்ல்லா வே..வே.... இரு ;(((

Grrrrrrr ....... ;( ssshhhhhhh.

any way nice write up Udhay :)

-Siddarth

said...

aaagaaa ...
intha matter ... naamakku varavillaiya ...